Just In
- 4 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 4 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 5 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 6 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நீங்கள் மிகவும் நேசித்த இந்த டாடா கார்கள் இந்தியாவில் இருந்து பிரியாவிடை பெற்றன... காரணம் இதுதான்...
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மூன்று மாடல்களின் சில வேரியண்ட்களின் உற்பத்தியை நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
சபாரி, ஜெஸ்ட் மற்றும் போல்ட் மாடல்களின் சில வேரியண்ட்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனையில் இருந்து விலக்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ரஸ்லேன் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கட்டாயமாக இடம்பெற வேண்டிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத சபாரி, ஜெஸ்ட், போல்ட் மாடல்களின் வேரியண்ட்கள்தான் விற்பனையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்காத இந்த வேரியண்ட்களின் உற்பத்தியையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நிறுத்திவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதும் கூட பழைய ஸ்டாக்குகள் காலியாகும் வரை இந்த வேரியண்ட்கள் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.
டாடா சபாரியை பொறுத்தவரை, பேஸ் எல்எக்ஸ் மற்றும் டாப் விஎக்ஸ் 4x4 வேரியண்ட்கள் விற்பனையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டுள்ளன. அதே சமயம் டாடா போல்ட் மற்றும் ஜெஸ்ட் கார்களின் எக்ஸ்இ மற்றும் எக்ஸ்எம் வேரியண்ட்கள் (பெட்ரோல், டீசல்) விற்பனையில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.
ஸ்டாக் முடிந்தபின்பு இவை விற்பனையில் இருந்து முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மேற்கண்ட 3 மாடல்களின் எஞ்சிய வேரியண்ட்கள் அனைத்தும் தொடர்ந்து விற்பனையில் இருக்கும்.
ஏனெனில் அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ள ஏர் பேக்குகள், இபிடி உடனான ஏபிஎஸ் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை அவை பெற்றுள்ளன. இதுதவிர இந்த வேரியண்ட்களில், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் வசதி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்பதற்காக இந்த சிறிய அளவிலான பாதுகாப்பு அப்டேட்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செய்துள்ளது. டாடா சபாரி, ஜெஸ்ட் மற்றும் போல்ட் ஆகிய மாடல்களின் விற்பனை சமீப காலமாக மந்தமாக இருந்து வருகிறது.
இந்திய மார்க்கெட்டில் இந்த கார்களுக்கான டிமாண்ட் குறைந்து கொண்டே வருவதே இதற்கு முக்கியமான காரணம். இருந்தபோதும் அவற்றை உற்பத்தியில் இருந்து முழுமையாக விலக்காமல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ந்து விற்பனையிலேயே வைத்துள்ளது.
இதனிடையே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறிய டீசல் இன்ஜின்களின் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளே இதற்கு காரணம்.
எதிர்வரவுள்ள மிக கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் மற்றும் க்ராஸ் டெஸ்ட் விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக சில மாடல்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்தியில் இருந்து விலக்கி கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அந்த மாடல்கள் எவை? எவை? என்பதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருந்தபோதும் தனது லைன் அப்பில் உள்ள பழைய மற்றும் வயதான மாடல்களின் உற்பத்தியை டாடா மோட்டார்ஸ் கைவிட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலமாக தனது புதிய மாடல்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் தனது லைன் அப்பை முழுவதுமாக சீரமைக்க முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்த சில மாதங்களில், டாடா மோட்டார்ஸின் லைன் அப்பில் பல்வேறு அதிரடியான மாற்றங்கள் நிகழவுள்ளன.
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!