Just In
- 19 min ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 3 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 5 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 6 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
Don't Miss!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Movies கில்லி ரீ ரிலீஸ்.. ஆல் ஏரியாலயும் மாஸ்.. முதல் நாளில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா?
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
எஞ்ஜினில் கோளாறு! டீசல் கார்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா! எத்தனை கார்களை திரும்பி அழைக்கிறது தெரியுமா?
டீசல் எஞ்ஜினில் கோளாறு ஏற்பட்டிருப்பதன் காரணத்தினால் சில நூறு கார்களை மஹிந்திரா திரும்பி அழைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
மஹிந்திரா நிறுவனம் அதன் டீசல் எஞ்ஜின் கார்களில் கோளாறு ஏற்பட்டிருப்பதன் காரணத்தினால் அவற்றை திரும்பி அழைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாஷிக் பிளானட்டில் வைத்து உற்பத்தி செய்யப்பட்ட டீசல் எஞ்ஜின் கார்களிலேயே கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்தே குறிப்பிட்ட கால இடைவெளியில் உற்பத்தி செய்யப்பட்ட, கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கும் கார் மாடல்களை நிறுவனம் திரும்பி அழைத்திருக்கின்றது. நடப்பாண்டு ஜூன் 21 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட டீசல் எஞ்ஜின் கார்களிலேயே கோளாறு இருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது.
இதுகுறித்த உரிய கார்களின் உரிமையாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு திரும்பி அழைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அழைப்பின் அடிப்படையில் கோளாறுகள் நிவர்த்தி செய்யும் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணியை நிறுவனம் இலவசமாகச் செய்வதாக கூறப்படுகின்றது.
உற்பத்தியில் ஏற்பட்ட கோளாறு என்கிற காரணத்தினால் இதனை கட்டமின்றி நிறுவனம் செய்கிறது. டீசல் எஞ்ஜினில் ஏற்பட்டிருக்கும் கோளாறானது விரைவில் அதிக மாசை ஏற்படுத்தும் வகையில் பாதிப்பை பெற்றிருக்கின்றது. இதனை முன்கூட்டியே சரி செய்யும் வகையில் நிறுவனம் திரும்பி அழைத்தல் பணியை மேற்கொள்ள தொடங்கியிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 600 யூனிட் கார்களை நிறுவனம் அழைக்க இருக்கின்றது.
எந்த மாடல்களில் இந்த கோளாறு ஏற்பட்டிருக்கின்றது என்பது பற்றிய தகவலை நிறுவனம் வெளியிடவில்லை. நாட்டின் ஐந்தாம் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான இது தார் எஸ்யூவி, ஸ்கார்பியோ, மராஸோ, எக்ஸ்யூவி300, எக்ஸ்யூவி 500 உள்ளிட்ட கார்களை விற்பனைச் செய்து வருகின்றது.
மிக சமீபத்தில் நிறுவனம் பொலிரோ நியோ எஸ்யூவி ரக காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. நடைமுறைக்கு ஏற்ற முரட்டுத்தனமான தோற்றத்தில் இந்த கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த காரின் அடிப்படை தோற்றத்தில் விரைவில் 9 இருக்கைகள் கொண்ட நியோ ப்ளஸ் எனும் தேர்வும் விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய மஹிந்திரா பொலிரோ நியோ கார் ரூ. 8.48 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. டியுவி 300 காரை ரீபிளேஸ் செய்யும் விதமாக இந்த காரை மஹிந்திரா இந்திய கார் சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. பல்வேறு சிறப்பு வசதிகள் மற்றும் அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இக்கார்குறித்த கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
மஹிந்திரா நிறுவனம் பொலியோ நியோ மாடலைத் தொடர்ந்து எக்ஸ்யூவி 700 கார் மாடலையும் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. இந்த காரில் எக்கசக்க சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை வழங்க நிறுவனம் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!