Just In
- 2 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 4 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 9 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Movies வேணாம் வேற மாதிரி ஆயிடும்… பயில்வானின் கேள்வியால் கடுப்பான விஷால்!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- News சென்னையை சுற்றி 128 ரயில் நிலையங்களில் வருகிறது சூப்பர் வசதி.. இன்னும் 3 மாதத்தில் எல்லாமே மாறுது
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அசத்தும் சிறப்பம்சங்களுடன் புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள் விபரம்
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் புதிய அம்சங்கள் மற்றும் விலை விபரம் உள்ளிட்ட பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பிஎஸ்-4 மாசு உமிழ்வு விதி அமல்படுத்தப்பட்டதால், ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில், வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள், கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்ட எஞ்சின் தேர்வுடன் புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி இந்தியாவில் மீண்டும் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 3 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.
புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பொலிவு கொடுக்கப்பட்ட முகப்பு க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய இண்டிகேட்டர்கள், புதிய பம்பர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, புதிய 20 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், சில்வர் வண்ணத்தில் புதிய ரூஃப் ரெயில்கள், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவையும் வசீகரத்தை கூட்டுகின்றன.
புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில் கருப்பு மற்றும் பீஜ் வண்ணத்தில் இரட்டை வண்ண பாகங்களுடன் இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்கோடா கார்களில் வழங்கப்படும், 2 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் இந்த புதிய மாடலிலும் இடம்பெற்றிருக்கிறது. பனோரமிக் சன்ரூஃப் வசதியும் உள்ளது.
இந்த காரில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 3 ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 12 ஸ்பீக்கர்களுடன் கூடிய கேன்டன் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு நிகரான 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 187 எச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஸ்கோடா கோடியாக எஸ்யூவியில் டைனமிக் சேஸிஸ் கன்ட்ரோல் சிஸ்டம் மிக முக்கிய அம்சமாக இருக்கும். டிரைவிங் மோடுகளுக்கு தக்கவாறு சஸ்பென்ஷன் டேம்பர்களின் இறுக்கத்தை இந்த தொழில்நுட்பம் தானியங்கி முறையில் மாற்றிவிடும். இந்த காரில் ஈக்கோ, நார்மல், ஸ்போர்ட்ஸ், ஸ்னோ மற்றும் இன்டிவிஜுவல் என 5 டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில் 9 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், மெக்கானிக்கல் பிரேக் அசிஸ்ட், ஹைட்ராலிக் பிரேக் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் டிஃபரன்ஷியல் லாக் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஸ்டைல் வேரியண்ட்டிற்கு ரூ.34.99 லட்சமும், ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டிற்கு ரூ.35.99 லட்சமும், எல் அண்ட் கே வேரியண்ட்டிற்கு ரூ.37.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் டிகுவான், சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவிக்கு புக்கிங் துவங்கப்பட்டுவிட்டது. இந்த கார் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும். ஏற்கனவே உற்பத்தியும் துவங்கிவிட்டது. இதனால், அடுத்த சில நாட்களில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் டீலர்களில் நடைபெறும்.
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!