Just In
- 1 hr ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 6 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 6 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 7 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஓட்டல் பார்க்கிங்கில் இருக்கும் கார் திருடு போனால் யார் பொறுப்பு.. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!
வாலட் பார்க்கிங்கில் கொடுக்கப்படும் கார் திருடு போனால் யார் பொறுப்பேற்பது என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
கடந்த 1998ம் ஆண்டு டெல்லியில் உள்ள தாஜ் மஹால் ஓட்டலுக்கு காரில் வந்த விருந்தினர் ஒருவர் தனது மாருதி ஸென் காரை பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு தங்கியுள்ளார். ஆனால், திரும்பி வந்து பார்த்தபோது, காரை காணவில்லை.
இதையடுத்து, ஓட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். ஆனால், இதற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது. இது உரிமையாளரின் சொந்த பொறுப்பு என்றும் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து, ஓட்டல் நிர்வாகத்திற்கு எதிராக தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்றுக்கொண்டு குறைதீர் ஆணையம் விசாரணை நடத்தியது. இதில், காரை பறிகொடுத்தவருக்கு ரூ.2.8 லட்சத்தை இழப்பீடாக வழங்க ஓட்டல் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
ஆனால், இழப்பீடு வழங்க மறுத்த ஓட்டல் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. பார்க்கிங் செய்தபோது கொடுத்த ரசீதில், உரிமையாளர்கள் சொந்த பொறுப்பிலேயே காரை விட்டுச் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதாக ஓட்டல் நிர்வாகம் வாதாடியது.
இந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதானந்தகவுதர் மற்றும் அஜய் ரோத்தகி ஆகியோர் அடங்கிய அமர்வு ஏற்கனவே தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.
ஓட்டல் நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்ட வாதங்களை நிராகரித்த நீதிபதிகள்,"ஓட்டல் பார்க்கிங்கில் நிறுத்தப்படும் கார் உள்ளிட்ட வாகனங்கள் காணாமல் போனாலும், சேதம் அடைந்தாலும் அதற்கு ஓட்டல் நிர்வாகம் முழு பொறுப்பேற்க வேண்டும்," என்று தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
அதேநேரத்தில், இதுபோன்ற விஷயத்தில் ஓட்டல் நிர்வாகம் எப்போதுமே பொறுப்பேற்க வேண்டியதில்லை. இயற்கை சீற்றங்கள், உரிமையாளரின் அலட்சியத்தால் சேதம் அடைவது, விதிமீறல் தொடர்பாக அரசு அதிகாரிகள் வாகனங்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட தருணங்களில் ஓட்டல் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டாம் என்றும் தெளிவுப்படுத்தி உள்ளனர்.
வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், சினிமா தியேட்டர்களில் பார்க்கிங் வசதி அளிக்கப்படுகிறது. கார் பார்க்கிங் செய்வதற்காக தனியாக கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. சில நிறுவனங்கள் தங்களது நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை தரும் விதத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில்லை. அவர்கள் வாங்கும் பொருட்களால் வரும் லாபமே போதுமானதாக கருதுகின்றன.
இந்த நிலையில், பார்க்கிங்கிற்காக கொடுக்கப்படும் ரசீதில், காரில் ஏற்படும் சேதம், திருடு போதல் உள்ளிட்டவற்றிற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம் பொறுப்பேற்காது என்று வாசகம் இடம்பெற்றிருக்கிறது. இதனை வைத்து பார்க்கிங்கில் நடக்கும் விபத்துக்கள் மற்றும் திருடு போவது உள்ளிட்டவற்றில் இருந்து சம்பந்தப்பட்ட நிர்வாகம் பொறுப்பேற்பதில்லை. அது உரிமையாளரின் சொந்த பொறுப்பு என்றும் தெரிவித்துவிடுகின்றனர்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. இது நிச்சயம் வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் தீர்ப்பாகவே கருத முடியும்.
-
கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!