Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 3 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஒரு எலெக்ட்ரிக் காரால் வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை வழங்க முடியுமா? ஃபோர்ட்-இன் இந்த காரால முடியும்!
வீட்டில் உள்ள அனைத்து லைட்டுகளுக்கும் மூன்று நாட்கள் வரை கரண்ட் வழங்கும் வகையில் சிறப்பு சக்தியுடன் ஓர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் கார் குறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்த உலகில் மின்சார வாகனங்களின் ஆதிக்கம் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதற்கு உலகளவில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
எலெக்ட்ரிக் வாகனங்கள் பல வகைகளில் அதிக பலனை வழங்குகின்றன. குறிப்பாக, சுற்றுச் சூழலுக்கு இது மாசை ஏற்படுத்தாது. மேலும், குறைந்த பராமரிப்பில் அதிக லாபத்தை வழங்கும். இதுபோன்ற எக்கச்சக்க காரணங்களினால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு உலக மக்கள் மத்தியில் மவுசு அதிகரித்துக் காணப்படுகின்றது.
அதிலும், அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வரும் புதுமுக மின்சார வாகனங்களுக்கு டிமாண்ட் ஏகபோகமாக நிலவுகின்றது. அந்தவகையில், ஃபோர்டு (Ford) நிறுவனத்தின் புத்தம் புதிய தயாரிப்பான எஃப்-150 லைட்னிங் (F 150 Lightning) வாகனத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது ஓர் பிக்-அப் ட்ரக் ரக எலெக்ட்ரிக் வாகனமாகும். இந்த வாகனத்திற்கு அமெரிக்கர்கள் மத்தியில் மிக சிறப்பான ரெஸ்பான்ஸ் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. இக்காரின் முதல் பேட்ச் தற்போது டெலிவரிக்கு தயாராக இருக்கின்றன. இந்த நிலையில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்டில் இடம் பெற்றிருக்கும் சிறப்பு வசதி பற்றிய தகவல் வெளியாகி உலக மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது.
ஃபோர்டு எஃப்-150 லைட்னிங் எலெக்ட்ரிக் பிக்-அப் ட்ரக்கின் உயர்நிலை வேரியண்ட், ஓர் வீட்டின் அனைத்து மின் விளக்குகளுக்கும் மூன்று நாட்கள் வரை மின்சார திறனை வழங்கக் கூடிய அளவிற்கு திறன்படைத்தது என்கிற தகவலே வெளியாகியுள்ளது. இந்த தகவலே ஒட்டுமொத்த மின் வாகன உலகையுமே ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது.
இதுபோன்று இன்னும் பல அம்சங்களுடன் இக்கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், இதன் விலை சற்றே அதிகமானதாக காட்சியளிக்கின்றது. ஃபோர்டு எஃப்-150 லைட்னிங் எலெக்ட்ரிக் பிக்-அப் ட்ரக்கின் உயர்நிலை வேரியண்டிற்கு 72,474 அமெரிக்க டாலர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனைக்குக் கிடைக்கும். பேக்-அப் பவர் எனும் சிறப்பம்சத்தின் வாயிலாகவே மூன்று நாட்களுக்கு ஓர் வீட்டின் மின் விளக்குகளுக்கு மின்சார திறனை வழங்கும் வசதியை உயர்நிலை தேர்விற்கு ஃபோர்டு வழங்கியிருக்கின்றது.
இந்த சிறப்பு வசதிக்காக நிறுவனம் எலெக்ட்ரிக் பிக்-அப் ட்ரக்கில் 131 kWh பேட்டரி பைக்கை வழங்கியிருக்கின்றது. இந்த பேட்டரியானது சன்ரன், சோலார் கம்பெனியின் கூட்டணியின் வாயிலாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. இது 9.6 kW வரை பவரை வெளியேற்றும் திறன் கொண்டது.
இப்பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 480 கிமீ வரை செல்லுவதற்கான மின்சார திறனை வழங்கும். இத்தகைய அதிகபட்ச ரேஞ்ஜ் திறனுடன் சேர்த்து பவர்-கட்டில் இருந்தும் இது நமக்கு விளக்களிக்கும். வாடிக்கையாளர் சன்ரன்ஸ்-இன் ஹோம் இன்டெக்ரேஷன் சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இன்வர்டர் மற்றும் டிரான்ஸ்ஃபர் சுவிட்சுடன் கூடிய பேட்டரி அமைப்பை இது கொண்டிருக்கும்.
இது வழிகளில் பவரை வழங்க உதவும். கூடுதலாக சோலார் பவரையும் ஆப்ஷனலாக ஃபோர்டு எஃப்-150 லைட்னிங் எலெக்ட்ரிக் பிக்-அப் ட்ரக் பயனர்களால் இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும். இது கூடுதல் சிறப்பு வசதியை வீட்டிற்கு வழங்க உதவும். குறிப்பாக, வீட்டை எப்போதும் மின்சார திறன் நிறைந்த இல்லமாக மாற்ற வழிவகுக்கும்.
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!