Just In
- 47 min ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 1 hr ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 2 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 3 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Movies யாரும் என்னை அழைக்கவில்லை.. நான் தயாராக இருந்தேன்.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா.. சுகன்யா பாவம்தான்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மல்லுக்கட்ட போகும் மாருதி-டாடா நிறுவனங்கள்... சின்ன கார் வாங்க போறவங்களுக்கு கொண்டாட்டம்தான்!
இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள அளவில் சிறிய ஹேட்ச்பேக் கார்கள் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இருப்பினும் ஹேட்ச்பேக் ரக கார்கள் இன்னமும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகவே இருந்து வருகின்றன. குறிப்பாக முதல் முறையாக கார் வாங்குபவர்கள் பலரது முதல் சாய்ஸாக இருப்பது ஹேட்ச்பேக்குகள்தான்.
ஓட்டுவதற்கு எளிது, நடைமுறை பயன்பாடு என இதற்கான காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உள்ள தேவையை மனதில் வைத்து பல்வேறு நிறுவனங்களும் புதிய ஹேட்ச்பேக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. இதில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள முக்கியமான ஹேட்ச்பேக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.
புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஆல்டோ (New-gen Maruti Suzuki Alto)
ஆல்டோ காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மாருதி சுஸுகி நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஆல்டோ கார், நடப்பாண்டே இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. HEARTECT பிளாட்பார்ம் அடிப்படையில் புதிய தலைமுறை ஆல்டோ கட்டமைக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
தற்போது உள்ள 0.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 0.8 லிட்டர் bi-fuel (பெட்ரோல்-சிஎன்ஜி) இன்ஜின் ஆகியவை புதிய தலைமுறை மாடலிலும் அப்டேட்களுடன் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய தலைமுறை ஆல்டோ கார் சாலை சோதனை செய்யப்படும்போது ஏற்கனவே கேமராவின் கண்களில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (New-gen Maruti Suzuki Swift)
புதிய தலைமுறை ஆல்டோவுடன், புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை உருவாக்கும் பணிகளும் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்விஃப்ட் காரின் புதிய தலைமுறை மாடல் ஷார்ப்பான டிசைனை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் பல்வேறு புதிய வசதிகளும் கூடுதலாக வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனினும் தற்போது விற்பனையில் இருந்து வரும் ஸ்விஃப்ட் காரில் பொருத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரிலும் தொடர்ந்து வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி (Maruti Suzuki Baleno CNG)
மாருதி சுஸுகி நிறுவனம் வெகு சமீபத்தில்தான் தனது பலேனோ காரின் 2022 மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதற்கு அடுத்தபடியாக இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் சிஎன்ஜி மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது. இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும்? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எனினும் கூடிய விரைவில் மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி காரின் அறிமுகம் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி பலேனோ காரின் சிஎன்ஜி மாடலின் சோதனை ஓட்டமும் தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அதன் ஸ்பை படங்கள் வெளியாகி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளன.
டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி (Toyota Glanza CNG)
மாருதி சுஸுகி பலேனோவின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட மாடல்தான் டொயோட்டா க்ளான்சா என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் ரெகுலர் வாசகர்களுக்கு நன்றாகவே தெரியும். டொயோட்டா-சுஸுகி ஆகிய இரண்டு நிறுவனங்களும் கூட்டணியை ஏற்படுத்தி கொண்டுள்ளன. இதன் அடிப்படையில் மாருதி சுஸுகி கார்களை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் வேறு பெயரில் விற்பனை செய்து வருகிறது.
இந்த வகையில் விற்பனை செய்யப்படும் கார்தான் டொயோட்டா க்ளான்சா. மாருதி சுஸுகி பலேனோ காரில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு, டொயோட்டா பிராண்டில் க்ளான்சா என்ற பெயரில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. மாருதி சுஸுகி பலேனோ காரின் 2022 மாடலை தொடர்ந்து, டொயோட்டா க்ளான்சா காரின் 2022 மாடலும் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இதே பாணியில், மாருதி சுஸுகி பலேனோ காரின் சிஎன்ஜி மாடலை தொடர்ந்து, டொயோட்டா க்ளான்சா காரின் சிஎன்ஜி மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. டொயோட்டா க்ளான்சா காரின் சிஎன்ஜி மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் (Tata Altroz EV)
கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் கிட்டத்தட்ட தயாரிப்பிற்கு உகந்த நிலையில், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இது ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் டாடா அல்ட்ராஸ் ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். அனேகமாக நடப்பாண்டில் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனான டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்கள்தான் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?