Just In
- 13 min ago காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- 43 min ago 35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
- 2 hrs ago ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- 2 hrs ago 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
Don't Miss!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Movies Actor Dhanush: எஸ்ஜே சூர்யா கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.. ராயன் அப்டேட் இதோ!
- News நாங்க அப்பவே சொன்னோமே.. இவிஎம் பட்டனை தொட்டாலே பாஜகவுக்கு விழும் 2 ஓட்டு! காங்கிரஸ் புது டிமாண்ட்
- Finance Infosys: லாபத்தில் 30% உயர்வு, முதலீட்டாளர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ரூ.28 ஈவுத்தொகை..!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்திய டாடா பஞ்ச் vs ஐரோப்பிய டொயோட்டா அய்கோ எக்ஸ்!! சிறந்த மைக்ரோ-எஸ்யூவி கார் எது?
எஸ்யூவி கார்களின் பயன்பாடு கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளன. கிட்டத்தட்ட இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் சாலைகளை இவை தான் ஆக்கிரமித்துள்ளன. அளவில் பெரியதாக முழு-அளவு எஸ்யூவி, நடுத்தர-அளவு எஸ்யூவிகள் விற்பனையில் இருக்கும் நிலையில், மக்கள் குறைந்தது அளவில்-சிறிய காம்பெக்ட் எஸ்யூவிகளையாவது வாங்க விருப்பப்படுகின்றனர்.
அதேநேரம் தற்போது மைக்ரோ-எஸ்யூவிகளுக்கான சந்தையும் விரிவடைந்து வருகிறது. முன்பு இந்திய சந்தையில் மைக்ரோ எஸ்யூவிகளாக மாருதி சுஸுகி இக்னிஸ் மற்றும் மஹிந்திரா கேயூவி100 உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வந்தன. இவற்றுடன் கடந்த அக்டோபரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பஞ்ச் மாடலை புதிய மைக்ரோ-எஸ்யூவி காராக இணைத்தது.
இதற்கிடையில் ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் அய்கோ எக்ஸ் மாடலை அறிமுகப்படுத்தியது. ஐரோப்பாவில் அடுத்த 2022ஆம் ஆண்டில் விற்பனைக்குவரும் என எதிர்பார்க்கப்படும் இந்த டொயோட்டா மைக்ரோ எஸ்யூவி காருக்கும், டாடா பஞ்ச்சிற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
பரிமாண அளவுகள்
டாடா நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி மற்றும் ஹெரியர் கார்களில் இருந்து சில பாகங்களை பெற்றுள்ளதால் டாடா பஞ்ச் கிட்டத்தட்ட பார்ப்பதற்கு மினி ஹெரியர் போல் சிலருக்கு தோன்றலாம். இந்த விஷயத்தில், இந்த டாடா தயாரிப்பினை ஐரோப்பாவிற்கான டொயோட்டாவின் அய்கோ எக்ஸ் உடன் ஒப்பிடுகையில், பஞ்ச் அதிக க்ரவுண்ட் க்ளியரென்ஸை பெற்றுள்ளது. ஐரோப்பிய சாலைகளுக்காக அய்கோ எக்ஸ் காருக்கு குறைவான க்ரவுண்ட் க்ளியரென்ஸ் வழங்கப்பட்டிருக்கலாம்.
நீளம், அகலம் மற்றும் உயரத்தில் டாடா பஞ்ச் குறிப்பிடத்தக்க அளவில் பெரியதாக காட்சியளிக்கிறது. இதனால் வீல்பேஸ் எனப்படும் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் பஞ்ச் மாடலில் அதிகமாக உள்ளது. மேலும் உட்புறத்திலும் இந்த டாடா காரில் அதிக இடவசதியை எதிர்பார்க்கலாம். ஆனால் உண்மையில், இந்தியாவிற்கான அய்கோ எக்ஸ்-இன் பரிமாண அளவுகளை டொயோட்டா சற்று திருத்தியமைக்கலாம்.
உட்புற கேபின்
டொயோட்டா அய்கோ எக்ஸ், டாடா பஞ்ச் அளவிற்கு பெரிய கேபினை கொண்டில்லை என்றாலும், தற்காலத்திற்கு ஏற்ற மாடர்ன் எஸ்யூவி கார் என்பதில் எந்த விதத்திலும் சந்தேகமில்லை. இந்த டொயோட்டா மைக்ரோ-எஸ்யூவி காரின் உட்புற டேஸ்போர்டில் 9-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமானது ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே வசதி உடன் வழங்கப்பட்டுள்ளது.
இதே இணைப்பு வசதிகளுடன் பஞ்ச் காரில் 7-இன்ச்சில் தொடுத்திரை வழங்கப்படுகிறது. மேலும் இந்த காரில் ரூ.30,000இல் பிராண்டின் iRA இணைப்பு தொழிற்நுட்பத்தையும் பிரத்யேகமாக டாடா வழங்குகிறது. டாடாவின் iRA மூலம் ஸ்மார்ட்போன் இணைப்பு, ஜியோ-ஃபென்சிங் மற்றும் சில ரிமோட் வசதிகளை பெற முடியும்.
பாதுகாப்பு வசதிகள்
அய்கோ எக்ஸ் காரில் மிக முக்கிய அம்சமாக உள்ளிழுக்கக்கூடிய கேன்வாஸ் மேற்கூரையை டொயோட்டா வழங்கியுள்ளது. மறுப்பக்கம் பஞ்ச் மாடலில், இந்திய சாலைக்கு ஏற்ற டிராக்ஷன் ப்ரோ மோட் கொண்டுவரப்பட்டுள்ளது. அய்கோ எக்ஸ் காரில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களாக, தானியங்கி அவசரகால பிரேக்கிங், பாதசாரிகளை அடையாளம் காணும் வசதி & அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.
இதில் சில வசதிகள் அய்கோ எக்ஸ்-இன் இந்திய வெர்சனில் நீக்கப்படலாம். டாடா பஞ்ச்சை பொறுத்தவரையில், இந்த டாடா தயாரிப்பு உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனையில் முழு ஐந்து நட்சத்திரங்களை பெற்று நம்மையும், நம் இந்திய தயாரிப்புகளையும் பெருமையடைய செய்துள்ளது. இதனால் பஞ்ச் காரில் பாதுகாப்பு குறித்து எந்த கவலையும் வேண்டாம்.
என்ஜின்
டாடா பஞ்ச்சில் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதுவே டொயோட்டா அய்கோ எக்ஸ் மைக்ரோ-எஸ்யூவி மாடலில் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இவை இரண்டிலும் தற்போதைக்கு பெட்ரோல் என்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகளை பொறுத்தவரையில் அய்கோ எக்ஸ் காரில் சில குதிரையாற்றல்கள் குறைந்துள்ளன. ஆனால் டொயோட்டா அய்கோ எக்ஸ் காரின் 1 KR-FE என்ஜின் ஆனது ஐரோப்பிய மாசு உமிழ்வு விதிமுறைக்களுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பஞ்ச் மாடலை காட்டிலும் ஐரோப்பாவில் விற்பனைக்குவரும் இந்த டொயோட்டா கார் செயல்திறன்மிக்கதாக விளங்கலாம்.
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
-
35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!
-
உடனே திருப்பி கொண்டு வாங்க! பிரபல நிறுவனம் திடீர் அறிவிப்பு! விலை கம்மினு வாங்கீட்டு புலம்பும் உரிமையாளர்கள்!