Just In
- 14 min ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 33 min ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 56 min ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 1 hr ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
Don't Miss!
- Movies படம் பார்க்க வரச் சொல்றாரு ஹரி.. ஆனால், விஷால் ‘ரத்னம்’ படத்தோட டிக்கெட் புக்கிங்கே ஆரம்பிக்கலையே?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: கர்நாடகா, கேரளா உட்பட் 13 மாநிலங்கள்- 88 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சார்ஜ் செய்வதற்கான செலவுகூட கிடையாது... சோலார் பேனல் வசதியுடன் ஆட்டோ ரிக்ஷா... படு கவர்ச்சியான ஸ்டைலில்!!
சார்ஜ் செய்வதற்கான செலவுகூட இந்த ஆட்டோவில் இருக்காது என Vega நிறுவனம் அறிவித்துள்ளது. ஆட்டோக்குள் இருக்கும் பேட்டரியை சார்ஜ் செய்ய சோலார் பேனல் வசதி வழங்கப்பட்டிருப்பதாகவும், அதுவே பேட்டரியை சார்ஜ் செய்ய போதும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த மேலும் முக்கிய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.
நமக்கு பிடிக்கின்றதோ, இல்லையோ இன்னும் சில ஆண்டுகளில் மின்சார வாகனங்களை மட்டுமே வாங்க முடியும் என்ற நிலை உருவாகும் வகையில் இந்தியாவில் புதுமுக மின் வாகனங்களின் அறிமுகம் அதிகளவில் அரங்கேறி வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் நமது பாக்கெட்டையும் (பணத்தையும்), சுற்றுச் சூழலையும் பாதுகாக்க உதவும் என அதீத அளவில் நம்பப்படுகின்றது.
இதன் விளைவாக கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது நாட்டில் மின் வாகனங்களின் பயன்பாடு கணிசமாக உயர்ந்துக் காணப்படுகின்றது. தொடர்ச்சியாக அவற்றின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமே இருக்கிறது. அதேசமயம், மின் வாகனங்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இந்தியாவில் போதியளவில் இருக்கின்றதா என கேட்டால், இல்லை, இப்போதே அவற்றின் எண்ணிக்கை கணிசமான வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது என்ற கூற முடியும்.
நாட்டின் சில முக்கியமான நகர்புற பகுதிகளில்கூட மின் வாகனங்களுக்கான அடிப்படை வசதிகள் (சார்ஜிங் மையங்கள்) தட்டுப்பாடுடன் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. இந்த மாதிரியான தட்டுப்பாடு நிலவினாலும் கவலைப்பட தேவையில்லை என ஓர் மின் வாகன நிறுவனம் தற்போது கூறியிருக்கின்றது.
அது, தன்னுடைய புதுமுக எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாவிற்கு சார்ஜிங் மையம் தேவையில்லை, சூரிய ஒளி ஒன்று இருந்தால் போதும் என தெரிவித்திருக்கின்றது. நிறுவனம், சோலார் பேனல் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாவை உருவாக்கி வருகின்றது. இந்த ஆட்டோவை தேவைக்கேற்ப சார்ஜ் செய்ய வெயில் இருக்கும் நிறுத்தினால் போதும் போதியளவில் அதுவே சார்ஜ் செய்து கொள்ளும்.
ஸ்ரீலங்காவைச் சேர்ந்த மின் வாகன உற்பத்தி நிறுவனம் Vega. இந்நிறுவனமே ETX எனும் பெயரில் சோலார் பேனல் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷா உருவாக்கி வருகின்றது. இந்த ஆட்டோ குறித்த தகவலையே தற்போது நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் சூரிய ஒளியால் சார்ஜ் செய்து கொள்ளும் எலெக்ட்ரிக் ஆட்டோகுறித்த டீசர் வீடியோவை வெளியிட்டிருக்கின்றது.
முற்றிலும் மாறுபட்ட டிசைன் மற்றும் ஸ்டைலில் இந்த ஆட்டோ Vega உருவாக்கியிருக்கின்றது. கார்களில் இருப்பதைப் போல பூட் கதவு, அழகிய விண்ட்ஷீல்டு, மிகவும் கவர்ச்சியான ஸ்டைலிலான ஒற்றை நீள கோடு போன்ற முகப்பு மின் விளக்கு உள்ளிட்டவை இந்த ஆட்டோவில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது ஆட்டோவின் தோற்றத்தையே வெற லெவலில் காட்சிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது, எதிர்காலத்தில் ஆட்டோக்கள் என்ன மாதிரியான ஸ்டைலில் இருக்கும் என்பதை பிரதிபலிக்கும் வகையில் இருக்கின்றது. மேலும், பயன்பாட்டாளர்கள் அதிக லாபத்தையும், குறைந்த பராமரிப்பு செலவை வழங்கும் விதமாக இந்த வாகனத்தில் LFP ரக பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மேற்கூரையிலேயே சோலார் பேனல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவே சூரிய ஒளியில் இருந்து ஆட்டோவிற்கான மின்சார திறனை சேகரிக்க உதவும். இது சார்ஜிங் மையங்களைத் தேடி அலைவதை தவிர்க்க உதவும். சோலார் பேனல் வாயிலாக சார்ஜ் செய்யும்போது ஒரு நாளைக்கு 64 கிமீ தூரம் வரை பயணிப்பதற்கான சார்ஜை பெற முடியும்.
மிக சிறிய பேனலாக இருந்தாலும் அதிக பயன்பாட்டை வழங்கும் வகையில் ETX பயன்படுத்தப்பட்டிருக்கும் சோலார் பேனல் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதராணமாக மேலே கூறப்பட்ட சார்ஜ் திறன் பற்றிய தகவல் இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவை முதலில் ஸ்ரீலங்காவில் விற்பனைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன் பின்னர் தென் ஆசிய நாடுகளில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, எந்தநெந்த நாடுகளில் ஆட்டோக்களுக்கு அதிக டிமாண்ட் நிலவுகின்றதோ அந்த நாடுகளில் அது விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், அதிகளவில் ஆட்டோ ரிக்ஷாக்களின் புழக்கம் தென்படும் நாடாக நமது இந்திாயவும் இருக்கின்றது. ஆகையால், எதிர்காலத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!