Just In
- 1 hr ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 6 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 6 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 7 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மோடி சார் நீங்க சொன்ன வட மாநில இளைஞர்கள் இவங்கதானா? இந்த செயலுக்குதான் நாடே பெருமிதப்படுகிறதா?
போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த 3 வட மாநில இளைஞர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த காரியம் பிரதமர் மோடி குறிப்பிட்டதற்கு நேர் எதிராக உள்ளது.
போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த 3 வட மாநில இளைஞர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த காரியம் பிரதமர் மோடி குறிப்பிட்டதற்கு நேர் எதிராக உள்ளது.
இந்தியாவில் கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுமக்களின் வாங்கும் திறன் அதிகரித்திருப்பதே இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் கொள்ளையடிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் மறுபக்கம் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக நகர பகுதிகளில்தான் அதிக அளவிலான வாகனங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.
சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இட பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் அங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய இடம் கிடைப்பதில்லை. எனவே வீடு, அலுவலகங்களுக்கு வெளியே பாதுகாப்பற்ற முறையில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுகின்றன.
இதனை கொள்ளையர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களை கொள்ளையர்கள் இரவு நேரங்களில் எளிதாக திருடி சென்று விடுகின்றனர்.
அத்துடன் ஜிபிஎஸ் டிவைஸ் பொருத்துவது போன்ற பாதுகாப்பு அம்சங்களுக்கு வாகன உரிமையாளர்கள் உரிய முக்கியத்துவம் தருவதில்லை. இதன் காரணமாக கொள்ளையடிக்கப்படும் வாகனங்கள் எங்கே உள்ளது? என்பதை கண்டறிவது மிக கடினமான விஷயமாக மாறிவிடுகிறது.
இந்தியாவில் அதிக அளவில் வாகனங்கள் கொள்ளையடிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாக என்சிஆர் (NCR) எனப்படும் தேசிய தலைநகர் பிராந்தியம் (National Capital Region) உள்ளது. டெல்லி, மீரட், குர்கான், நொய்டா உள்ளிட்ட நகரங்கள் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் கீழ் வருகின்றன.
தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வந்தன. எனவே வாகன கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி செய்து வந்தனர்.
இந்த சூழலில் ரவீந்தர், அசோக் மற்றும் அன்வர் ஆகிய மூன்று பிரபல கொள்ளையர்கள் தற்போது டெல்லி போலீசார் பிடியில் சிக்கியுள்ளனர். அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எனவே போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளில் மிகவும் ஆக்டிவ் ஆக செயல்பட்டு வந்துள்ளனர்.
நியூஸ் 18 வெளியிட்டுள்ள செய்தியின்படி, அவர்கள் மூவர் மீதும் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. டொயோட்டா பார்ச்சூனர், ஹூண்டாய் கிரெட்டா, மஹிந்திரா ஸ்கார்பியோ போன்ற பிரீமியம் எஸ்யூவி கார்களை குறிவைத்து அவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
பின்னர் அந்த கார்களை, செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் நல்ல விலைக்கு விற்பனை செய்துள்ளனர். க்ரைம் மற்றும் க்ரிமினல் டிராக்கிங் நெட்வொர்க் மற்றும் சிஸ்டம்ஸ் (CCTNs-Crime and Criminal Tracking Network and Systems) உதவியுடன்தான் அவர்கள் மூவரையும் போலீசார் பிடித்துள்ளனர்.
வட மாநில இளைஞர்களை நினைத்து நாடே பெருமிதம் கொள்வதாக பிரதமர் மோடி ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். ஆனால் கொள்ளை வழக்கு என்றால் பெரும்பாலும் வட மாநில இளைஞர்கள்தான் சிக்குகின்றனர். தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு கொள்ளை சம்பவங்களை பீகார், உத்தரபிரதேசம் மாநிலத்தினர்தான் அரங்கேற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!