Just In
- 3 min ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 2 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 2 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- 4 hrs ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
Don't Miss!
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கவிட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மஹிந்திரா எஸ்யூவி கார்களின் விலை கணிசமாக உயர்வு!
மஹிந்திரா எஸ்யூவி ரக கார்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. புதிய தார் எஸ்யூவியின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களை வைத்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கார் விலையை உயர்த்துவது குறித்து தயாரிப்பு நிறுவனங்கள் பரிசீலிப்பது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு கொரோனா பிரச்னை காரணமாக, சந்தை சூழல் சரியில்லாத நிலையில் கார் விலை உயர்வை அனைத்து நிறுவனங்களும் தள்ளிப் போட்டு வந்தன.
இந்த நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் கார் விற்பனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்ததால், புத்தாண்டு முதல் விலையை உயர்த்துவதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் முடிவு செய்தன.
மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களை வைத்து, ஜனவரியில் கார் விலையை பல முன்னணி நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. அந்த வகையில், எஸ்யூவி தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா நிறுவனம் கார் விலையை உயர்த்துவதாக அறிவித்தது.
அதன்படி, தனது அனைத்து கார்களின் விலையையும் 1.9 சதவீதம் வரை உயர்த்தி இருக்கிறது மஹிந்திரா நிறுவனம். இதன்மூலமாக, மஹிந்திரா கார்களின் விலை ரூ.4,500 முதல் ரூ.40,000 வரை கார் மாடல்கள் மற்றும் வேரியண்ட்டுகளுக்கு தக்கவாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மஹிந்திரா கார்களின் விலை உயர்வும் நேற்றுமுதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், கடந்த டிசம்பர் 1 முதல் ஜனவரி 7 வரை புதிய தார் எஸ்யூவியை புக்கிங் செய்தவர்களுக்கும் புதிய விலை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து மஹிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரி வீஜே நக்ரா கூறுகையில்,"மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் உற்பத்தி செலவீனம் மிக கடுமையாக அதிகரித்துள்ளதையடுத்து, கார்களின் விலையை உயர்த்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
விலை உயர்வை தள்ளிப் போடுவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்தோம். ஆனால், தொடர்ந்து மூலப்பொருட்களின் விலை உயர்வு இருப்பதால், ஜனவரி 8, 2021 முதல் கார்களின் விலையை உயர்த்தி இருக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!