Just In
- 56 min ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 2 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- 8 hrs ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
- 8 hrs ago இத்தாலி நாட்டை சேர்ந்த டூ-வீலர் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கிய கேடிஎம்-இன் தாய் நிறுவனம்..
Don't Miss!
- Movies Vijay In Kerala - அய்யய்யோ இது என்ன விபரீதம்.. கேரளாவில் நொறுங்கிய விஜய்யின் கார்?.. ட்ரெண்டாகும் வீடியோ
- News தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு எப்போது? பள்ளி கல்வித்துறை சூப்பர் முடிவு
- Finance ஸ்மார்ட் போன் வாங்கப் போறீங்களா? ரூ.60,000க்கு கீழ் கிடைக்கும் உயர்ரக பிராண்டட் போன்கள்..
- Lifestyle இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
மஹிந்திரா எக்ஸ்யூவி500 அடிப்படையிலான ஃபோர்டு எஸ்யூவி வருவது உறுதியானது
மஹிந்திரா எக்ஸ்யூவி500 அடிப்படையிலான ஃபோர்டு நிறுவனத்தின் புதிய மிட்சைஸ் எஸ்யூவி உருவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்பது தெரிய வந்துள்ளது.
ஃபோர்டு இந்தியா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் இணைந்து புதிய கூட்டு நிறுவனத்தை உருவாக்க திட்டமிட்டன. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், இறுதி ஒப்பந்தம் செய்வதற்கு கடந்த 31ந் தேதி காலக்கெடு இருந்தது. ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை மஹிந்திரா கைவசப்படுத்த திட்டமிடப்பட்டது.
ஆனால், கொரோனா பிரச்னையால் எழுந்துள்ள பொருளாதார சவால்களை கருத்தில்கொண்டு, இரு நிறுவனங்களுக்கும் இணைந்து செயல்படுவதில் பல்வேறு தடங்கல்கள் உள்ளதாக கருதின. எனவே, கூட்டு நிறுவன உருவாக்க ஒப்பந்தத்தை கைவிடுவதாக இரு நிறுவனங்களும் அறிவித்தன.
மேலும், ஃபோர்டு இந்தியா நிறுவனம் தொடர்ந்து தனி நிறுவனமாக செயல்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி அடிப்படையில் புதிய ஃபோர்டு எஸ்யூவியின் உருவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.
ஃபோர்டு - மஹிந்திரா கூட்டு நிறுவன உடன்படிக்கை கைவிடப்பட்ட நிலையில், இந்த புதிய ஃபோர்டு எஸ்யூவி உருவாக்கம் குறித்து சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், இந்த புதிய ஃபோர்டு எஸ்யூவியின் உருவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்த புதிய ஃபோர்டு மிட்சைஸ் எஸ்யூவியின் உருவாக்கப் பணிகளுக்காக ஃபோர்டு மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் புராஜெக்ட் பிளாக் என்ற பெயரில் தனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச் மாதத்தில் புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில்தான் புதிய ஃபோர்டு எஸ்யூவி உருவாக்கப்பட்டு வருகிறது.
அடுத்த ஆண்டு துவக்கத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி அடிப்படையிலான புதிய ஃபோர்டு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள்தான் ஃபோர்டு எஸ்யூவியிலும் இடம்பெற்றிருக்கும். அதேநேரத்தில், ஃபோர்டு நிறுவனத்திற்கு உரிய பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டு வருகிறது.
குறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
-
கார் ஓட்டும்போது நிறைய பேரு இந்த தவறு பண்ணுறோம்!! வெளிநாடுகளில் இதுக்கு தடை இருக்கு...
-
டாடா பஞ்ச் காரை இப்படி வாங்கினால் ரூ1.13 லட்சம் மிச்சமாகும்! ஆனா ஒரே ஒரு கண்டிஷன் இருக்குது!
-
இனி தடுக்கி விழுந்தா கூட இவங்க ஷோரும்லதான் விழுகணும்! மாருதி, டாடாக்கு போட்டியா கடை திறக்க போறது அவங்களா!