Just In
- 25 min ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 29 min ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 1 hr ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 3 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மத்திய பட்ஜெட்: ஆட்டோமொபைல் துறைக்கான சாதகங்களும், பாதகங்களும்
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சில முக்கிய விஷயங்களால், ஆட்டோமொபைல் துறைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் சில முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறைக்கான சில முக்கிய அறிவிப்புகளும் வெளியாகி இருக்கிறது.
அதில், பழைய வாகனங்களை அழிப்பதற்கான கொள்கை முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக, விபத்து அபாயம் மற்றும் மாசு உமிழ்வு பிரச்னையை ஏற்படுத்தும் 20 ஆண்டுகள் பழமையான தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான வர்த்தக வாகனங்கள் தகுதிச் சோதனை முடிவுகளின்படி அழிக்கப்படும்.
மேலும், புதிய வாகனங்கள் வாங்கும் உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதால், விற்பனை வெகுவாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்த விரிவான விபரம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்து இந்தியாவில் அசெம்பிள் செய்து கார் விற்பனை செய்கின்றன.
அந்த வகையில் இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில முக்கிய கார் உதிரிபாகங்கள் மீது 15 சதவீதம் வரை சுங்க வரி விதிக்கப்பட உள்ளது. இதனால், இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனையாகும் கார்களின் விலை உயர்வதற்கு வழி வகுத்துள்ளது. குறிப்பாக, பல சொகுசு கார் மாடல்கள் இந்த முறையிலேயே இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதால், விலை சற்று அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேநேரத்தில், வாகன தயாரிப்புக்கு பயன்படும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் உருக்கு போன்றவற்றிற்கு சுங்க வரி 7.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி செலவீனம் குறைவதற்கான வாய்ப்பை வழங்கும். இதனால், கார் விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
-
பொண்ணு ஆசைப்பட்டதற்காக 3 கோடி ரூபாய் காரை பரிசளித்த அப்பா! இதுக்கு முன்னாடி யாருமே இந்த காரை வாங்குனது இல்ல!
-
சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு