Just In
- 17 min ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 3 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 4 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- News "பேசுவதை எல்லாம் ஒட்டு கேக்குறாங்க.. இதனால நான் செல்போனை யூஸ் பண்றதே இல்லை.." ஹெச்.ராஜா பகீர் புகார்
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் மாரடைப்பால் மரணம்
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் ருத்ரதேஜ் சிங் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 46. அவரது மறைவு ஆட்டோமொபைல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ந் தேதி பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ருத்ரதேஜ் சிங் பதவி ஏற்றார். மிக சவாலான இந்தியாவின் சொகுசு கார் மார்க்கெட்டில் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் விற்பனையை உயர்த்துவம் கொள்கை ரீதியிலான பணிகளில் தீவிரம் காட்டி வந்தார்.
இதனால், பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் விற்பனை நல்ல முறையில் சென்றது. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், ருத்ரதேஜ் சிங் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இளம் வயதிலேயே மிக உயரிய பொறுப்பை ஏற்று திறம் பட செயல்பட்டு வந்தார்.
ஆட்டோமொபைல் துறை மற்றும் ஆட்டோமொபைல் தவிர்த்த பிற துறைகளில் பல உயர் பொறுப்புகளை வகிந்து வந்தார். மேலும், 25 ஆண்டுகளாக பல்வறு தலைமை பொறுப்புகளில் ஏற்று திறம் பட செயல்பட்டு வந்தவர்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சர்வதேச தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்னதாக யூனிலிவர் உள்ளிட்ட பல்வேறு பிரபல நிறுவனங்களின் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான பொறுப்புகளில் பதவி வகித்து வந்த நீண்ட அனுபவம் கொண்டவர். அனைவராலும் ரூடி என்று அன்போடு அழைக்கப்பட்டார்.
டெல்லி பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை முடித்த அவர் காஸியாபாத் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் உயர் கல்வி நிறுவனத்தில் சந்தைப்படுத்துதல் மற்றும் நிதித் துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்தார்.
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குனராக இருந்த தயாள் கடந்த 7ந் தேதிதான் புற்றுநோயால் மரணமடைந்தார். இந்த நிலையில், அடுத்த 15 நாட்களில் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது தலைமையை இழந்து நிற்கிறது.
ருத்ரதேஜ் சிங் திடீர் மறைவு காரணமாக, பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் வர்த்தக செயல்பாடுகள் தடைபடாமல் இருப்பதற்காக, அந்நிறுவனத்தின் நிதித் துறை தலைவர் அர்லிண்டோ டெக்ஸிரா இடைக்கால தலைவராக பொறுப்பு வகிப்பார் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ருத்ரதேஜ் சிங் மறைவுக்கு டிரைவ்ஸ்பார்க் தளம் சார்பில் ஆழந்த இரங்கலையும், அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.