முழிச்சிட்டு இருந்தா கூட தூங்குனதா சொல்லுது, டிரைவர் மானிட்டரிங் சிஸ்டத்தில் புதிய குளறுபடி!
Driver Attention Detection Technologyயில் சீனர்களுக்கு சிறிய கண்களாக இருப்பதால் அவர்கள் கார் ஓட்டினால் தூங்கிக்கொண்டே கார் ஓட்டுவதாக வருகிறது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம்.

இன்று சாலைகளில் இரவு நேரங்களில் நடக்கும் முக்கியமான விபத்துக்களுக்கு முக்கியமான காரணம் இரவு நேரங்களில் டிரைவர்கள் தங்களையே அறியாமல் சில நிமிடங்கள் தூங்கிவிடுவதுதான். தூங்கிக்கொண்டே வாகனம் ஓட்டுவதால் வாகனம் விபத்தில் சிக்கிவிடுகிறது. கார் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வாகனங்களில் ஏகப்பட்ட தொழிற்நுட்பங்களை உள்ளே கொண்டு வந்து பாதுகாப்பை உறுதி செய்துவருகின்றனர்.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு வரை இப்படியாக வாகனம் ஓட்டும் போது டிரைவர் தூங்குவதைத் தடுக்கவோ கண்காணிக்கவே எந்த கருவிகளும், இல்லை. இதனால் டிரைவர் தூக்கத்திலிருந்தால் மற்ற பயணிகளுக்கு இது குறித்துத் தெரியாமல் கூட இருந்து வருகிறது. இந்நிலையில் தான் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் Driver Attention Detection Technology என்ற புதிய தொழிற்நுட்பத்தை கொண்டு வருகிறார்.

இன்று வெளியாகும் பல கார்களில் இந்த தொழிற்நுட்பம் ஒரு முக்கியமான பாதுகாப்பு அம்சமாக இருக்கிறது. இந்த தொழிற்நுட்பம். வாகனத்தின் டிரைவர் தூக்கத்தில் இருக்கிறாரா என்பதைக் கண்காணித்து இன்ஃபோடெயின்மெண்ட் மூலமும், ஒலி மூலமும் எச்சரிக்கை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான பல கார்களில் இந்த தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த தொழிற்நுட்பம் மார்கெட்டிற்கு புதிது தான் என்றாலும் அதன் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. இன்றைய தேவையை அறிந்து வல்லுநர்கள் இந்த தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். அடுத்தடுத்த மேம்பாடுகள் பெரிய அளவில் இந்த தொழிற்நுட்பத்திற்கு தேவையில்லை. தற்போதைய கட்டிங் எட்ஜ் தொழிற்நுட்பத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது என்று எல்லாம் இதற்கு விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் தான் இந்த தொழிற்நுட்பம் சீனா நிறுவனம் தயாரிக்கும் கார்களில் பொருத்தப்பட்டது. இந்த காரை வாங்கி ஓட்டிய ஒருவருக்கு ஒரு விநோதமான ஒரு விஷயம் நடந்துள்ளது. அவர் ஓட்டிய காரில் Driver Attention Detection Technology பொருத்தப்பட்டுள்ளது. பொதுவாகச் சீனர்களுக்கு இயற்கையாகவே கண்கள் சிறியதாக இருக்கும். அவ்வாறே இவருக்கும் கண்கள் சிறியதாக இருந்துள்ளது.

ஆனால் இவர் கண்கள் சிறியதாக இருப்பதை Driver Attention Detection Technology இவர் தூக்கத்தில் கார் ஓட்டுகிறார் எனப் புரிந்து அலாரம்களை தொடர்ந்து எழுப்பிய படி இருந்துள்ளது. ஆனால் அவர் நன்றாக விழிப்புடன் தான் காரை ஓட்டியுள்ளார். ஆனால் தொடர்ந்து அலாரம் அடித்துக் கொண்டே இருந்துள்ளது. இதனால் அவரால் தொடர்ந்து கார் ஓட்ட முடியவில்லை. இது குறித்து அவர் அந்நாட்டில் உளு்ள சமூகவலைத்தளம் ஒன்றில் பகிர்ந்திருந்தார். இந்த பதிவு வைரலாக பரவியுள்ளது.

இந்த தொழிற்நுட்பம் இந்தியா உள்ள மற்ற நாட்டு மக்களுக்கு நல்ல வரப்பிரசாதமாக இருந்தாலும் சீனாவில் இந்த தொழிற்நுட்பம் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கியுள்ளது. தற்போது இந்த தொழிற்நுட்பம் உள்ள கார்களை சீனர்கள் எல்லோராலும் ஓட்ட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இது அனைத்து சீனர்களுக்கும் இல்லை கண்கள் சிறியதாக உள்ள சில சீனர்களுக்கு மட்டும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

இந்த பிரச்சனை பலருக்கு ஏற்படுவதாகச் சீனர்கள் பலர் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த தொழிற்நுட்பத்தை ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஏற்றவாறு மாற்றம் செய்யும்படி கொண்டு வர வேண்டும் எனச் சிலர் பேசி வருகின்றனர். சீனாவில் வெளியாகி வைரலான பதிவில் பயனர் Xpeng மோட்டார்ஸ் நிறுவனத்தின் காரை பயன்படுத்தினார்

Xpeng நிறுவனம் சீனாவில் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயார் செய்து விற்பனை செய்து வருகிறது. அந்நிறுவனம் வெளியிட்ட குறிப்பிட்ட கார் அந்நாட்டு அனைத்து விதமா டெஸ்டிங்கிலும் சோதிக்கப்பட்டு பின்னரே மார்கெட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்நிலையில் தான் இந்த பிரச்சனை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் சீனாவில் உள்ள கார் தயாரிப்பாளர்கள் தங்கள் கார்களின் Driver Monitoring System-ஐ மீண்டும் டெஸ்ட் செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் சர்வதேச அளவிலான Driver Monitoring System தயாரிப்பாளர்களுக்கு இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் முகபாவனையைக் கண்காணிப்பதில் மிக முக்கியமான அப்டேட் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








