Just In
- 7 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 8 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 9 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 10 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- News
அமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மத்திய பட்ஜெட்: ஆட்டோமொபைல் துறைக்கான சாதகங்களும், பாதகங்களும்
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சில முக்கிய விஷயங்களால், ஆட்டோமொபைல் துறைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் சில முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறைக்கான சில முக்கிய அறிவிப்புகளும் வெளியாகி இருக்கிறது.

அதில், பழைய வாகனங்களை அழிப்பதற்கான கொள்கை முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக, விபத்து அபாயம் மற்றும் மாசு உமிழ்வு பிரச்னையை ஏற்படுத்தும் 20 ஆண்டுகள் பழமையான தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான வர்த்தக வாகனங்கள் தகுதிச் சோதனை முடிவுகளின்படி அழிக்கப்படும்.

மேலும், புதிய வாகனங்கள் வாங்கும் உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதால், விற்பனை வெகுவாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்த விரிவான விபரம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்து இந்தியாவில் அசெம்பிள் செய்து கார் விற்பனை செய்கின்றன.

அந்த வகையில் இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில முக்கிய கார் உதிரிபாகங்கள் மீது 15 சதவீதம் வரை சுங்க வரி விதிக்கப்பட உள்ளது. இதனால், இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனையாகும் கார்களின் விலை உயர்வதற்கு வழி வகுத்துள்ளது. குறிப்பாக, பல சொகுசு கார் மாடல்கள் இந்த முறையிலேயே இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதால், விலை சற்று அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில், வாகன தயாரிப்புக்கு பயன்படும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் உருக்கு போன்றவற்றிற்கு சுங்க வரி 7.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி செலவீனம் குறைவதற்கான வாய்ப்பை வழங்கும். இதனால், கார் விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.