Just In
- 2 min ago ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- 2 hrs ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 7 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 7 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
Don't Miss!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
விற்பனையில் டொயோட்டாவை தூக்கி நிறுத்தும் ஃபார்ச்சூனர்!! மொத்த விற்பனை 92% அதிகரிப்பு!
2021ஆம் ஆண்டின் துவக்க ஜனவரி மாதத்தில் இந்திய சந்தையில் விற்பனையில் சுமார் 92 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
2021 ஜனவரி மாதத்தில் மொத்தம் 11,126 கார்களை இந்தியாவில் ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 2020 ஜனவரி மாதத்தை காட்டிலும் 5,804 அதிகமாகும்.
டொயோட்டா நிறுவனம் ஜப்பானை சேர்ந்த மற்றொரு நிறுவனமான சுஸுகி உடன் கூட்டணியில் உள்ளது. கூட்டணி நிறுவனத்தின் உதவியுடன் க்ளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் காம்பெக்ட் எஸ்யூவி கார்களை டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
க்ளான்ஸா மாருதி சுஸுகியின் பலேனோவின் அடிப்படையிலும், அர்பன் க்ரூஸர் பிரபலமான விட்டாரா பிரெஸ்ஸாவின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்ட டொயோட்டா கார்களாகும். இவை இரண்டும் ஒவ்வொரு மாதத்திலும் கணிசமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை பெற்று வருகின்றன.
மேற்கூறப்பட்ட கடந்த ஜனவரி மாத டொயோட்டாவின் விற்பனை எண்ணிக்கையில் க்ளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் கார்களின் விற்பனை எண்ணிக்கையும் அடங்குகின்றன. மேலும் சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியில் இதுவரையில் மட்டுமே 50,000 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளதாகவும் டொயோட்டா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உண்மையில் இந்திய சந்தையில் டொயோட்டாவின் விற்பனைக்கு மூல ஆதாரமாக விளங்குபவை என்றால் அவை இன்னோவா க்ரிஸ்டாவும் ஃபார்ச்சூனரும் தான். சமீபத்தில் அப்கிரேட் செய்யப்பட்ட இவை இரண்டின் விற்பனையும் முன்பதிவும் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது.
இந்தியாவில் விற்பனையில் 92 சதவீதம் வளர்ச்சியை கண்டிருப்பது குறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் முதன்மை துணை தலைவர் நவீன் சோனி கருத்து தெரிவிக்கையில், புதிய ஆண்டு எங்களுக்கு ஒரு நேர்மறையான குறிப்புடன் தொடங்கியுள்ளது. எங்கள் விற்பனை வளர்ச்சி அதற்கு சான்றாக உள்ளது.
எங்களது மொத்த விற்பனை மிகவும் ஊக்கமளிக்கிறது மற்றும் முன்பதிவு ஆர்டர்களும் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளன. கூடுதலான ஸ்டைல், சவுகரியம் மற்றும் செயல்திறனை எதிர்பார்க்கும் எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக புத்தாண்டில் புதிய பார்ச்சூனர் மற்றும் லெஜெண்டரை நாங்கள் அறிமுகப்படுத்தினோம்.
இரண்டு மாடல்களுக்கும் மிகப்பெரிய வாடிக்கையாளர் பட்டாளம் சேர்ந்து வருகிறது. இது பார்ச்சூனரின் மீதான தொடர்ச்சியான நம்பிக்கையை காட்டுகிறது. ஃபார்ச்சூனர் அறிமுகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் ஆனாலும் பிரிவில் இதுதான் முதன்மையான மாடலாக இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இன்னோவா க்ரிஸ்டாவிற்கும் நல்லப்படியான வரவேற்பே கிடைத்து வருகிறது என கூறிய அவர், சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியினால் புதிய புதிய வாடிக்கையாளர்கள் டொயோட்டாவிற்கு கிடைத்து வருவதாகவும் தெரிவித்தார்.
-
கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!