Just In
- 5 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 5 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 7 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 8 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கார்களின் விலையை மீண்டும் உயர்த்த மஹிந்திரா திட்டம்
புத்தாண்டு பிறந்த உடன் முதல் வேலையாக கார்களின் விலையை உயர்த்திய மஹிந்திரா நிறுவனம் மீண்டும் கார்களின் விலையை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பிரச்னை காரணமாக, கார் விற்பனை பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. ஆனால், ஆண்டு இறுதியில் கார் விற்பனை மீண்டும் சூடுபிடித்ததால், கார் நிறுவனங்கள் சற்று நிம்மதி அடைந்தன.
அதேநேரத்தில், கார் விற்பனையில் எந்த பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, சிறப்புச் சலுகைகளை வழங்கியதுடன், கார் விலை உயர்வையும் 'தம்' கட்டி தவிர்த்து வந்தன. இந்த நிலையில், தற்போது கார் விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், கடந்த மாதம் தைரியமாக கார் விலை உயர்வை பெரும்பாலான நிறுவனங்கள் அறிவித்தன.
இதில், மஹிந்திரா நிறுவனமும்தனது பங்குக்கு கார் உள்ளிட்ட தனிநபர் பயன்பாட்டு வாகனங்களின் விலையை 1.9 சதவீதம் வரை உயர்த்தியது. இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக அமைந்தது.
மூலப்பொருட்கள் விலை உயர்வால், உற்பத்தி செலவீனம் அதிகரித்துள்ளதால், இந்த விலை உயர்வு தவிர்க்க முடியவில்லை என்று மஹிந்திரா தெரிவித்தது. இந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதம் துவங்க இருக்கும் அடுத்த நிதி ஆண்டு காலத்தின் முதல் காலாண்டில் மீண்டும் வாகனங்களின் விலையை உயர்த்தும் வாய்ப்பு இருப்பதாக மஹிந்திரா நிறுவனம் சூசகமாக தெரிவித்துள்ளது.
விலை வாசி மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக, வாகனங்கள் விலை அடுத்த ஓரிரு மாதங்களில் உயர்த்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வாடிக்கையாளர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பிரச்னை காரணமாக வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை மக்கள் சந்தித்ததால், கார் வாங்கும் ஆர்வம் குறைவாக இருந்தது.
ஆனால், தற்போது சூழல் மேம்பட்டு வருவதுடன், கொரோனா பிரச்னையில் இருந்து தப்புவதற்காக பலர் தனிநபர் வாகனங்களை வாங்கி பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில், அடுத்தடுத்த விலை உயர்வு என்பது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதுடன், ஆர்வத்தை குறைப்பதாகவும் அமைய வாய்ப்பு இருக்கிறது.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?