Just In
- 56 min ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 7 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 7 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 10 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கே.டி.எம் பைக் விபத்தில் சிக்குவதை தவிர்க்க புதிய கருவி...
இந்தியாவில் இளைஞர்களை கவர்ந்த கே.டி.எம். பைக்கில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற ஒரு புதிய கருவியை அந்நிறுவன ஊழியர்கள் தயாரித்துள்ளனர்.
இந்தியாவில் இளைஞர்களை கவர்ந்த கே.டி.எம். பைக்கில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற ஒரு புதிய கருவியை அந்நிறுவன ஊழியர்கள் தயாரித்துள்ளனர். தற்போது சோதனை கட்டத்தில் உள்ள இந்த கருவி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
ஆஸ்திரிய டூவிலர் நிறுவனமான கே.டி.எம் பைக் நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனையை துவங்க்கியதில் இருந்து இந்திய இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து விட்டது. பல்சர் அப்பாச்சி என்று தங்கள் மனதை கொடுத்தவர்கள் எல்லாம் அங்கிருந்து தங்கள் மனதை பிடுங்கி கே.டி.எம் பைக்கிடம் கொடுத்து விட்டனர்.
இந்த பைக்கின் லுக், ஸ்பீடு, சத்தம் என எல்லாம் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டது. பெருநகரங்களில் பல இளைஞர்கள் இந்த பைக்கில் ரோட்டில் பறப்பதை நாம் அடிக்கடி பார்க்கலாம். ஆனால் அது ஆபத்தான பயணம் தான். இந்த பைக்கின் பிக்கப் மற்றும் வேகம் இளைஞர்களின் மனதை மயக்கி விட்டது.
ஆனால் இந்த பைக் விபத்தில் சிக்கினால் பெரும் சேதத்தை சந்திக்கிறது. ராயல் என்பீல்டு பைக்கும் இதே ரக பைக் தான் என்றாலும் அந்த பைக் முழுவதும் மெட்டலால் ஆனது. அதனால் அந்த பைக் விபத்தை சந்தித்தால் ஆகும் சேதாரத்தைவிட கே.டி.எம். பைக் அதிக சேதராமாகும். ஏன் என்றால் கே.டி.எம் பைக் பிளாஸ்டிக் பைபரால் ஆனது.
தற்போது கே.டி.எம் பைக்கில் உள்ள பெரும் குறையே இது தான் என்பதால் அந்நிறுவனம் இதற்கு சிறந்த தீர்வை கண்டாக வேண்டிய சூழ்நிலை உள்ளது. பைக்கில் மெட்டலை அதிகம் செய்தால் பைக்கின் பிக்கப் மற்றும் வேகம் குறையும். பைக் அதிகமாக விற்பனையாக மூல காரணமே இது இரண்டும் தான்.
சூழ்நிலை இவ்வாறு இருக்க கே.டி.எம். நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு துறை தற்போது பைக்கில் சென்சாருடன் கூடிய க்ரூஸ் கண்ட்ரோலை பொருத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பைக் விபத்தில் சிக்குவதை தவிர்க்க முடிவு செய்துள்ளது.
அதாவது இதுவரை கே.டி.எம். பைக் விபத்தில் சிக்கிய சம்பவங்களை பார்க்கும் போது பைக் வேகமாக சென்று பிரேக் பிடிக்கும் போது ஸ்கிட் ஏற்பட்டு கீழே விழுந்தோ மற்ற வாகனங்களின் மீது மோதியோ விபத்திற்குள்ளாவது தான் அதிகம்.
அதனால் பைக்கின் முன்புறமும் பின்புறமும் சென்றார் போன்ற கருவியை அந்நிறுவனம் பொருத்தவுள்ளது. இந்த கருவி பைக் 30கி.மீ. வேகத்திற்கும் அதிகமாக செல்லும் போது அக்டிவேட் ஆகிவிடும். தொடர்ந்து பைக்கிற்கு முன்புறம் குறுக்கே ஏதேனும் பொருள் வந்தால் அந்த சென்சார் மிக வேகமாக செயல்பட்டு பைக்கின் வேகத்தை கட்டுப்படுத்தி தேவைப்பட்டால் பிரேக்கையும் கட்டுப்படுத்தி பைக்கை கண்ட்ரோலுக்கு கொண்டு வந்துவிடும்.
அந்த நேரங்களில் பைக்கில் இருப்பவர் என்னதான் முயற்சி செய்தாலும் அக்ஸிலேட்டரை திருகினாலும் பைக் அதற்கு செயல்படாது. தற்போது பைக் செல்லும் வேகத்தை பொருத்து இந்த பைக் 2 நொடியில் எவ்வளவு தூரம் செல்லும் என்பதை கணக்கிட்டு அந்த பகுதியை மட்டும் சென்சார் எடுத்து கொள்ளும்.
அதாவது நீங்கள் வேகமாக செல்லும் போது அதிக தூரத்திலும் மெதுவாக செல்லும் போது குறைந்த தூரத்தையும் சென்சார் செய்து அதற்கு ஏற்றார் போல் இந்த கருவி செயல்படும். இந்த கருவி பைக்கில் பொருத்தப்பட்ட பின்பு எவ்வளவு தூரம் சென்சார் செய்ய வேண்டும் என்பதை நாமே செலக்சட் செய்யும் படி இருக்கும்.
இதேபோல் பைக்கின் பின்புறம் உள்ள சென்சார் பகுதிக்குள் ஏதேனும் வாகனம் வந்தால் பைக்கின் சைடு கண்ணாடியில் 3 சிவப்பு விளக்குகள் எரியும். மேலும் பைக்கின் கிளஸ்டர் பகுதியில் உள்ள டச் ஸ்கிரீனில் இது குறித்த எச்சரிக்கை வரும்.
இந்த தொழிற்நுட்பம் தற்போது சோதனை கட்டத்தில் தான் உள்ளது எனவும் இது வெற்றி பெற்றால் , 2020ம் ஆண்டு தயாரிக்கப்படும் கே.டி.எம். பைக்குகள் இந்த தொழிற்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் எனவும் அந்நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உயர்ரக பைக்குகளில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வந்துவிட்டது. இதே போன்று சென்சார் வைத்து பைக்கை கட்டுப்படுத்தும் கருவியை இதற்கு முன்னர் டுகாட்டி நிறுவனம் செய்தது. இந்த முயற்சி இன்னும் சோதனை கட்டத்தில்தான் உள்ளது. தற்போது கே.டி.எம். பைக்கிற்கும் இந்த கருவியை பொருத்த நினைப்பது பைக் உள்ள பாதுகாப்பு அம்சங்களுக்கான முக்கியத்துவத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
-
இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?