Just In
- 26 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 32 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கியா கேரன்ஸிற்கு நேரடி போட்டி... டொயோட்டா கொண்டுவரும் புதிய எம்பிவி கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?
ரூ.15 லட்சத்திற்கு உள்ளாக 7-இருக்கை எம்பிவி காரினை இந்தியாவில் அறிமுகப்படுத்த டொயோட்டா திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
செல்டோஸ், கார்னிவல் மற்றும் சொனெட் மாடல்களை தொடர்ந்து கேரன்ஸ் எம்பிவி காரினை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தென்கொரியாவை சேர்ந்த கியா தயாராகி வருகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி, இந்த புதிய கியா எம்பிவி கார் இன்னமும் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வந்தடையவில்லை. அதாவது இந்த கியா காரினை இன்னும் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் நேரில் பார்க்கவில்லை. இருப்பினும் முன்பதிவுகள் துவங்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள் கியா கேரன்ஸை முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியது.
இதனை பற்றி விரிவாக சமீபத்தில் நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் செய்தித்தளத்தில் கூட பார்த்திருந்தோம். இந்த நிலையில் தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலில், கியா கேரன்ஸிற்கு போட்டியாக ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டொயோட்டா புதிய எம்பிவி கார் ஒன்றினை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாம்.
இந்த தகவலின்படி, டொயோட்டா நிறுவனம் ‘பெரிய பாய்ச்சல்' (Big leap) என்கிற பெயரில் இந்தியாவில் 5-இருக்கை நடுத்தர அளவு எஸ்யூவி மற்றும் ஒரு புதிய எம்பிவி கார்களை உருவாக்கும் வகையில் அதன் உள்நாட்டு தொழிற்சாலை பணிகளை விரிவுப்படுத்தும் திட்டத்தில் இறங்கியுள்ளது. இதில் டி22 என தற்போதைக்கு குறியீட்டு பெயரால் அழைக்கப்பட்டுவரும் புதிய 5-இருக்கை நடுத்தர அளவு டொயோட்டா எஸ்யூவி கார் மாருதி சுஸுகி பிராண்டிலும் உருவாக்கப்பட உள்ளது.
மற்றொரு, புதிய எம்பிவி கார் ஆனது 560பி என்கிற குறியீட்டு பெயரால் அழைக்கப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள டொயோட்டாவின் பிடாடி தொழிற்சாலை கிட்டத்தட்ட 1 மாத கால மூடலுக்கு பிறகு வருகிற பிப்ரவரி 4ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது. அதன் பிறகே இந்த இரு புதிய கார்களை உருவாக்குவதற்கு தேவையான அளவிற்கு தொழிற்சாலையை டொயோட்டா ஒழுங்குப்படுத்தும் என தெரிகிறது.
இதில் புதிய டொயோட்டா நடுத்தர அளவு எஸ்யூவி கார் நடப்பு 2022ஆம் ஆண்டின் இறுதியில் வரவிருக்கும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தின் போது அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி உடனான கூட்டணியால், ஆசிய நாட்டு சந்தைகளில் விற்பனையில் பல டொயோட்டா மற்றும் டைஹட்சூ கார்களை போன்று இந்த புதிய டொயோட்டா எஸ்யூவி காரும் டிஎன்ஜிஏ (DNGA) ஃப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட உள்ளது.
இதே நடுத்தர அளவு எஸ்யூவி காரின் அடிப்படையில் மாருதி சுஸுகி பிராண்டில் இருந்து கொண்டுவரப்படும் மாடலுக்கு ஒய்.எஃப்.ஜி என குறியீட்டு பெயர் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்னதாகவே அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த எஸ்யூவி காருக்கு சந்தையில் விற்பனையில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர் உள்ளிட்டவை போட்டியாக விளங்கும்.
அடுத்த 2 வருடங்களில் டொயோட்டா மொத்தம் 6 புதிய கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இதில் இவை இரண்டும் அடங்குகின்றன. டொயோட்டா பிராண்டில் இருந்து புதிய நடுத்தர அளவு எஸ்யூவி காரை தொடர்ந்து, 560பி என குறியீட்டு பெயரால் அழைக்கப்படுகின்ற புதிய எம்பிவி கார் ஷோரூம்களை வந்தடைய எப்படியும் அடுத்த 2023ஆம் வருடம் வந்துவிடும்.
டொயோட்டா நிறுவனம் அடுத்ததாக மிக விரைவில் இந்திய சந்தையில் ஹைலக்ஸ் பிக்அப் ட்ரக்கினை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. பிரபலமான ஃபார்ச்சூனர் காரில் பொருத்தப்படும் 2.8 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் உடன் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த பிக்அப் ட்ரக் வாகனத்திற்கு இஸுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்அப் ட்ரக் ஒரேயொரு நேரடி போட்டி மாடலாக விளங்கவுள்ளது.
இவை மட்டுமின்றி, மாருதி சுஸுகி அடுத்ததாக அறிமுகப்படுத்த உள்ள பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரின் அடிப்படையிலான புதிய க்ளான்ஸா மற்றும் 2022 மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் அடிப்படையிலான புதிய அர்பன் க்ரூஸர் காரும் டொயோட்டா பிராண்டில் இருந்து வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ஏனெனில் பலேனோ, விட்டாரா பிரெஸ்ஸாவின் ரீபேட்ஜ்டு வெர்சன்கள் தான் க்ளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் ஆகும்.
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!