Just In
- 22 min ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 46 min ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 4 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 5 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
Don't Miss!
- News சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரிகள் இடையே மோதல்.. பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் காயம்! பரபர!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
குட் நியூஸ்... புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் புக்கிங் துவங்கும் தேதி வெளியானது
பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ள புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு புக்கிங் துவங்கும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.
ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருந்து வரும் மஹிந்திரா தார் எஸ்யூவி புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய மாடலை உருவத்திலும், தொழில்நுட்பத்திலும் வேற லெவலுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால், இந்த புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை ஆஃப்ரோடு பிரியர்கள் மட்டுமின்றி, சாதாரண வகை எஸ்யூவி பிரியர்கள், பிரபலங்களையும் கவர்ந்து இழுத்துள்ளது.
இந்த நிலையில், வரும் அக்டோபர் 2ந் தேதி மஹிந்திரா நிறுவனத்தின் 75வது ஆண்டு ஸ்தாபகர் தினம் மற்றும் காந்தி ஜெயந்தி தினத்தன்று, புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விலை அறிவிப்புடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அன்றைய தினமே முன்பதிவும் துவங்கப்பட உள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய டீசர் வீடியோ மூலமாக இது தெரிய வந்துள்ளது.
அடுத்து எல்எக்ஸ் என்ற மாடலானது அதிக வசதிகளுடன் எஸ்யூவி வாங்க திட்டமிட்டிருப்போரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், அதிக வசதிகள் கொண்ட மாடலாக இருக்கும்.
புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளது. பெட்ரோல் எஞ்சின் 150 பிஎச்பி பவரையும், டீசல் எஞ்சின் 130 பிஎச்பி பவரையும் வழங்கும். இரண்டு மாடல்களிலுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் வழங்கப்பட உள்ளது.
அதேநேரத்தில், ஏஎக்ஸ் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இருக்காது. எனினும், ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ப மெக்கானிக்கல் லாக்கிங் டிஃபரன்ஷியல், இரண்டு ஏர்பேக்குகள், ரோல் கேஜ் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.
புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், எம்ஐடி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டயர்கள் எந்த நிலையில் உள்ளது என்பதை காட்டும் வசதி, தண்ணீர் புகாத வசதியுடன் மியூசிக் சிஸ்டம் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.
வரும் 2ந் தேதி முன்பதிவு துவங்கப்பட இருக்கும் நிலையில், அடுத்த மாத பிற்பாதியில் டெலிவிரிப் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்ஸ் குர்கா மட்டுமின்றி, சப்-காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களுக்கும் இந்த புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி போட்டியாக இருக்கும்.