Just In
- 25 min ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 2 hrs ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
Don't Miss!
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஜெர்மனியின் ஆதிக்கம்... இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் கம்பெனி எதுன்னு தெரியுமா?
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்த நிறுவனங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் நடப்பாண்டு அக்டோபர் மாதம் இந்திய சந்தையில் 1,001 கார்களை விற்பனை செய்துள்ளது.
ஆனால் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 916 மட்டுமே. இதன் மூலம் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பதும் ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம்தான். அது பிஎம்டபிள்யூ ஆகும்.
பிஎம்டபிள்யூ நிறுவனம் நடப்பாண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் 765 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை 631 ஆக இருந்தது. இந்த பட்டியலில் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இது இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் ஒரு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 174 கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை 163 ஆக இருந்தது. இந்த பட்டியலில் ஸ்வீடனை சேர்ந்த வால்வோ நிறுவனம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு அக்டோபரில் இந்நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை 153 ஆக இருந்தது.
ஆனால் அது நடப்பாண்டு அக்டோபரில் 120 ஆக சரிந்துள்ளது. இந்த பட்டியலில் ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. ஆடி நிறுவனம் நடப்பாண்டு அக்டோபரில் இந்திய சந்தையில் சிபியூ வழியில் 105 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் 7ஆக இருந்தது.
இந்த பட்டியலில் ஜெர்மனியை சேர்ந்த போர்ஷே நிறுவனம் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் போர்ஷே நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், நடப்பாண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை 25ஆக சற்றே உயர்ந்துள்ளது. இந்த பட்டியலில் இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி நிறுவனம் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.
லம்போர்கினி நிறுவனம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் வெறும் ஒரே ஒரு காரை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 4ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த பென்ட்லீ நிறுவனம் இந்த பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. பென்ட்லீ நிறுவனம் கடந்தாண்டு அக்டோபர் மாதத்தை போல், நடப்பாண்டு அக்டோபர் மாதமும் வெறும் 2 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
இந்த பட்டியலில் ஒன்பதாவது மற்றும் கடைசி இடத்தை இங்கிலாந்தை சேர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பிடித்துள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 காரை விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் கூட விற்பனையாகவில்லை. அந்த நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆகும்.
இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் சொகுசு கார்களின் பட்டியலில் ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி போன்ற நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். இங்கிலாந்தை சேர்ந்த சில நிறுவனங்கள் இருந்தாலும் அவற்றின் விற்பனை எண்ணிக்கை குறைவாக உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை தற்போது கார் உற்பத்தி மற்றும் விற்பனை சற்று மந்தமாக உள்ளது. செமி கண்டக்டர் சிப்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறைதான் இதற்கு காரணம். நவீன கார்களின் மூளை என வர்ணிக்கப்படும் செமி கண்டக்டர் சிப்களுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவுவதால் கார்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடிவதில்லை.
இதன் காரணமாக கார்களை முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் டெலிவரி பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதுடன், கார்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இந்த பிரச்னை தற்போது காணப்படுகிறது. இதனால் முன்னணி நிறுவனங்கள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!