Just In
- 5 hrs ago
டாடா எலெக்ட்ரிக் கார்களின் கதையை முடிக்க போகுது! மிகவும் விலை குறைவான மாடலுக்கு புக்கிங் தொடக்கம்!
- 1 day ago
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- 1 day ago
வீலிங், சேஸிங்னு எதுவுமே பண்ண வேண்டாம்... இத ஓட்டிட்டு போனாலே உங்கள வச்ச கண்ணு வாங்காம பாப்பாங்க!
- 1 day ago
காத்தையே கிழிக்க போகுது நம்ம வந்தே பாரத் ரயில்கள்... இனி ஒக்காந்துட்டு மட்டுமல்ல படுத்துட்டு போகலாம்..
Don't Miss!
- News
"ஹிட்லர் தெரியுமா உங்களுக்கு.. மோடிக்கும் அதே கதிதான்.." சித்தராமையா சொன்னதும்.. கொதித்தெழுந்த பாஜக
- Sports
U-19 மகளிர் உலக கோப்பை- 59 ரன்களில் சுருண்ட இலங்கை.. இந்திய அணி அபார வெற்றி
- Finance
Budget 2023:பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய அறிவிப்புகள்..!
- Movies
Bigg Boss Tamil 6: பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீமுக்கு 50 லட்சத்துடன்.. சொகுசு காரும் பரிசு!
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் பிப்ரவரி 15 வரை இந்த 5 ராசிக்கு அட்டகாசமா இருக்கும்...
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
எல்லாரும் ரெடியாகுங்க! 2023 ஆட்டோ எக்ஸ்போவில் கலந்து கொள்வது எப்படி? முழு விபரம் இதோ!
வரும் 2023 ஜனவரி மாதம் இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவார்கள். இந்த ஆட்டோ எக்ஸ்போ எங்கு, எப்பொழுது நடக்கிறது. இதில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்? எப்பொழுது எப்படிக் கலந்து கொள்வது உள்ளிட்ட விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
ஒவ்வொரு நாட்டிலும் ஆட்டோமொபைல் துறைக்கு என ஒவ்வொரு ஆண்டும் பிரத்தியேகமாகக் கண்காட்சி ஒன்று நடத்தப்படும். அந்த கண்காட்சியில் அந்நாட்டில் ஆட்டோமொபைல் துறையில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவார்கள். ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு இந்த கண்காட்சி மிகவும் முக்கியமான ஒன்று இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஆட்டோமொபல் துறைக் கான கண்காட்சி நடக்கிறது.

இந்த கண்காட்சியின் போது இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் துறையில் இயங்கும் பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை அனைவரும் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துவார்கள். ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த கண்காட்சிக்காகவே தங்களின் புதிய தயாரிப்புகளை உருவாக்குவார்கள்.இந்த கண்காட்சியின் போது அதிக மக்களின் கவனம் இதில் இருப்பதால் இதில் தங்கள் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினால் மக்களின் கவனம் இங்கு இருக்கும் என்பதால் இதைச் செய்து வருகின்றனர்.
இப்படியாக 2023ம் ஆண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போ வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ளது. நொய்டா பெருநகர பகுதியில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட் பகுதியில் இந்த கண்காட்சி நடக்கவுள்ளது. இந்த கண்காட்சி ஜனவரி மாதம் 12ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை சுமார் 1 வாரம் நடக்கவிருக்கிறது.இந்த எக்ஸ்போவில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தக் காத்திருக்கின்றனர்.
ஜனவரி 12ம் தேதி காலை 10 மணிக்கு இந்த கண்காட்சி துவங்குகிறது. இந்த கண்காட்சியில் முதலில் ஊடகத்தினருக்கான பதிவுகள் மற்றும் அவர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சி துவங்குகிறது. அதில் இந்தியாவில் உள்ள அத்தனை ஆட்டோமொபைல் குறித்த தகவல்களை வழங்கும் ஊடகங்களும் கலந்து கொள்ளவுள்ளது. அப்படியே தொடர்ந்து ஜனவரி 12ம் தேதி முதல் 13ம் தேதி வரை பிஸ்னஸ் வசிட்டர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
அதாவது இந்தியாவில் ஆட்டோமொபைல்துறையில் டீலர்களாக இருப்பவர்கள்,ஆட்டோமொபைல் துறை சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. இது போக ஊடகத்தினருக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நேரத்தில் ஒவ்வொரு நிறுவனங்களாக தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ளன. இந்த தேதிகளில் காலை 10 மணிக்குத் துவங்கும் இந்த கண்காட்சி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
ஜனவரி 15ம் தேதி தொழில் முறை பார்வையாளர்களுக்கான நேரம் முடிவடைகிறது. ஜனவரி 14ம் தேதி காலை 10 மணி முதலே பொது பார்வையாளர்களுக்கான அனுமதியும் வழங்கப்படுகிறது. ஜனவரி 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் இந்த கண்காட்சியைப் பார்த்து ரசிக்கலாம்.
இந்த கண்காட்சிக்கான டிக்கெட் தற்போது ஆன்லைன் முறையில் விற்பனையாகிறது. 13ம் தேதி தொழில்முறை பார்வையாளர்களுக்கான அனுமதிச் சீட்டிற்கு ஒரு நபருக்கு ரூ750 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதன் பின்னர் நடக்கவுள்ள பொதுமக்களுக்கான பார்வை கட்டணமாக 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒரு டிக்கெட் ரூ475 என்ற விலையிலும், 16 முதல் 18ம் தேதிகளில் பொதுமக்களுக்கு ஒரு டிக்கெட் ரூ350 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிக்கெட்கள் தற்போது ஆன்லைனில் விற்பனையாகி வருகிறது. நீங்கள் ஆட்டோ எக்ஸ்போவில் கலந்து கொள்ள விரும்பினால் இப்பொழுதே உங்கள் டிக்கெட்டை புக் செய்து கொள்ளுங்கள்!
-
இது எல்லாம் வந்தா இந்தியாவே சிங்கப்பூரா மாறிடுமே! ஆட்டோ எக்ஸ்போவை கலக்கிய டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்!
-
பெட்ரோல் பைக்குகளை தூக்கி போடுவதற்கான நேரம் வந்தாச்சு! ஃபுல் சார்ஜில் 200 கிமீ ரேஞ்ஜ் தரும்!
-
மாஸ் காட்டிய கொங்கு நாட்டு மக்கள்! தமிழ் நாடே இப்ப இவங்கள தான் வாய பொளந்து பாத்துட்டு இருக்குது!