Just In
- 36 min ago பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- 1 hr ago ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- 2 hrs ago டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
- 2 hrs ago இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
Don't Miss!
- Technology அடிச்சு புடிச்சு ஆர்டர்.. ரூ.13,499 பட்ஜெட்ல 108MP கேமரா.. BYBASS சார்ஜிங்.. 2TB மெமரி.. எந்த மாடல்?
- Lifestyle திரிபலா பற்றி தெரியுமா? உங்கள் உடலுக்கும் அழகுக்கும் சிறந்த மூலிகை..!
- News ஆதி முதல் அந்தம் வரை.. உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கும்? மேஷ ராசியின் வாழ்நாள் ராசி பலன்
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Movies Actor Dhanush: தனுஷுடன் இணையும் பியார் பிரேமா காதல் பட இயக்குநர்.. உறுதியான கூட்டணி!
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஃபாஸ்டேக்கில் 'மினிமம் பேலன்ஸ்' தேவையில்லை... நிபந்தனையை கைவிட நெடுஞ்சாலை ஆணையம் முடிவு
சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கான ஃபாஸ்டேக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பு வைக்க வேண்டும் என்ற விதிமுறையை நீக்குவதற்கு மத்திய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.
சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்காக வரிசை கட்டும் நிலையை போக்குவதற்காக ஃபாஸ்டேக் எனப்படும் மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. ஃபாஸ்டேக் மூலமாக கட்டணம் செலுத்தும் நடைமுறை வரும் 15ந் தேதி முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது.
இந்த சூழலில், சுங்கச் சாவடிகளில் நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்கான நடைமுறைகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, ஃபாஸ்டேக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
அதாவது, இப்போது ஃபாஸ்டேக் வாங்கும் வாகன உரிமையாளர்கள், குறிப்பிட்ட தொகையை காப்புக் கட்டணமாக வேண்டியது அவசியம். அத்துடன் கூடுதலாக குறைந்தபட்ச இருப்பு தொகையும் வைக்க நிபந்தனை உள்ளது.
இதில், குறைந்தபட்ச தொகையை இருப்பு வைக்கும் நிபந்தனையின் மூலமாக, சில நடைமுறை சிக்கல் உள்ளது. அதாவது, இந்த இருப்பு தொகை இருந்தும், அவசரத்திற்காக செல்லும் வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணம் கணக்கில் இருந்து செலுத்த முடியாத நிலை உள்ளது.
இதனால், சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசலும், ஊழியர்களுக்கு தேவையற்ற பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனை கருத்தில்கொண்டு, கார், வேன், ஜீப் வைத்திருக்கும் வாகன உரிமையாளர்களின் ஃபாஸ்டேக் கணக்கில் கூடுதலாக பிடித்து வைக்கப்படும் குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கான நிபந்தனை விலக்கப்பட உள்ளது.
ஒருவேளை, கணக்கில் உரிய இருப்பு இல்லாமல் வாகனம் சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும்பட்சத்தில், அதற்குரிய தொகையை சம்பந்தப்பட்ட கணக்கு உள்ள வங்கிகள், காப்புக் கட்டணத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம்.
இதனால், இருப்பு இருக்கும் தொகையை கட்டணமாக செலுத்தும் வாய்ப்பு கிடைக்கும். இந்த புதிய தகவல் சுங்கச் சாவடிகளில் தேவையற்ற போக்குவரத்து தடங்கல்களை தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
-
குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!
-
திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு