Just In
- 53 min ago
எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்? வெளிவந்த நம்பும்படியான தகவல்...
- 1 hr ago
2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான்! குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!
- 2 hrs ago
நிஜ பாகுபலியா? வறுமையின் அடையாளமா? தலையில் பைக்கை சுமந்தபடி பஸ்ஸின் மீது ஏறிய தொழிலாளி... வீடியோ
- 2 hrs ago
வாடிக்கையாளர்களை கவர டைகன் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... போர்ஷே அதிரடியால் போட்டியாளர்கள் கலக்கம்
Don't Miss!
- News
தற்சார்பு பாரதம் தந்த கொரோனா தடுப்பூசி- அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Finance
'மேட் இன் அமெரிக்கா' ஜோ பிடன் கையெழுத்திடும் புதிய உத்தரவு..!
- Movies
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மஹிந்திரா எக்ஸ்யூவி500 அடிப்படையிலான ஃபோர்டு எஸ்யூவி வருவது உறுதியானது
மஹிந்திரா எக்ஸ்யூவி500 அடிப்படையிலான ஃபோர்டு நிறுவனத்தின் புதிய மிட்சைஸ் எஸ்யூவி உருவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்பது தெரிய வந்துள்ளது.

ஃபோர்டு இந்தியா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் இணைந்து புதிய கூட்டு நிறுவனத்தை உருவாக்க திட்டமிட்டன. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், இறுதி ஒப்பந்தம் செய்வதற்கு கடந்த 31ந் தேதி காலக்கெடு இருந்தது. ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை மஹிந்திரா கைவசப்படுத்த திட்டமிடப்பட்டது.

ஆனால், கொரோனா பிரச்னையால் எழுந்துள்ள பொருளாதார சவால்களை கருத்தில்கொண்டு, இரு நிறுவனங்களுக்கும் இணைந்து செயல்படுவதில் பல்வேறு தடங்கல்கள் உள்ளதாக கருதின. எனவே, கூட்டு நிறுவன உருவாக்க ஒப்பந்தத்தை கைவிடுவதாக இரு நிறுவனங்களும் அறிவித்தன.

மேலும், ஃபோர்டு இந்தியா நிறுவனம் தொடர்ந்து தனி நிறுவனமாக செயல்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி அடிப்படையில் புதிய ஃபோர்டு எஸ்யூவியின் உருவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.

ஃபோர்டு - மஹிந்திரா கூட்டு நிறுவன உடன்படிக்கை கைவிடப்பட்ட நிலையில், இந்த புதிய ஃபோர்டு எஸ்யூவி உருவாக்கம் குறித்து சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், இந்த புதிய ஃபோர்டு எஸ்யூவியின் உருவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்த புதிய ஃபோர்டு மிட்சைஸ் எஸ்யூவியின் உருவாக்கப் பணிகளுக்காக ஃபோர்டு மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் புராஜெக்ட் பிளாக் என்ற பெயரில் தனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மார்ச் மாதத்தில் புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில்தான் புதிய ஃபோர்டு எஸ்யூவி உருவாக்கப்பட்டு வருகிறது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி அடிப்படையிலான புதிய ஃபோர்டு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள்தான் ஃபோர்டு எஸ்யூவியிலும் இடம்பெற்றிருக்கும். அதேநேரத்தில், ஃபோர்டு நிறுவனத்திற்கு உரிய பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டு வருகிறது.
குறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.