Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
சொகுசு காராக மாறுகிறது புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500... வேற லெவலில் கெத்து காட்டப் போகிறது!
புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி வேற லெவல் அம்சங்களுடன் சொகுசு கார்களுக்கு இணையானதாக மாறி இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.
மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி இருந்து வருகிறது. ஆனால், கடந்த தசாப்தத்தை போல இந்த தசாப்தம் இல்லை. இந்த தசாப்தத்தின் துவக்கத்திலேயே மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், டாடா சஃபாரி என மிகச் சிறந்த தேர்வுகளுடன் கடும் போட்டி நிறைந்ததாக மாறி இருக்கிறது.
இதனை மனதில் வைத்து, எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் மதிப்பை உயர்த்துவதற்கான முயற்சிகளில் மஹிந்திரா ஈடுபட்டுள்ளது. இதற்காக, முற்றிலும் வேறுபட்ட அம்சங்களுடன் கூடிய புதிய தலைமுறை மாடலாக மஹிந்திரா எக்ஸ்யூவி500 மேம்படுத்தப்பட்டுள்ளது
கடந்த ஒரு தசாப்தமாக வாடிக்கையாளர்களை வசீகரித்து வந்த மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் இரண்டாம் தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் நிலை உள்ளது.
இந்த சூழலில், புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த தகவல்கள் ஸ்பை படங்கள் மூலமாக அவ்வப்போது வெளியாகி வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகிறது.
புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் Advanced Driver Assistance System (ADAS) தொழில்நுட்பம் வழங்கப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த தொழில்நுட்பம் மூலமாக ஓட்டுனரின் கண்களுக்கு புலப்படாத பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், பாதசாரிகள், விலங்குகள், தடைகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கையை பெற முடியும்.
அதேபோன்று, ஓட்டுனர் அயர்ந்து போவதை கண்டறிந்து எச்சரிக்கும் வசதியும் இருக்கும். மேலும், முன்னால், பின்னால் உள்ள வாகனங்களின் வேகத்தை கணித்து, அதற்கு ஏற்பவாறு காரை கட்டுப்படுத்துவதற்கான அடாவ்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தின் முக்கிய தொழில்நுட்பமாகவும் இது செயல்படும். நெடுஞ்சாலைகளில் தடம் மாறும்போது பின்னால் வரும் வாகனங்கள் குறித்த எச்சரிக்கையும் வழங்கும். முன்னால் செல்லும் வாகனத்துடன் மோதும் நிலை ஏற்பட்டால் தானியங்கி முறையில் பிரேக் பிடித்து நிறுத்தும் வசதியையும் வழங்கும்.
இதுதவிர்த்து, மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் வழங்கப்படுவது போன்று பெரிய மின்னணு திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்படுகிறது. இது காரின் மதிப்பை உயர்த்தும் மிக முக்கிய விஷயமாக இருக்கும்.
பனோரமிக் சன்ரூஃப், டைனமிக் டர்ன் இண்டிகேட்டர் விளக்குகள், அலங்கார மரத் தகடுகள் பதிக்கப்பட்ட இன்டீரியர் ஆகியவையும் மதிப்பை உயர்த்தும் விஷயங்களாக இருக்கின்றன. இந்த நிலையில், சொகுசு கார்களில் வழங்கப்படுவது போன்று சீட் மெமரி வசதியும் கொடுக்கப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.
அதாவது, ஓட்டுனர் பக்கத்தில் சீட் மெமரிக்கான கட்டுப்பாட்டு சுவிட்சுகள் இருப்பது காடிவாடி தளம் வெளியிட்டிருக்கும் ஸ்பை படம் மூலமாக தெரிய வந்துள்ளது. இந்த பொத்தான்களை வைத்து ஓட்டுனர் தனது இருக்கையை தனக்கு வசதியான வகையில் அமைத்துக் கொண்டு பதிவு செய்துவிட முடியும். அடுத்த முறை வேறு யாராவது, இருக்கை அமைப்பை மாற்றி இருந்தால் கூட, குறிப்பிட்ட எண்ணை பதிவு செய்தால், அதற்கு ஏற்ப இருக்கை அமைப்பு ஓட்டுனரின் விருப்பத்திற்கு தக்கவாறு தானியங்கி முறையில் மாறிவிடும். இது நிச்சயம் கவரக்கூடிய விஷயமாக இருக்கும்.
புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டி-ஜிடிஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் வரும் வாய்ப்பு இருக்கிறது.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!