Just In
- 52 min ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 1 hr ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 2 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 3 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- News விவாதத்தை கிளப்பும் கெஜ்ரிவால் கைது விவகாரம்? உள்ளே வரும் சர்வதேச நாடுகள்.. என்ன தான் நடக்கிறது!
- Movies Baakiyalakshmi: பளார்.. என்னா அடி.. ஜெனி காலில் விழுந்து சரணடைந்த செழியன்!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஆக்டேவியாவிற்கு இணையான தோற்றத்தில் உருவாகும் ஸ்கோடாவின் புதிய செடான்!! ரேபிட் நிறுத்தப்படுகிறதா?
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய நடுத்தர-அளவு செடான் கார் ஒன்று இந்தியாவில் சாலை சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
இந்திய சந்தையில் நடுத்தர-அளவு எஸ்யூவி காராக குஷாக் மாடலையும், நடுத்தர-அளவு செடான் கார் ஒன்றையும் அறிமுகப்படுத்தவுள்ளதாக செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அடுத்த ஒரு வருடத்திற்குள்ளாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ள இவற்றில் குஷாக் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து புதிய நடுத்தர-அளவு செடான் கார் கொண்டுவரப்பட உள்ளது.
இந்த நிலையில், ஸ்கோடாவின் செடான் கார் ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. புனேவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டம் தொடர்பான ஸ்பை படங்கள் டீம் பிஎச்பி செய்திதளம் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன.
ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் உள்ளிட்டவற்றுக்கு போட்டியாக கொண்டுவரப்படவுள்ள இந்த செடான் கார் தற்போதைக்கு ஏஎன்பி என்ற குறியீட்டு பெயரால் குறிக்கப்பட்டு வருகிறது.
ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பின் எம்க்யுபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த புதிய செடான் கார் ஸ்கோடாவின் அடையாள க்ரில், ஹலோஜன் ஹெட்லேம்ப்கள் மற்றும் ஃபாக் விளக்குகளை பெற்றுவரவுள்ளதை இந்த ஸ்பை படங்கள் வெளிக்காட்டுகின்றன.
புதிய ஸ்கோடா ஆக்டேவியாவை போன்று இதன் பின்பக்கமும் நோட்ச்பேக் ஸ்டைலில் உள்ளது. அதாவது மேற்கூரை பகுதி கூர்மையான எட்ஜ்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடுத்தர-அளவு செடான் காரின் உட்புறம் கிட்டத்தட்ட விரைவில் அறிமுகமாகும் குஷாக் எஸ்யூவி காரை ஒத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கோடாவின் ரேபிட் செடானிற்கு மாற்றாக இந்த புதிய செடான் கார் கொண்டுவரப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் அதேவேளையில் ஹோண்டா சிட்டி கார்களை போன்று இந்த செடான் காரும் ரேபிட் உடன் விற்பனை செய்யப்படலாம்.
புதிய ஸ்கோடா ஏஎன்பி செடான் கார் இரு என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் ஒன்றாக அதிகப்பட்சமாக 113 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.
மற்றொரு 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 147 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இவை இரண்டுடனும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளாக வழங்கப்பட உள்ளன.
இதற்கு மத்தியில் புதிய 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உடன் புதிய ஆக்டேவியா காரும் ஸ்கோடா பிராண்டில் இருந்து வெளிவரவுள்ளது. அதேநேரம் கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரையும் இந்தியாவிற்கு கொண்டுவர இந்த நிறுவனம் தயாராகி வருகிறது.
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!
-
இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!
-
இவ்ளோ முரட்டு தனமான காருக்கா டொயோட்டா உரிமம் வாங்கியிருக்கு! பக்கத்து வீட்டுகாரர்களையும் சேத்து கூட்டி போகலாம்