Just In
- 10 min ago ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
- 2 hrs ago 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- 4 hrs ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 5 hrs ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
Don't Miss!
- News மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளது பாமக.. சேர்ந்து மூழ்கப்போகுது.. கூட்டணி பற்றி கமெண்ட் அடித்த காங்கிரஸ்!
- Finance பிரியாணி கடையில் வருமான வரித்துறை ரெய்டு.. அட பெங்களூர் மேக்னா புட்ஸ்-ப்பா..!!
- Sports மும்பை அணியில் சூர்யகுமார் இல்லை? சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவால் ரசிகர்கள் சோகம்.. என்ன நடந்தது?
- Movies மீண்டும் பைக்கை எடுத்த அஜித்.. அப்போ விடாமுயற்சி அவ்ளோதானா?.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட செம பிக்!
- Technology மார்ச் 22 உறுதி.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது அசத்தலான போன்.. எந்த மாடல்?
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
ஆஸ்திரேலியாவில் அரங்கேறிய தரமான சம்பவம்... வெற்றிகரமாக டேக்-ஆஃப் ஆனது உலகின் முதல் பறக்கும் மின்சார கார்...
ஆஸ்திரேலியாவில் உலகின் முதல் பறக்கும் மின்சார கார் டேக்-ஆஃப் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
உலகின் முதல் பறக்கும் மின்சார கார் டேக்-ஆஃப் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மிக விரைவில் இப்-பறக்கும் மின்சார கார் பயன்பாட்டிற்கு வரும்நிலையில் இந்த சோதனையோட்டம் ஆஸ்திரேலியாவில் செய்யப்பட்டிருக்கின்றது.
நடப்பாண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டிற்குள் ஆலாடா ஏர்ஸ்பீடர் எம்கே3 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த பறக்கும் மின்சார கார் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நான்கு மீட்டர் நீளமுள்ள மல்டி-காப்டர் ரக மின்சார பறக்கும் காராகும்.
ஆஸ்திரேலியா விமானத்துறையின் ஒப்புதலுடன் தெற்கு ஆஸ்திரேலியாவின் பாலை வன பகுதியில் வைத்து இந்த பறக்கும் மின்சார கார் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. அப்போது வெற்றிகரமாக பறக்கும் கார் டேக்-ஆஃப் ஆகி மீண்டும் தரையிறங்கியிருக்கின்றது. இந்த சோதனையோட்ட வெற்றியை அடுத்து விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது.
130 கிலோ எடையில் மின்சார பறக்கும் கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதிக வேகம், கூடுதல் ரேஞ்ஜை வழங்கும் பொருட்டில் இலகு ரக பறக்கும் காராக இது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக வேகத்தில் பறக்கும் வேண்டும் என்பதற்காக மின்சார பறக்கும் வாகனத்தை எஃப்1 ஸ்போர்ட்ஸ் ரக கார் உருவத்தில் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.
இது மணிக்கு 150 கிமீ முதல் 250 கிமீ வரையிலான வேகத்தில் பறக்கும். விமானத்தின் காக்பிட் பகுதியுடன் பறக்கும் கார் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது ஆய்வு பணிகளில் இவ்வாகனம் ஈடுபடுத்தப்பட்டு வருவதால் டெலிரோபோக்கள் வாயிலாக பறக்கும் கார் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால், பயன்பாட்டிற்கு வரும்போது மனிதர்கள் அமர்ந்து பயணிக்கும் வகையில் இருக்கும்.
இந்த பறக்கும் மின்சார கார் குறித்து நிறுவனம் கூறியாதவது, "நாங்கள் காக்பிட்டில் ஒரு ரோபோவை நிலை நிறுத்தியுள்ளோம். அது தரையில் ஒரு பைலட்டுடன் இணைக்கப்பட்டது. பைலட் தலையைத் திருப்பும்போது, ரோபோவும் தலையைத் திருப்பும். இவ்வாறு பைலட்டின் அனைத்து செயல்களையும் காப்பி செய்து அது செயல்படும் திறனில் அது உருவாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
இவ்வாறே பறக்கும் கார் ஆஸ்திரேலியாவில் சோதனையோட்டத்தை மேற்கொண்டிருக்கின்றது. 15 நிமிடம் ஆயுள்கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரி மூலம் பறக்கும் கார் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. பயன்பாட்டிற்கு வரும்போது இது ஓலா, உபேர் போன்ற ரைடு-ஷேரிங் நிறுவனங்களின்கீழ் வரும் என நிறுவனம் கூறியிருக்கின்றது.
ஆகையால், மிக விரைவில் இவ்வுலகில் பறக்கும் கார்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பது உறுதியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த பறக்கும் காரின் சோதனையோட்டம் அமைந்துள்ளது.