Just In
- 3 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 3 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 4 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 8 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சென்னையில் மாஸாக தொடங்கியது ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் மாஸ் புரொடெக்ஸன்!
சென்னையில் ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ரெனால்ட் நிறுவனத்தின் புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரான கைகர், வரும் மார்ச் மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக இந்தியாவில் தற்போது ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் உற்பத்தி முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை ஒரகடம் பகுதியில் உள்ள ரெனால்ட்-நிஸான் ஆலையில் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் உற்பத்தி நடைபெறுகிறது. ரெனால்ட் நிறுவனத்தின் மற்ற பிரபலமான கார்களான க்விட், ட்ரைபர் மற்றும் நிஸான் நிறுவனத்தின் மேக்னைட் ஆகியவை இந்த ஆலையில்தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி ஏற்கனவே பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. அத்துடன் ரெனால்ட் நிறுவனத்தின் டீலர்களுக்கு கார்களை அனுப்பும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து விரைவில் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரில், 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. இதுதவிர இந்த காரின் விலை குறைந்த வேரியண்ட்களில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தேர்வு கொடுக்கப்படவுள்ளது.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 72 பிஎஸ் பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதுதவிர பல்வேறு வசதிகளும் ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவியில் வழங்கப்பட்டிருக்கும். இதில், வயர்லெஸ் சார்ஜிங், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்பிளே, க்ளைமேட் கண்ட்ரோல், 8 ஸ்பீக்கர் ஆடியோ, ஆம்பியண்ட் லைட்டிங், பிஎம் 2.5 ஏர் ஃபில்டர் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.
இதுதவிர ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரில், முழு எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி டெயில்லேம்ப்கள் வழங்கப்படவுள்ளன. பாதுகாப்பை பொறுத்தவரை, ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் போன்ற வசதிகள் இடம்பெறவுள்ளன. மிகவும் சவால் நிறைந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ரெனால்ட் கைகர் நிலைநிறுத்தப்படவுள்ளது.
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய கார்களுக்கு ரெனால்ட் கைகர் காம்பேட் எஸ்யூவி கார் விற்பனையில் கடுமையான சவாலை வழங்கவுள்ளது.
இதில், நிஸான் மேக்னைட் கடந்த டிசம்பர் மாதம்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சவாலான விலை நிர்ணயம் காரணமாக நிஸான் மேக்னைட் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதை பின்பற்றி ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரும் மிகவும் சவாலான விலையில் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?