Just In
- 27 min ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 5 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 5 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 6 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
குஷாக் எஸ்யூவி காரின் மீது இவ்வளவு நம்பிக்கையா!! 2022ல் கார்களின் விற்பனையை 60,000ஆக உயர்த்துவோம் - ஸ்கோடா!
இந்தியாவில் அடுத்த 2022ஆம் ஆண்டில் கார்களின் விற்பனையை 60,000ஆக அதிகரிக்க அனைத்து விதங்களிலும் தயாராகி வருவதாக ஸ்கோடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
செக் குடியரசு நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த வாரத்தில் குஷாக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியது.
ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் என மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ள இதன் ஆரம்ப விலை ரூ. 10.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக ரூ.17.59 லட்சம் வரையில் குஷாக்கின் விலைகள் உள்ளன.
இந்த விலைகள் சற்று அதிகம் என்றாலும் இந்த ‘முதல்-இந்தியா-தயாரிப்பு' க்ராஸ்ஓவரின் மீது மிகுந்த நம்பிக்கையை ஸ்கோடா வைத்துள்ளது. இந்த நிலையில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் ஸாக் ஹோலிஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், நடப்பு 2021ஆம் நிதி ஆண்டிற்குள் 30,000 கார்களை விற்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை ஸ்கோடா இந்தியா நிறுவனம் கடந்த ஆண்டில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் சுமார் மூன்று மடங்கு அதிகமாகும்.
மேலும் இந்த எண்ணிக்கையை அடுத்த 2022ஆம் நிதியாண்டில் இரட்டிப்பாக்க, அதாவது 60,000 யூனிட்களாக அதிகரிக்க பணியாற்றி வருவதாக ஹோலிஸ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதற்கு ஸ்கோடாவின் சமீபத்திய அறிமுகங்களான குஷாக் மற்றும் புதிய ஆக்டேவியா முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி தற்சமயம் விற்பனையில் உள்ள ராபிட் செடான் காருக்கு மாற்றாக, விரைவில் ஸ்கோடா பிராண்டில் இருந்து அறிமுகமாகவுள்ள செடான் காரின் மீதும் ஸ்கோடா இந்தியா நிறுவனம் நம்பிக்கை வைத்துள்ளது.
எம்க்யுபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் இந்த செடான் கார் 2021ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. இந்த செடான் காரின் வருகையை பல முறை சிஇஓ தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
கிட்டத்தட்ட 10 வருடங்களாக ஸ்கோடா ராபிட் கார் இந்தியாவில் விற்பனையில் இருந்து வருகிறது. சந்தையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் போட்டியினை சமாளிக்க வேண்டுமென்றால் இத்தகைய அதிரடி மாற்றங்களை கொண்டுவர வேண்டியது கட்டாயமாகும்.
இருப்பினும் எத்தகைய செடான் கார் இந்திய சந்தைக்கு வரவுள்ளது என்பது தற்போதைக்கு தெரியவில்லை. இதன் சோதனை ஓட்ட ஸ்பை படங்களை வைத்து பார்க்கும்போது, ஸ்கோடாவின் புதிய செடான் பரிமாண அளவுகளில் ராபிட்டை காட்டிலும் பெரியதாக கொண்டுவரப்படவுள்ளது.