Just In
- 59 min ago ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- 2 hrs ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 7 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 8 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
Don't Miss!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சிறிய தவறால் நேரவிருந்த கோர விபத்து டிரைவர்களின் சாமர்த்தியத்தால் தவிர்ப்பு... வைரலாகும் வீடியோ...
சிறிய தவறால் நேரவிருந்த கோர விபத்து, டிரைவர்களின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்ற ஆசை, வாகன ஓட்டிகள் பலரிடம் காணப்படுகிறது. ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அனைத்தும் அதிவேகத்தில் வரும் என்பதால், கூடுதல் கவனத்துடன்தான் பயணிக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது, சிறிய தவறை செய்தால் கூட பெரும் விபத்தில் சிக்கி கொள்ளக்கூடிய அபாயம் உள்ளது. பெரும்பாலான வாகன ஓட்டிகள் சிறிய சிறிய தவறுகளை செய்வதன் காரணமாகதான், விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.
இந்த சூழலில் கார் டிரைவர் ஒருவர் செய்த தவறின் காரணமாக, கார் மற்றும் கனரக லாரி ஆகிய இரண்டும் மோதி கொள்ளும் அபாயம் ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு விட்டது. தற்போது அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!
இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண்-48ல் நடைபெற்றிருக்கும் என கூறப்படுகிறது. அப்போது கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அதன் முன்னால் கனரக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
ஆனால் காரின் டிரைவர் இடது பக்கத்தில் (Left Side) இருந்து லாரியை ஓவர்டேக் செய்ய முயன்றார். அப்போது லாரியும் திடீரென இடது பக்கம் நோக்கி திரும்பியது. இதன் காரணமாக கார் மற்றும் லாரி ஆகியவை மோதி கொள்ளும் அபாயம் ஏற்பட்டது.
இருந்தபோதும் கார் மற்றும் கனரக லாரி ஆகிய இரண்டு வாகனங்களின் டிரைவர்களும் சுதாரித்து கொண்டு வாகனங்களை உடனடியாக ஸ்லோ செய்து விட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இல்லாவிட்டால் 2 வாகனங்களும் மோதி கொண்டிருக்கும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் இடது புறத்தில் இருந்து கனரக லாரி போன்ற வாகனங்களை ஓவர் டேக் செய்வது எவ்வளவு அபாயகரமானது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. இந்த சம்பவங்கள் அனைத்தும் காரின் டேஷ் போர்டு கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த வீடியோவை ரிஷி சின்கா என்பவர் தற்போது யூ-டியூப்பில் வெளியிட்டுள்ளார். பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
வீடியோவை வைத்து பார்க்கையில், இந்த கார் மாருதி சுஸுகி எஸ்-கிராஸ் (Maruti Suzuki S-Cross) ஆக இருக்கலாம் என தெரிகிறது. அதிர்ஷ்டவசமாகதான் இந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து நேரங்களிலும் அதிர்ஷ்டம் கை கொடுக்காது என்பதை வாகன ஓட்டிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!