Just In
- 17 min ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 56 min ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 1 hr ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 1 hr ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு நல்லா புரிய வைக்கிறேன்.. மோடிக்கு கார்கே கடிதம்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நம்ம ஊர் மாருதி எர்டிகா, டொயோட்டா பிராண்டில் தென்னாப்பிரிக்காவில் அறிமுகம்!! காரின் பெயர் என்ன தெரியுமா?
இந்தியாவில் விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி எர்டிகா காரின் அடிப்படையிலான டொயோட்டா ரூமியன் என்ற பெயரிலான எம்பிவி கார் தென் ஆப்பிரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரீபேட்ஜ்டு டொயோட்டா காரை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த சுஸுகி மற்றும் டொயோட்டா கார் தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டணியில் இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். இதன் விளைவாக இந்த இரு நிறுவனங்கள் தங்களது கார் வடிவமைப்பு திட்டங்களை வணிகம் செய்யும் நாட்டிற்கு ஏற்ப பகிர்ந்து கொள்கின்றன.
நம் இந்திய சந்தையில் கூட மாருதி சுஸுகியின் பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா கார்களின் அடிப்படையிலான டொயோட்டா க்ளான்ஸா ஹேட்ச்பேக் & அர்பன் க்ரூஸர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை தொடர்ந்து விரைவில் மாருதி சியாஸின் அடிப்படையிலான டொயோடா பெல்டா செடான் கார் விற்பனைக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதே பாணியில் தான் தற்போது டொயோட்டா ரூமியன் தென் ஆப்பிரிக்காவில் களமிறக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான தென் ஆப்பிரிக்காவில் டொயோட்டாவின் இந்த புதிய எம்பிவி மாடலுக்கு பலத்த எதிர்பார்ப்பு உருவானது என்பது அங்கிருந்த வரும் செய்திகள் மூலம் தெரிய வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தான் தற்போது டொயோட்டா ரூமியன் இந்த நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூமியன் பெயர் ஒன்றும் டொயோட்டா நிறுவனத்திற்கு புதியது கிடையாது. இதே பெயரில் முன்னர் காலத்தில் காரினை விற்பனை செய்துள்ளது. இந்த பெயரினை தற்போது மீண்டும் சுஸுகி-சார்ந்த காருக்காக டொயோட்டா உயிர்பித்துள்ளது.
சுஸுகியின் எர்டிகா உலகளவில் பிரபலமான எம்பிவி கார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் பல வெளிநாட்டு சந்தைகளில் எர்டிகாவிற்கு அதிகளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்தியா உள்பட சில நாட்டு சந்தைகளில் எர்டிகா என்ற பெயரிலேயே இந்த சுஸுகி எம்பிவி கார் விற்பனை செய்யப்படுகிறது.
தற்சமயம் உலகளவில் விற்பனையில் உள்ள தற்போதைய-தலைமுறை எர்டிகா கார் கடந்த 2018ஆம் ஆண்டில் இந்தோனிஷியாவில் வெளியீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அதே ஆண்டில் இந்திய சந்தையில் புதிய எர்டிகா அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட எர்டிகாவிற்கு விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் கடந்த ஆண்டு மத்தியில் அப்டேட் வழங்கப்பட்டது.
இந்தியாவில் சுஸுகியின் உதவியுடன் டொயோட்டா அறிமுகப்படுத்திய க்ளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் கார்களில் லோகோவை தவிர்த்து மற்றவை அனைத்தும் சுஸுகி நிறுவனத்துடையது. அதேபோன்று தான் தற்போது தென்னாப்பிரிக்காவில் களமிறக்கப்பட்டுள்ள ரூமியனிலும் பிராண்ட் லோகோவை தவிர்த்து பெரும்பான்மையான பாகங்கள் சுஸுகி எர்டிகாவில் இருந்தே பெறப்பட்டுள்ளது.
இவ்வளவு ஏன், என்ஜின் அமைப்பில் கூட மாற்றமில்லை. உலகளவில் எர்டிகாவில் வழங்கப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் டொயோட்டா ரூமியனிலும் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 105 எச்பி மற்றும் 138 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.
சுஸுகி எர்டிகாவை போன்று தென் ஆப்பிரிக்காவின் ரூமியனும் 3-வரிசைகளுடன் 8 இருக்கைகளை கொண்ட எம்பிவி காராகும். இந்தியாவில் தயாரிக்கப்படும் எர்டிகாவிற்கும், எம்பிவி கார்கள் பிரியர்களை அதிகளவில் கொண்ட இந்தோனிஷிய எர்டிகாவிற்கும் இடையே சில வேறுப்பாடுகள் உள்ளன.
தற்போது தென்னாப்பிரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ரூமியன் எர்டிகாவின் இந்திய வெர்சனை போன்று காட்சியளிக்கிறது. டொயோட்டாவிற்கு சுஸுகி வழங்கவுள்ள மாடல்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவையாக தான் இருக்கும் என்று சில வருடங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது தற்போது நினைவிற்கு வருகிறது.
மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இருப்பினும் எதிர்காலத்தில் டொயோட்டா ரூமியன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அடுத்ததாக இந்த வகையில் டொயோட்டா பெல்டா மாடலே முதலாவதாக விற்பனைக்கு வரவுள்ளது. சமீபத்தில் விற்பனை நிறுத்தப்பட்ட டொயோட்டா யாரிஸ் செடானின் இடத்தை நிரப்பும் பொருட்டு பெல்டா கொண்டுவரப்படுவது குறிப்பிடத்தக்கது.