Just In
- 2 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 3 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 5 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 11 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- News மெடிக்கல் ஷாப் போறீங்களா? இருமல் மருந்து வாங்கணுமா? இந்த 67 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஹைப்ரீட் தேர்வில் கொண்டுவரப்படும் Honda City செடான் கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?
Honda City ஹைப்ரீட் காரின் இந்திய அறிமுகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.
2020ஆம் ஆண்டின் பெரும்பான்மையான மாதங்கள் கொரோனா வைரஸில் கழிய, 2021ஆம் ஆண்டிலும் பாதி வருடம் வேகமாக கடந்துவிட்டது. தற்போதைய சூழலில் நாட்டில் பெட்ரோல் & டீசல் விலை உயர்வு முக்கிய பிரச்சனைகளுள் ஒன்றாக இருப்பதை மறுக்க இயலாது.
இதனை சமாளிக்க அரசாங்கமும் பழைய கார்கள் பயன்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் எதிரொலியாக எலக்ட்ரிக் வாகனங்களை பற்றிய பேச்சு அதிகரிக்க துவங்கியுள்ளது. எலக்ட்ரிக் வாகனம் தான் பலரது முடிவாக இருக்கிறதே தவிர்த்து, எரிபொருள் செலவை குறைக்கும் ஹைப்ரீட் வாகனங்களை பெரிதாக யாரும் கண்டு கொள்வதில்லை என்பது உண்மை நிலவரம்.
இதற்கு காரணம், தற்போதைக்கு சந்தையில் மலிவான விலையில் எந்தவொரு ஹைப்ரீட் காரும் விற்பனையில் இல்லாததே ஆகும். ஆனால் இந்த நிலை நீண்ட காலத்திற்கு இருக்க போவதில்லை. ஏனெனில் ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான Honda அதன் city செடான் காரின் ஹைப்ரீட் வெர்சனை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக Honda Cars India நிறுவனத்தின் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் துணை தலைவர் ராஜேஷ் கோயல் வாயிலாக நமக்கு தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, Honda City ஹைப்ரீட் கார் இந்திய சந்தையில் அடுத்த 2022ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தப்படலாம்.
அதாவது அடுத்த நிதியாண்டில் City ஹைப்ரீட் மாடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்தார். City செடானின் ஹைப்ரீட் வேரியண்ட்டை இந்த 2021ஆம் ஆண்டிற்குள் அறிமுகப்படுத்த Honda ஆரம்பத்தில் முடிவு செய்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவலினால் இந்த திட்டம் தாமதமாகியுள்ளது.
இதுவும் ஒரு விதத்தில் நல்லதுக்கு தான். ஏனென்றால் இந்திய சாலைக்கு ஏற்ப இந்த ஹைப்ரீட் செடான் காரை பல்வேறு அளவுருக்களுக்கு நன்கு இணக்கமானதாக வடிவமைக்க Honda பொறியியலாளருக்கு கூடுதல் நேரம் கிடைத்துள்ளது. மேலும் சோதனை ஓட்டங்களையும் எந்தவொரு அவசர அவசரமுமின்றி மேற்கொள்ளலாம்.
இதுவரை நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி பார்க்கும்போது, Honda City ஹைப்ரீட் காரில் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின், எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்படலாம். இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 97 பிஎச்பி மற்றும் 127 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
மற்ற ஹைப்ரீட் கார்களை போல் அல்லாமல் Honda City ஹைப்ரீட் மாடலில் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் ஒன்று ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டராகவும் (ISG), மற்றொன்று முன்சக்கரங்களுக்கு ஆற்றலை வழங்கக்கூடியதாகவும் இருக்கும்.
முன் சக்கரங்களுக்கு இந்த எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 108 எச்பி வரையிலான ஆற்றலை சிங்கிள்-ஸ்பீடு நிலையான கியர்பாக்ஸ் வாயிலாக வழங்குமாம். ஆதலால் City ஹைப்ரீட் காரில் 200எச்பி வரையிலான இயக்க ஆற்றலை எதிர்பார்க்கலாம்.
ஆனால் டாப்-ஸ்பீடை பெரிய அளவில் எதிர்பார்க்க முடியாது என்றாலும், அன்றாட பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்ற வாகனமாக இந்த Honda ஹைப்ரீட் கார் இருக்கும் என்பது மட்டும் உறுதி. இதற்கிடையில் 31XA என்ற குறியீட்டு பெயரில் இந்திய சந்தைக்கான நடுத்தர-அளவு எஸ்யூவி கார் ஒன்றினையும் Honda சார்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடுத்தர-அளவு எஸ்யூவி கார் பிரிவே மிகுந்த போட்டி மிகுந்ததாக உள்ளதால், Honda-வின் இந்த எஸ்யூவி கார் புதிய platform-த்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட உள்ளது. இதனால் இந்த எஸ்யூவி காரின் மூலம் இந்திய சந்தையில் தனது பங்கை அதிகப்படுத்த Honda தயாராகி வருகிறது.
தற்போதைக்கு இந்திய சந்தையில் Honda பயணிகள் கார்களை அதிகளவில் விற்பனை செய்யும் பிராண்டாக இல்லாவிடினும், இவ்வாறான, கவர்ச்சிகரமான புதிய தயாரிப்புகளினால் எதிர்காலத்தில் நம் நாட்டு சந்தையில் வலுவான இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
-
இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?