Just In
- 9 hrs ago
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- 12 hrs ago
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
- 12 hrs ago
25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...
- 14 hrs ago
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 17.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் கொடுக்கல் வாங்கலைத் தவிர்க்கவும்…
- News
ஜெட் வேகத்தில் கொரோனா.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொற்று உறுதி!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Movies
எல்லா விஷயமும் பேசலாம்… புதிய யூட்யூப் சேனலை தொடங்கிய ரேகா !
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டொயோட்டா ஆர்ஏவி-4 எஸ்யூவி இந்தியாவில் சோதனை... விரைவில் அறிமுகமாகிறது?
டொயோட்டா ஆர்ஏவி-4 எஸ்யூவி இந்தியாவில் வைத்து ரகசியமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய டொயோட்டா எஸ்யூவி விரைவில் அறிமுகம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பும் ஏகத்துக்கும் பற்றிக் கொண்டுள்ளது.

இந்தியாவில் எஸ்யூவி கார்கள் இல்லாமல் காலத்தை ஓட்ட முடியாது என்ற நிலைக்கு கார் நிறுவனங்கள் தள்ளப்பட்டுவிட்டன. இதனால், எஸ்யூவி மாடல்களை வரிசை கட்டுவதற்கான திட்டங்களை அனைத்து கார் நிறுவனங்களும் துரிதப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், டொயோட்டா கார் நிறுவனமும் எஸ்யூவி கார் சந்தையில் புதிய மாடல்களை கொண்டு வருவதற்கான முனைப்பில் இறங்கி இருக்கிறது. வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள டொயோட்டா நிறுவனத்தின் ஆர்ஏவி-4 எஸ்யூவி இந்தியாவில் வைத்து சோதனை செய்யப்படுவது தெரிய வந்துள்ளது.

அடையாளத்தை மறைக்காமல் இந்திய சாலைகளில் வலம் வந்த இந்த எஸ்யூவியை ஆயுஷ் நிம்கர் எந்பவர் படம் பிடித்து பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த எஸ்யூவி பிரிமீயம் மிட்சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. அதாவது, டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியைவிட விலை குறைவான மாடலாக வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், இந்த மாடலை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்ய டொயோட்டா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால், இதன் விலை டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியைவிட அதிகமாக நிர்ணயிக்கும் நிலை ஏற்படலாம்.

அதாவது, ரூ.50 லட்சம் விலையில் இந்த புதிய எஸ்யூவி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு மத்தியில் புதிய டொயோட்டா ஆர்ஏவி-4 எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

டொயோட்டா ஆர்ஏவி-4 எஸ்யூவியில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் கொண்ட ஹைப்ரிட் மாடலாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் அதிகபட்சமாக 219 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். சிவிடி கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

புதிய டொயோட்டா ஆர்ஏவி-4 எஸ்யூவியில் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் இருக்கைகள், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், கீ லெஸ் என்ட்ரி ஆகிய வசதிகள் இடம்பெற்றிருக்கும். தவிரவும், லேன் டிபார்ச்சர் வார்னிங் சிஸ்டம், ஹை பீம் அசிஸ்ட், ஆக்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் ஆகிய வசதிகள் உள்ளன.