Just In
- 53 min ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 2 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 7 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 7 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
Don't Miss!
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Movies அச்சச்சோ முதலில் அஜித் இல்லை சூர்யாதான்ங்க.. ஜோதிகா சொன்ன பல வருட சீக்ரெட்
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஆக்சிஜன் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி இலவசம்: மேப் மை இந்தியா சூப்பர் அறிவிப்பு!
ஆக்சிஜன் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவியை இலவசமாக வழங்குவதாக மேப் மை இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலமாக, ஆக்சிஜன் வாகனங்களை நிகழ்நேர முறையில் கண்காணிக்க வாய்ப்பு கிடைக்கும்.
நாடுமுழுவதும் பல இடங்களில் கொரொனா கோரத்தாண்டவம் ஆடி வருவதால், மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்று வருகிறது. குறிப்பாக, தீவிர சிகிச்சை பிரிவுகளில் ஆக்சிஜன் தேவை பன்மடங்கு அதிகரித்துவிட்டது.
இதனால், தேவைக்கும் உற்பத்திக்குமான விகிதத்தில் பெரும் வித்தியாசம் ஏற்பட்டுள்ளதால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் அவல நிலையும் காணப்படுகிறது.
ஆக்சிஜன் சப்ளையை சரிசெய்வதற்கான முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களும் இணைந்து தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இந்த நிலையில், ஆக்சிஜன் தேவை மிக அதிகமாக இருப்பதுடன், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சப்ளையை எதிர்பார்த்து நோயாளிகளும், உறவினர்களும் காத்துக் கிடக்கின்றனர்.
இந்த சூழலில், உயிர் காக்கும் ஆக்சிஜன் கொண்டு செல்லும் வாகனங்களின் நகர்வுகளை துல்லியமாக தெரிந்துகொள்ளும் வகையில், ஜிபிஎஸ் கருவிகளை இலவசமாக வழங்குவதாக மேப் மை இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த தகவலை மேப் மை இந்தியா நிறுவனத்தின் சிஇஓ ரோஹன் வர்மா சமூக வலைத்தளம் மூலமாக தெரிவித்துள்ளார். வாகனம் எங்கு இருக்கிறது, எவ்வளவு நேரத்தில் வந்தடையும் உள்ளிட்ட பல விபரங்களை நிகழ்நேர முறையில் கண்காணிப்பதற்கு இந்த ஜிபிஎஸ் கருவி உதவும். மருந்துவ உபகரங்கணங்கள் மற்றும் ஆக்சிஜன் வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பெறுவோர் இந்த கருவி பொருத்தப்பட்ட வாகனங்களை எளிதாக கண்காணிக்க முடியும்.
ஆக்சிஜன் வாகனங்களில் இந்த ஜிபிஎஸ் கருவியை பொருத்துவதற்கு வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மேலும், சில இடங்களில் ஆக்சிஜன் வாகனங்களை வழிமறிக்கும் நிலையும் உள்ளது. இந்த ஜிபிஎஸ் கருவி மூலமாக வாகனத்தின் இருப்பிடத்தை எளிதாக தெரிந்து கொள்வதற்கும், தாமதம் குறித்த தகவல்களை பெறுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும். இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து கூட அதிக அளவில் இந்த கருவியை பெறுவதற்கு பலர் தொடர்பு கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர்த்து, கொரோனா சோதனை மையங்கள், சிகிச்சை மையங்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் தடுப்பூசி செலுத்தப்படும் மையங்கள் குறித்த தகவல்களையும் தனது செயலியில் மேப் மை இந்தியா வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஊரே இந்த காரை வாங்க ஆசைப்படுது!இப்ப கையில பணம் இருந்தாலும் உடனே இதை வாங்க முடியாது!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!