Just In
- 29 min ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 5 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 5 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 6 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இன்ஸ்டாகிராமில் லைவ் செய்து கொண்டு காரில் பறந்த மாணவர் பலி...அதிவேகத்தை தவிர்ப்பது எப்படி?
சீட் பெல்ட் அணியாமல், மிக அதிக வேகத்தில் காரை ஓட்டி சென்ற இன்ஜினியரிங் மாணவர் உயிரிழந்தார். அதிக வேகத்தில் கார் ஓட்டுவதை இன்ஸ்டாகிராமில் லைவ்-ஆக ஒளிபரப்பி கொண்டிருந்த அவரது உறவினர் படுகாயம் அடைந்தார்.
சீட் பெல்ட் அணியாமல், மிக அதிக வேகத்தில் காரை ஓட்டி சென்ற இன்ஜினியரிங் மாணவர் உயிரிழந்தார். மிக அதிக வேகத்தில் கார் ஓட்டுவதை இன்ஸ்டாகிராமில் லைவ்-ஆக ஒளிபரப்பி கொண்டிருந்த அவரது உறவினர் படுகாயம் அடைந்தார். இதுபற்றிய செய்தியை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
விதிகளை மீறிய புனே மாணவர்கள்
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர்கள் சுபம் ஜாதவ், ஹரிஸ்கேஷ் பவார். இருவரும் உறவினர்கள். இதில், சுபம் ஜாதவுக்கு 20 வயது ஆகிறது. அவர் இன்ஜினியரிங் மாணவர். ஹரிஸ்கேஷ் பவாருக்கு 18 வயது ஆகிறது. அவர் பி.காம்., முதலாமாண்டு படித்து வருகிறார்.
புனேவுக்கு அருகில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாத் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இருவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். கார் மணிக்கு 120 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட வேகத்தில் பறந்து கொண்டிருந்தது.
சுபம் ஜாதவ் காரை ஓட்டினார். அவரின் உறவினரான ஹரிஸ்கேஷ் பவார், அந்த மின்னல் வேக ரெய்டை, இன்ஸ்டாகிராமில் லைவ்-ஆக ஒளிபரப்பி கொண்டிருந்தார். அப்போது சுபம் ஜாதவ் சீட் பெல்ட்டும் அணியவில்லை.
இதனிடையே மின்னல் வேகத்தில் பறந்ததால், டிரைவர் சுபம் ஜாதவின் கட்டுப்பாட்டை கார் இழந்தது. பின்னர் அங்கிருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் சுபம் ஜாதவ் உயிரிழந்தார். ஹரிஸ்கேஷ் பவார் படுகாயம் அடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுவதுமாக சேதம் அடைந்து விட்டது. அத்துடன் டிரைவரின் உயிரையும் உடனடியாக பறித்து விட்டது.
விபத்து நடக்கும் ஒரு நொடிக்கு முன்பு வரை கூட சுபம் ஜாதவ் சிரித்து கொண்டிருந்தார். ஆனால் ஒரு நொடியில் எல்லாம் மாறிவிட்டது.
ஹரிஸ்கேஷ் பவாரால் எடுக்கப்பட்ட வீடியோ, சுபம் ஜாதவ் சிரித்து கொண்டிருப்பதை காட்டுகிறது. அத்துடன் கார் 120 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட வேகத்தில் சென்று கொண்டிருப்பதை ஸ்பீடோமீட்டர் டிஸ்ப்ளே செய்ததையும் அந்த வீடியோ வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இதனிடையே சுபம் ஜாதவ் லைசென்ஸ் வைத்திருந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மிக அதிக வேகம், சீட் பெல்ட் அணியாதது என போக்குவரத்து விதிமுறைகளை மீறியதே, சுபம் ஜாதவ்வின் வாழ்க்கை கண்ணிமைக்கும் நேரத்தில் முடிவுக்கு வர காரணமாகி விட்டது.
அதிவேகத்தை எப்படி தவிர்க்கலாம்?
மிக அதிக வேகமாக செல்லாமல், இதுபோன்ற விபத்துக்களை எப்படி தவிர்க்கலாம்? என்பது குறித்து சில டிப்ஸ்களை இனி வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
உங்கள் காரில் க்ரூஸ் கண்ட்ரோல் ஆப்ஷன் இருந்தால் அதை பயன்படுத்துங்கள். இதன்மூலம் குறிப்பிட்ட வேகத்தை செட் செய்து கொண்டு காரை நிதானமாக ஓட்ட முடியும்.
காரின் ஸ்பீடோமீட்டரை அவ்வப்போது பார்த்து கொள்ளுங்கள். ஒரு வேளை உங்களையும் அறியாமல் மிக அதிக வேகமாக சென்றால், உடனடியாக வேகத்தை குறைத்து கொள்ள முடியும்.
ஏதாவது ஒரு வேலை தொடர்பாக வெளியே செல்கிறோம். அதற்குதான் காரை பயன்படுத்துகிறோம். அந்த வேலைக்கு சற்று முன் கூட்டியே புறப்படுங்கள். போதிய நேரம் இல்லாமல் வேக வேகமாக புறப்படுவதால்தான், மிக அதிக வேகத்தில் சென்று விபத்தில் சிக்கி கொள்ள நேரிடுகிறது.
வாகனத்தை ஓட்டுவதற்கு முன்பாக உங்களை சற்று ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். பதற்றமாக இருக்க வேண்டாம்.
ஒவ்வொரு சாலைகளிலும், எந்த வேகத்தில் செல்ல வேண்டும் என்பது
குறித்த போர்டு வைக்கப்பட்டிருக்கும். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் வேகத்தை விட 5 கிலோ மீட்டர் குறைவான வேகத்தில் செல்லுங்கள். உதாரணமாக 55 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் என்றால், 50 கிலோ மீட்டர் வேகத்தில் காரை செலுத்துங்கள்.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!