Just In
- 14 min ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 1 hr ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 1 hr ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
Don't Miss!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
போடு... ஸ்கோடா கோடியாக் இந்த தினத்தில் தான் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதா!! பொங்கல் ஸ்பெஷல்
2022 ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்திய அறிமுகம் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றியும், இந்த புதிய ஸ்கோடா காரை பற்றியும் விரிவாக இனி செய்தியில் பார்ப்போம்.
சில வாரங்களுக்கு முன்பு தான் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் தயாரிப்பு பணிகளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கியது. அதேநேரத்தில் சில டீலர்ஷிப் மையங்களில் கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகளும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் துவங்கின.
இந்த நிலையில் தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, 2022 ஸ்கோடா கோடியாக் காரின் டெலிவிரிகள் ஜனவரி 14ஆம் தேதியில் இருந்தும், அதற்கு முன்னதாக ஜனவரி 10இல் இந்த கார் அறிமுகப்படுத்தப்படலாம் எனவும் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கோடியாக் கார்களின் விற்பனை நிறுத்தப்பட்டு கிட்டத்தட்ட 2 வருடங்களாகிவிட்டன. 2020 ஏப்ரலில் புதிய மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வந்த போது ஸ்கோடா கோடியாக் போன்ற விற்பனையில் சுமாரான டீசல் கார்களின் விற்பனை நிறுத்தி கொள்ளப்பட்டது.
செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் உலகளவில் முதல் தலைமுறை கோடியாக் மாடலுக்கு அதன் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் வகையில் குறிப்பிடத்தக்க தோற்ற மாற்றங்களுடன் அப்டேட்டை வழங்கி இருந்தது. இந்த மாடல் தான் விரைவில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனையை துவங்க உள்ளது. வழங்கப்பட்டுள்ள அப்டேட்களின்படி கோடியாக் காரின் முன்பக்கம் அப்டேட்டான க்ரில் பகுதி, புதிய வடிவமைப்பில் பொனெட், புதிய ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்-கள் உடன் ரீஸ்டைலில் ஹெட்லேம்ப்களை பெற்றுள்ளது.
இவற்றுடன் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்களாக, அகலமான மைய காற்று ஏற்பான் உடன் திருத்தியமைக்கப்பட்ட வடிவில் பம்பர் மற்றும் லிப் ஸ்பாய்லர் போன்றவற்றையும் கோடியாக் மாடலில் ஸ்கோடா வழங்கியுள்ளது. அதேபோல் பின்பக்கத்திலும் எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் பம்பரின் வடிவம் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் விசாலமான கேபினிற்காக நீண்ட பில்லர்களை கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் கார் தொடர்ந்துள்ளது.
பொருட்களை கட்டி வைக்கும் கம்பியுடன் மேற்கூரை சற்று சாய்வாக வழங்கப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டில் கருப்பு நிற பிளாஸ்டிங்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல் அலாய் சக்கரங்களின் டிசைனும் புதியது. ஆக மொத்தத்தில் முன்பு விற்பனையில் இருந்த கோடியாக்கின் வெளிப்புற தோற்றத்துடன் ஒப்பிடுகையில் புதிய கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் கார் முற்றிலும் புதியது. இந்திய சந்தையில் ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்படும் இந்த வேரியண்ட்டை சுற்றிலும் அதேநேரத்தில் க்ரோம் தொடுதல்களும் வழங்கப்படுகின்றன. உட்புறத்தில் கண்ட்ரோல்களுடன் புதிய ஸ்டேரிங் சக்கரம், ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு இணைப்பு உடன் இணைக்கக்கூடிய 8-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 3-நிலை ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பனோராமிக் சன்ரூஃப், 9 காற்றுப்பைகள், சுற்றிலும் விளக்குகள் போன்றவற்றை கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் கொண்டுள்ளது.
இயக்க ஆற்றலை வழங்குவதற்கு அப்டேட் செய்யப்பட்ட கோடியாக்கில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்தியாவிலும் கொடுக்கப்படும் என கூறப்படுகின்ற இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 190 பிஎஸ் மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.
இது என்ஜினின் ஆற்றலை அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கும். முன்பு கோடியாக்கில் வழங்கப்பட்ட 2.0 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது. இந்த 7-இருக்கை ஸ்கோடா காருக்கு விற்பனையில் போட்டியாக ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மற்றும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் கார்கள் சந்தையில் விற்பனையில் உள்ளன.
இதனை தொடர்ந்து சமீபத்தில் உலகளவில் வெளியீடு செய்யப்பட்ட ஸ்லாவியா செடான் மாடல் வருகிற 2022 மார்ச் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ராபிட் செடான் காருக்கு மாற்றாக கொண்டுவரப்படும் ஸ்லாவியா, ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் பிரீமியம் கார்கள் வரிசையில் ஆக்டேவியா மற்றும் சூப்பர்ப் மாடல்களுடன் இணையவுள்ளது.
ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சுஸுஇ சியாஸ் உள்ளிட்ட செடான் கார்களுக்கு போட்டியாக விளங்கவுள்ள ஸ்கோடா ஸ்லாவியாவின் ஆரம்ப இந்திய எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.10 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம். குஷாக் எஸ்யூவி காரை உருவாக்க பயன்படுத்தப்பட்ட எம்க்யூபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட உள்ள ஸ்லாவியா காரின் நீளம் 4,541மிமீ ஆகும்.
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!