Just In
- 1 hr ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 4 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 5 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 5 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சர்வதேச அளவில் இந்தியாவிற்குக் கெளரவத்தைத் தேடித்தந்த ஸ்கோடா...உலகின் 3வது பெரிய சந்தையாக மாற்றியது இந்தியா
ஸ்கோடா இந்தியா நிறுவனம் இந்தாண்டு அதிகமான கார்களை விற்பனை செய்து இந்தியாவைச் சர்வதேச அளவில் 3வது பெரிய சந்தையாக உருவாக்கியுள்ளது.
ஸ்கோடா இந்தியா (Skoda India) நிறுவனம் இது வரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் இந்த 2022ம் ஆண்டு மிகப்பெரிய விற்பனையைச் சந்தித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் துவங்கி ஆக்டோபர் மாதம் வரையில் மொத்தம் 44,500 கார்களை விற்பனை செய்துள்ளது.
இதைக் கொண்டாடும் வகையில் அந்நிறுவனம் வட இந்தியாவில் சமீபத்தில் ஸ்கோடா (Skoda) விரும்பிகளுக்கான ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. இந்த சந்திப்பில் ஸ்கோடா நிறுவனத்தின் பிராண்ட் இயக்குநர் பீட்டர் சோல்க் (Petr Šolc) கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு இந்தியா, ஜெர்மனி, ஸ்லோவேக்கியா, அயர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், ஆஸ்திரியா, மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளிலிருந்து ஆட்டோமொபைல் விரும்பிகள் வந்திருந்தனர்.
இவர் அந்த கூட்டத்தில் பேசியதாவது : "பொதுவாக செக் குடியரசு நாட்டில் உள்ள ஸ்கோடா தலைமையகம் உள்ள மால்டா போலேஸ்லேவ் பகுதிக்கு ஸ்கோடாவின் தயாரிப்புகளைக் காட்ட சந்திப்புகளை நடத்துவோம். தற்போது இந்தியாவில் இந்தியாவிலே உருவாக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை உலகிற்குக் காட்டுவதில் பெருமைகொள்கிறோம். இந்த ஆண்டு எங்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. இதை மொமெண்டத்தை 2023ம் ஆண்டு தொடர்ந்து கொண்டு வருவோம்" எனக் கூறினார். ஸ்கோடா நிறுவனம் இந்தாண்டு இதுவரையில்லாத அளவிற்கு விற்பனையைப் பெற்றதற்கு இந்தியாவில் இந்தியாவிற்காகத் தயாரிக்கப்பட்ட MQB-A0-IN பிளாட்ஃபார்ம் முக்கியமான காரணம்.
இந்த பிளாட்ஃபார்மில் தான் ஸ்கோடா குஷாக் எஸ்யூவி (Skoda Kushaq SUV) கார் தயாரிக்கப்பட்டுக் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்தாக ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) கார் கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கார்களின் விற்பனை ஸ்கோடா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்தியா தற்போது ஸ்கோடா நிறுவனத்திற்கு ஜெர்மனி மற்றும் செக் குடியரசு நாட்டிற்கு அடுத்தபடியாக 3வது மிகப்பெரிய மார்கெட்டாக இருக்கிறது.
ஸ்கோடா குஷாக் கார் கடந்த மாதம் குலோபல் NCAP கிராஷ் (GNCAP) டேஸ்டிங்கில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த டெஸ்டில் ஸ்கோடா குஷாக் கார் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான ரேட்டிங்கில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. புதிய குலோபல் NCAP (GNCAP) விதிகளில் கீழ் இந்த டெஸ்டிங்கில் ஈடுபட்ட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கார் இது தான். இது MQB-A0-IN பிளாட்ஃபார்மில் தரத்தை எடுத்துக்காட்டு விதமாக அமைந்துள்ளது. ஸ்கோடா இந்தியா நிறுவனம் தனது கார்களில் பாதுகாப்பிற்குக் குறை வைக்காது என்பதை இது எடுத்துச் சொல்கிறது.
ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகிய கார்களில் ஆக்டிவ் மற்றும் பேசிவ் பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. 3 பாயிண்ட் சீட் பெல்ட், ஒவ்வொரு பயணிகளுக்கும் தனித்தனியாக ஹெட்ரெஸ்ட், 6 ஏர்பேக்குகள், ரோல் ஓவர் புரோடெக்ஷன், ஐஎஸ்ஓபிக்ஸ் மவுண்ட் சைல்டு புரோடெக்ஷன், ஹில் ஹோல்டு கண்ட்ரோல்,
எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், டிராக்ஷன் கண்ட்ரோல் உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் டிஃபரென்ஷியல் லாக் சிஸ்டம், மல்டி கோலிஷன் பிரேக்கிங், எலெக்ட்ரானிக் பிரேக்-ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன், பிரேக் டிஸ்க் வைப்பிங், கேமராவுடன் கூடிய ரியர் பார்க்கிங் சென்சார் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.
ஸ்கோடா இந்தியா நிறுவனம் இந்த 2022ம் ஆண்டு சிறப்பான விற்பனையை மட்டும் பெறவில்லை தனது பிஸ்னஸையும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் வெறும் 175 டச் பாயிண்ட்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது அது 220 டச் பாயிண்ட்களாக மாறியுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 250 டச் பாயிணட்களாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்நிறுவனம் தனது ஷோரூம்களை முற்றிலுமாக டிஜிட்டலைஸாக மாற்றி இந்தியாவில் முதன் முறையாக வாடிக்கையாளர்களுக்கு இன்டராக்டிவ் அனுபவத்தை வழங்குகிறது.
ஸ்கோடா நிறுவனம் தனது இந்தியா 2.0 திட்டத்தைக் கடந்த 2018ம் ஆண்டு உருவாக்கி தற்போது முக்கியமான மைல் கல்லை எட்டியுள்ளது. இதன்படி ஸ்கோடா கார்களை 95 சதவீதம் இந்திய பொருட்களை வைத்தே தயாரித்து தற்போது இடது பக்க டிரைவ் கார்களை தயாரித்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. மேலும் இந்தியாவில் செய்யும் உதிரிப்பாகங்களை வியட்நாம் நாட்டிற்கு அனுப்பி அங்கு வைத்து அந்நாட்டிற்கான கார்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஸ்கேடா நிறுவனத்திற்கு இந்தியா ஒரு சர்வதேச மையமாக மாறியுள்ளது.
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!