இந்தியர்களிடம் கார் சீட் பெல்டு பயன்படுத்துவதில் போதிய விழிப்புணர்வு இல்லை... ஆய்வு சொல்லும் உண்மை!
இந்தியர்களிடம் கார் சீட் பெல்டு பயன்படுத்துவதில் போதிய விழிப்புணர்வு இல்லை... ஆய்வு சொல்லும் உண்மை..!!
கார்களில் பயணிக்கும் போது பாதுகாப்பிற்காக சீட் பெல்ட்டை மொத்தம் 25 சதவீத வாகன ஓட்டிகளே அணிவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அதில் பெரும்பாலானவர்கள் 81% ஓட்டுநர்கள் சாலைகளில் ஆங்காங்கே நிற்கும் போலீசாருக்கு பயந்தே சீட் பெல்ட்டை பயன்படுத்துவதாக கூறுகிறது.

கார்களில் இருக்கும் முக்கிய பாதுகாப்பு அம்சங்களில் ஏர்பேகுகளின் தேவை முக்கியமான ஒன்று.
இதுபோன்ற தேவைகளை கார்களில் தேர்வு செய்து வாங்கும் தன்மை வாடிக்கையாளர்களிடம் அதிகரித்து வருகிறது.

ஏர்பேகுகளுக்கு பிறகு சீட் பெல்டுகள் தான் பயணிகளின் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால் இதை பயன்படுத்துவர்களின் தேவை மிகக்குறைவே.

ஏர்பேகுகளை காட்டிலும் சீட் பெல்டுகள் தான் கார் பயணங்களின் போது முதன்மை பாதுகாப்பு அம்சம் என தெரிவிக்கப்படுகிறது.
Recommended Video


சமீபத்தில் சீட் பெல்டு பயன்பாடு பற்றி இந்தியாவில் எத்தனை பேரிடம் விழிப்புணர்வு இருக்கிறது என்பதற்காக மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

இந்தியாவின் முக்கியமான 17 நகரங்களில் 2500க்கும் மேற்பட்ட கார் ஓட்டுநர்களிடம் சீட் பெல்டு குறித்த கேள்விகள் முன் வைக்கப்பட்டன.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆய்வின் மூலம் கிடைக்கப்பெற்ற உண்மைகள் பெரிய அதிர்ச்சியை மாருதி சுசுகி நிறுவனத்திற்கு ஏற்படுத்தியுள்ளது.

அதாவது 2500க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் அதில் மொத்தம் 25 சதவீதம் பேர் மட்டுமே சீட் பெல்டு பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
Trending On Drivespark:

இதோடு, இந்தியளவில் நடைபெற்ற கார் விபத்துகளில் 15 பேர் சீட் பெல்டு அணியதாதன் காரணமாகவே உயிரழந்ததாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

சீட் பெல்டு பயன்பாடு குறித்து மாருதி சுசுகி இந்தியா ஆய்வு மேற்கொண்டதில் வேறொரு காரணமும் இருக்கிறது.
உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் சீட் பெல்டு 45 சதவீதம் விபத்துகளால் உயிரழக்கும் வாய்ப்பை குறைக்கிறது.

மேலும், கார் விபத்துகளின் போது சீட் பெல்டு அணிந்திருப்பவர்கள் 50 சதவீததிற்கும் அதிகமானவர்கள் காயங்கள் ஏற்படாமல் காப்பாற்றப்படுகின்றனர்.

கார்களின் முதன்மை பாதுகாப்பு அம்சமாக இருக்கும் இந்த சீட் பெல்டுகளின் பயன்பாடும் இந்தியாவிலும் அதிகரிக்க வேண்டும் என்பதே மாருதி சுசுகி இந்தியா நடத்திய ஆய்வின் நோக்கமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








