Just In
- 1 hr ago
இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!
- 1 hr ago
நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
- 2 hrs ago
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- 2 hrs ago
மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!
Don't Miss!
- Movies
உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்வளவு பெரிய மகனா.. தோள்மேல கையப்போட்டு ஜம்முன்னு நிக்கிறாங்களே!
- News
"மனித உடல்கள்".. எந்த ஊர்னே தெரியல.. வரிசையாக அடுக்கி வச்சு.. பெட்ரோலை ஊற்றி.. எரியும் சடலங்கள்..!
- Finance
கையை நீட்டினால் போதும்.. அமேசானின் புதிய பேமெண்ட் முறை..!
- Lifestyle
சமையலுக்கு பயன்படுத்தும் இந்த பருப்பு வகைகள் நம்மை கொரோனாவிலிருந்து பாதுகாக்குமாம் தெரியுமா?
- Education
ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் NIT-யில் பேராசிரியர் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Sports
ஹர்பஜன் காலில் விழுந்த சுரேஷ் ரெய்னா. களத்திலேயே நடந்த சம்பவம்.. சக வீரர்கள் திகைப்பு..காரணம் என்ன?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மோட்டார் வாகன ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் மீண்டும் நீட்டிப்பு!
கொரோனா அதிகரித்து வரும் இந்த நேரத்தில், வாகன உரிமையாளர்கள் நலன் கருதி, மோட்டார் வாகன ஆவணங்கள் செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு மீண்டும் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா பிரச்னை காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் தேசிய அளவில் ஊரடங்கு போடப்பட்டது. இதனால், அரசு அலுவலங்களின் பணிகள் முடங்கின. இதனை மனதில் வைத்து பல்வேறு சேவைகளுக்கும், ஆவணங்களை புதுப்பிப்பது உள்ளிட்டவற்றிற்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

அந்த வகையில், வாகன உரிமையாளர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் நலன் கருதி, மோட்டார் வாகன ஆவணங்களுக்கு தொடர்ந்து தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், டிரைவிங் லைசென்ஸ், பதிவுச் சான்று புதுப்பிப்பு உள்ளிட்டவற்றிற்கும் கால அவகாசம் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் மோட்டார் வாகனங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் மார்ச் 31ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், அதன்படி, வரும் 31ந் தேதிக்குள் காலாவாதியாகும் மோட்டார் வாகன ஆவணங்களை வரும் ஜூன் 30ந் தேதிக்குள் புதுப்பிப்பதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால், வாகன ஓட்டிகளும், உரிமையாளர்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவும் அச்சம் தொடர்ந்து நிலவி வருவதால், அரசு அலுவலகங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக இந்த கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்டம் 1988 மற்றும் 1989 ஆகிய பிரிவுகளில் அடங்கும் மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கு இந்த கால அவகாசம் பொருந்தும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.