Just In
- 16 min ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 1 hr ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 3 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 8 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
Don't Miss!
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Movies டாடா பட நடிகை அபர்ணா தாஸின் ஹல்தி கொண்டாட்டம்..களைகட்டிய திருமணம்!
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இவ்ளோ சூப்பரான கார் காவல்துறைக்கா! புதிய ஆணையரகங்களுக்கு வழங்கப்பட்ட மஹிந்திரா கார்கள்... இதோட விலை எவ்வளவு?
புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் தாம்பரம் மற்றும் ஆவடி ஆணையரகங்களுக்கு புதிய மற்றும் அதி-நவீன வசதிகள் கொண்ட மஹிந்திரா (Mahindra) கார்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் சிறப்பு வசதிகள் மற்றும் விலை பற்றிய முக்கிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
தமிழக மக்களின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்கள். சென்னை காவல்துறை தற்போதைய திமுக அரசினால் சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி என மூன்று காவல் ஆணையரகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இப்பிரிவை ஒட்டி புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்களுக்கான புதிய ஆயுதங்கள், பாதுகாப்பு கவசங்கள் மற்றும் வாக்கி டக்கிகள் போன்ற கருவிகள் கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அண்மையில் இப்புதிய காவல் ஆணையகங்களுக்கான ஆணையர்கள் தமிழக அரசால் நியமிக்கப்பட்டனர். ரவி மற்றும் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரே புதிய ஆணையரகங்களின் கமிஷனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையிலேயே அந்தந்த காவல் ஆணையரகங்களுக்கான புதிய ரோந்து வாகனங்கள் தற்போது வாங்கப்பட்டிருக்கின்றன.
புதிதாக வாங்கப்பட்டிருக்கும் இந்த வாகனங்கள் தற்போது தமிழக மக்களின் பெரும் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. பொதுவாக காவல் துறை வாகனம் என்றால் வெள்ளை, நீலம் மற்றும் முழு சிவப்பு நிறத்திலேயே காட்சியளிக்கும். ஆனால், இந்த யுக்தி புதிய ஆணையரகங்களுக்கான வாகனங்களில் மாற்றப்பட்டிருக்கின்றது.
புதிதாக களமிறக்கப்பட்டிருக்கும் காவல் ரோந்து வாகனங்கள்அடர் பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன. இத்துடன், மஞ்சள் நிற கோடுகளும் இந்த வாகனத்தில் இடம் பெற்றிருக்கின்றன. தொடர்ந்து, வெள்ளை மற்றும் கருப்பு நிற பார்டர்கள் கொண்ட போலீஸ் எனும் வார்த்தை மிக பெரிய அளவில் பக்கவாட்டு பகுதிகளில் இடம் பெற்றிருக்கின்றன. இத்துடன், பேட்ரோல் வாகனம் என்பதை தெரியப்படுத்தும் வார்த்தையும் காரின் பக்கவாட்டு பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கூடுதல் சிறப்பு தகவலாக அவசர கால அழைப்பு எண்களும் காரின் பின் பகுதியில் இடம் பெற்றிருக்கின்றன. இதுமாதிரியான அம்சங்களே இந்த வாகனத்தின் கொள்முதலை பெரும் பேசு பொருளாக மாற்றியிருக்கின்றது. தற்போது வாங்கப்பட்டிருப்பது அதிகள் சிறப்பு வசதிகள் கொண்ட மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் பொலிரோ நியோ (Bolero Neo) கார் மாடல் ஆகும்.
இந்த கார் மாடலே புதிய காவல் ஆணையரகங்களுக்கு தற்போது வாங்கப்பட்டிருக்கின்றன. காவலர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப இந்த வாகனம் பல மாடங்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்டிக்கர்கள் மட்டுமின்றி சைரன் மற்றும் அவசர கால பயணங்களுக்கு ஏற்ற வாகனமாக இது மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்த காரை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியது. இது ரூ. 8.48 லட்சம் தொடங்கி ரூ. 10 லட்சம் என்ற உச்சபட்ச விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.
டியூவி300 எஸ்யூவி காருக்கு மாற்றாக இப்புதிய பொலிரோ நியோ நாட்டில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதனை டியூவி300 காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் என்றும் கூறலாம். மிரட்டலான தோற்றம், அலாய் வீல்கள், ஸ்பாய்லர், டெயில்கேட் கேட் ஆகிய புதிய அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.
சந்தையில் இக்கார் பழுப்பு, மெஜஸ்டிக் சில்வர், ஹைவே சிவப்பு, பவள வெள்ளி, பியர்ல் வெள்ளை மற்றும் நபோலி கருப்பு ஆகிய நிற நிறத்தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், இந்த கார் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவை நியோ என்4, என்8 மற்றும் என்10 ஆகும்.
பிளாஸ்டிக் கிளாடிங், 3.5 இன்ச் அளவுள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் க்ள்ஸ்ட்டர், வினைல் இருக்கை, நகரக்கூடிய வசதி கொண்ட மூன்றாம் இருக்கை வரிசை, ஈக்கோ மோட் உடன் கூடிய ஏசி, பவர் ஸ்டியரிங், பவர் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் பொலிரோ நியோவில் வழங்கப்பட்டிருக்கின்றன.
இதுமாதிரியான பன்முக சிறப்பு வசதிகளுடன் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்து வரும் காரையே புதிய காவல் ஆணையரகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவற்றிலேயே காவல்துறையினர் ரோந்து உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய இரு புதிய ஆணையரகங்களுக்கும் சேர்த்து 10 ரோந்து வாகனங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன.
-
இந்த விலைக்கு இப்படி ஒரு ஹூண்டாய் காரா! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு வண்டிய எடுத்துருவீங்க!
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே