Just In
- 50 min ago இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
- 2 hrs ago ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
- 3 hrs ago ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
- 5 hrs ago ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!
Don't Miss!
- Sports ரஹானே தொடக்க வீரராக மாறியது ஏன்? சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் மாற்றம் வருகிறது.. மைக்கில் ஹஸி கருத்து
- News கர்நாடக பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா கட்சியிலிருந்து நீக்கம்! இரவோடு இரவாக வந்த உத்தரவு! என்னாச்சு?
- Lifestyle மேஷத்தில் வரப்போகும் கஜலக்ஷ்மி யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறப்போகுதாம்!
- Technology பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- Movies Durai: தேசிய விருது இயக்குநர் துரை காலமானார்.. பசி படத்தால் கவனம் ஈர்த்தவர்!
- Finance ஓரே அறிவிப்பு, மொத்த முதலீட்டாளர்களுக்கும் ஹேப்பி..!! அம்பானி கொடுத்த டிவிடென்ட் சர்பரைஸ்..!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு இனி தாராளமாக உதவலாம்!
சாலை விபத்தில் சிக்கி காயமடைந்து உயிருக்கு போராடுபவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உதவுபவர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது என்று போலீசாரை மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. இதற்கான, புதிய விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்ற முன் வருபவர்கள், போலீஸ் விசாரணைக்கு பயந்து ஒதுங்கி விடுகின்றனர். இதனால், பல ஆயிரம் பேர் உதவியின்றி, உயிரிழக்கும் அவலநிலை காணப்படுகிறது. இதனை தவிர்க்கும் விதத்தில், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற உதவி செய்பவர்களுக்கு, போலீசார் இனி தொந்தரவு தராத வகையில் 5 முக்கிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அவற்றை ஸ்லைடரில் காணலாம்.
புதிய விதிகள்
சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவி செய்ய முன்பவர்களை நடத்த வேண்டியதற்கான Standard operating procedure[SOP] எனப்படும் முறையாக பின்பற்றப்பட வேண்டிய விதிகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இந்த புதிய விதிகள் பற்றிய விபரங்களை தொடர்ந்து காணலாம்.
01. அவமரியாதை
சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்கள் பற்றியோ அல்லது அவர்களை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்ப்பவர்களையும் குற்றவாளிப் போல பார்க்கக்கூடாது. அவர்களை போலீசார் மரியாதையுடன், கண்ணியத்துடன் நடத்த வேண்டும்.
02. பாகுபாடு
பாலினம், மதம், ஜாதி, நாடு போன்றவற்றை வைத்து உதவி செய்தவரிடம் பாகுபாடு காட்டக்கூடாது.
02. தனிப்பட்ட தகவல்கள்
உதவி செய்பவர்களின் முகவரி, தொடர்பு எண் போன்றவற்றை கேட்டு வற்புறுத்தக்கூடாது. அவர்களாக முன்வந்து அளித்தால் மட்டுமே விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
03. விசாரணை
விபத்து குறித்து சாட்சி சொல்ல முன் வருவோரின் வசதியான நேரத்தில் மட்டுமே விசாரணை நடத்த வேண்டும்.
04. சாதாரண உடையில்...
சாட்சி சொல்ல முன் வருபவரின் வீட்டில் சென்று விசாரணை நடத்தலாம். விசாரிக்க செல்லும்போது போலீசார் சீருடையை தவிர்த்து, சாதாரண உடையில் செல்ல வேண்டும்.
05. அலைக்கழிப்பு
சாலை விபத்தை நேரில் பார்த்தவர் போலீஸ் நிலையம் வந்து தகவல்களை அளிக்கும்பட்சத்தில் அவரிடம் ஒரே ஒரு முறை மட்டுமே விசாரணை நடத்த வேண்டும். விசாரணை என்ற பெயரில் அலைகழிக்கக்கூடாது.
06. விசாரணை மொழி
உதவி செய்ய முன் வருபவருக்கு தெரிந்த மொழியிலேயே விசாரணை நடத்த வேண்டும். விசாரணை அதிகாரிக்கு அந்த மொழி தெரியாவிட்டால், மொழி பெயர்ப்பாளரை வைத்து விசாரிக்க வேண்டும்.
07. அதிகாரி கண்காணிப்பு
போலீஸ் நிலையங்களில் இந்த புதிய விதிமுறைகள் முறையாக பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட மண்டலம் அல்லது மாவட்டத்தின் போலீஸ் கண்காணிப்பாளர் அல்லது காவல்துறை இணை ஆணையர் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
-
மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
-
ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!