ஓட்ட தெரியாமல் தனுஷ்கோடி கடற்கரையில் விலையுயர்ந்த காரை சிக்க வைத்த இர்ஃபான்! மீட்டெடுக்க ரொம்ப போராடிட்டாங்க!
பிரபல யுட்யூப் சேனலைச் சேர்ந்த இர்ஃபான் தனது சொகுசு காரை ஓட்ட தெரியாமல் ஓட்டி சென்று தனுஷ்கோடி கடற்கரையில் சிக்க வைத்ததுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே பார்க்கலாம், வாங்க.

பிரபல தமிழ் யுட்யூப் சேனலைச் சேர்ந்தவர் இர்ஃபான். பிஸ்கட் தொடங்கி ஸ்ட்ரீட் ஃபுட் வரை இவர் ரிவியூ செய்யாத உணவே இருக்காது என்று கூறலாம். ஆரம்பத்தில் உணவுகளை மட்டுமே ரிவியூ செய்து வந்த இர்ஃபான் சமீப காலமாக கார்களை ரிவியூ செய்வதிலும் களமிறங்கியிருக்கின்றார்.

அந்தவகையில், தார் உட்பட ஒரு சில கார்களை அவர் ரிவியூ செய்திருக்கின்றார். இவர் மிக சமீபத்தில் லேண்ட் ரோவர் எவோக் எஸ்யூவி ராக காரை வாங்கியிருந்தார். இந்த காரிலேயே தனது நண்பர் ஒருவருடன் தனுஷ்கோடிக்கு விசிட் கொடுத்திருக்கின்றார்.

சென்ற இடத்தில் தனது புதிய காரை வைத்து தனுஷ்கோடி கடற்கரையில் ஆஃப்-ரோடு பயணம் செய்திருக்கின்றார். அப்போது, அப்புதிய கார் சிக்கலில் சிக்கியிருக்கின்றது. ஆம், கார் மணலில் சிக்கி வெளி வர முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அதி திறனுக்கு பெயர்போன காரே லேண்ட் ரோவர் எவோக் எஸ்யூவி. இந்த காரா கடற்கரை மணலில் சிக்கியது என்ற சந்தேகம் உங்களுக்கு எழும்பலாம். ஆனால், மணலில் கார் சிக்கியதற்கு காரின் திறன் குறைபாடு காரணமல்ல. இர்ஃபானுக்கு அக்காரை எப்படி இயக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாததே காரணம் ஆகும்.

இதனை அவரே அந்த வீடியோவில் கூறியிருக்கின்றார். இர்ஃபான் வாங்கியிருக்கும் லேண்ட் ரோவர் எவோக் எஸ்யூவி கார் இந்தியாவில் ரூ. 55 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார் ஆடி க்யூ5, வால்வோ எக்ஸ்சி60, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி ஆகிய சொகுசு கார்களுக்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது.

லேண்ட் ரோவர் நிறுவனம் ரேஞ்ஜ் ரோவர் எவோக் எஸ்யூவி காரின் புதிய தலைமுறை வெர்ஷனை கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இந்த கார் தற்போது நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

குறிப்பாக, பனோரமிக் சன்ரூஃப், 18 இன்ச் அளவு கொண்ட அலாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லைட், இரு மண்டலம் தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், டெர்ரயின் ரெஸ்பான்ஸ் தொழில்நுட்பம், 2 வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் ரேஞ்ஜ் ரோவர் எவோக் காரில் இடம் பெற்றிருக்கின்றன.

இத்தகைய அதிக சிறப்பு வசதிக் கொண்ட காரையே இர்ஃபான் சரியாக ஓட்ட தெரியாமல் தனுஷ்கோடி மணற்பரப்பில் சிக்க வைத்திருக்கின்றார். இதனை மீட்க உள்ளூர் நபர் ஒருவருக்கு அவர் இரண்டாயிரம் ரூபாய் வரை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
Image Courtesy: Irfan's view
பொதுவாக இதுபோன்று கடற்கரையில் சிக்கும் வாகனங்களை மீட்டெடுக்க உள்ளூர் வாசிகள் ரூ. 6 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிப்பதாக இர்ஃபானுக்கு உதவி புரிந்த கோபி எனும் தெரிவித்தார். ஆளுக்கு ரூ. 500 வீதம் அதனை தங்கள் பகிரிந்துக் கொள்வதாகவும் கூறினார். ஆகையால், இதுபோன்ற வீண் செலவுகள் ஏற்படாமல் இருக்க இதுபோன்ற ஸ்டண்டுகளும் வேண்டாம் என்பதே எங்களின் கருத்து.


Click it and Unblock the Notifications








