Just In
- 1 hr ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 2 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 4 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 11 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஒரகடம் ஆலையில் உற்பத்திப் பணிகளை துவங்கியது ராயல் என்ஃபீல்டு
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டு இருந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஓரகடம் ஆலையில் உற்பத்திப் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன. அதேபோன்று, குறிப்பிட்ட பகுதிகளில் டீலர்கள் திறக்கப்பட்டு வர்த்தக நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கொரோனா பிரச்னை இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்ததால், கடந்த மார்ச் 24ந் தேதி முதல் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், கார், பைக் உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்களும், அதன் டீலர்களும் மூடப்பட்டுள்ளன. வரும் 17ந் தேதி வரை தேசிய ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி, சென்னை அருகே ஓரகடத்தில் செயல்பட்டு வரும் ஆலையில் உற்பத்திப் பணிகளை நேற்று முதல் துவங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த ஆலையில் படிப்படியாக உற்பத்தி எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓரகடம் ஆலையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பணியாளர்களை பணிக்கு திரும்ப அழைத்துள்ளது ராயல் என்ஃபீல்டு. மேலும், ஊரடங்கு முழுவதுமாக நீக்கப்பட்டவுடன் அனைத்து பணியாளர்களுடன் உற்பத்திப் பணிகளை சீரடைய செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆலையில் சமூக இடைவெளி விதிமுறைகளையும், தூய்மை பணிகளையும் கடைபிடித்து உற்பத்திப் பணிகளை துவங்கி இருக்கிறது ராயல் என்ஃபீல்டு. அடுத்த கட்டமாக, சென்னை திருவொற்றியூர் மற்றும் வல்லம் வடகல் பகுதிகளில் உள்ள ஆலைகளிலும் உற்பத்திப் பணிகளை துவங்க திட்டமிட்டுள்ளது.
மேலும், சென்னை, குர்கான் நகரங்களில் இயங்கி வரும் கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் இங்கிலாந்தில் உள்ள தொழில்நுட்ப மையம் ஆகியவை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். இந்த அலுவலகப் பணியாளர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனனர்.
இதனிடையே, கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் செயல்படும் 120 டீலர்கள் திறக்கப்பட்டு விற்பனை பணிகள் துவங்கப்பட்டு இருப்பதாக ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது. இந்த மாத மத்தியில் 300 ஷோரூம்கள் வரை செயல்பட துவங்கும். கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளுடன் திறக்கப்பட்ட ஷோரூம்களில் வர்த்தகப் பணிகள் நடைபெறும்.
-
இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?