Just In
- 13 min ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 1 hr ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 2 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 3 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
Don't Miss!
- News தோளை தொட்ட சு.வெங்கடேசன்.. டக்னு திரும்பிய டாக்டர் சரவணன்.. பூரித்த மதுரை.. சபாஷ், இது போதுமே நமக்கு
- Movies Pandian stores 2: இப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிடனும் போல இருக்கு.. சரவணன் சொன்ன விஷயம்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய அறிமுக விபரம்!
ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி இருந்து வந்தது. இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, இந்த எஸ்யூவியின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், பிஎஸ்-6 எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபேஸ்லிஃப்ட் மாடலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த எஸ்யூவி நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டு காலத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று ஸ்கோடா இந்தியா நிர்வாக இயக்குனர் ஸாக் ஹொல்லிஸ் தெரிவித்துள்ளார்.
தோற்றத்தில் கூடுதல் பொலிவுடன் இந்த எஸ்யூவி வர இருக்கிறது. புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் மற்றும் டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் இடம்பெற்றிருக்கும். க்ரில் அமைப்பு மற்றும் பம்பர் அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும். அதேநேரத்தில், ஒட்டுமொத்த தோற்றத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது.
இந்த புதிய மாடலில் பெரிய தொடுதிரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயெின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றிருக்கிறது.
பனோரமிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் முன் இருக்கைகள், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், வாய்ஸ் அசிஸ்டென்ஸ் உள்ளிட்ட வசதிகளும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கும்.
இந்த காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு கொடுக்கப்படும் என தெரிகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 188 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 வீல் டிரைவ் சிஸ்டமும் இடம்பெற்றிக்கும்.
புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்போது, டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, எம்ஜி க்ளோஸ்ட்டர் ஆகிய எஸ்யூவிகளுடன் போட்டி போடும்.