Just In
- 34 min ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 5 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 5 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 6 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அரசனை நம்பி புருசனை கைவிட்டு விட கூடாது.. மோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..
ஈரான் மீது அமெரிக்கா கொண்டு வரவுள்ள பொருளாதார தடை ஈரானிற்கு பெரும் துயராக இருக்கிறதோ இல்லையோ, இந்தியாவிற்கு பெரும் தலைவலியாக உள்ளது. இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் 3வது பெரிய நாடு ஈரான்
ஈரான் உடனான பெட்ரோல் வர்த்தகத்தில் அமெரிக்காவால் தடை ஏற்பட்டும் வாய்புள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டு பெரும் அளவில் பெட்ரோல் விலை ஏற வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க சவுதி, நைஜிரியா, வெனிசுலா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் அளவை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா கொண்டு வரவுள்ள பொருளாதார தடை ஈரானிற்கு பெரும் துயராக இருக்கிறதோ இல்லையோ, இந்தியாவிற்கு பெரும் தலைவலியாக உள்ளது. இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் 3வது பெரிய நாடு ஈரான். இந்த நாட்டுடன் நவம்பர் 4ம் தேதிக்கு பின்பு கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்யக்கூடாது என அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இதற்கிடையில் உலகில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் மூன்றாவது பெரிய நாடான இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டி வருகிறது. அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, டீசல் மற்றும் எல்பிஜிகளுக்கான விலை உயர்வு, பெட்ரோல் பொருட்கள் மீது அரசு கொண்டு வந்த வரி குறைப்புகள் என இந்திய பொருளாதாரம் கரடி கையில் சிக்கியுள்ளது.
இந்நிலையில் ஈரானில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெயின் வரத்து நின்று போனால் இந்தியாவில் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்படும். அவ்வாறு தட்டுபாடு ஏற்படும் பட்சத்தில் பெட்ரோல், டீசலுக்கான விலை மேலும் அதிகரிக்கும். இதை தவிர்க்க இந்தியா தீவிரமாக முயன்று வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவை எதிர்த்து ஈரானுடன் தொடர்ந்து கச்சா எண்ணெயை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. தற்போது டாலர் விலைக்கு கச்சா எண்ணெய் வர்த்தகம் நடந்து வரும் நிலையில், நவம்பர் 4ம் தேதிக்கு பின் ஈரானுடன் எந்த நாடும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை டாலர் விலையில் வைத்துக்கொள்ள முடியாது.
இதற்காக ஈரானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்திய பின்பு தற்போது ஈரான் இந்திய ரூபாயின் மதிப்பிலேயே வர்த்தகம் செய்ய ஒப்பு கொண்டுள்ளது. அமெரிக்காவின் தடையை மீறி இந்தியா தற்போது ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பது அமெரிக்கா அதிபர் டிரம்ப்பை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
ஆட்டோமொபைல்ஸ் பற்றியை தகவல்களை தினமும் உங்கள் டெலிகிராம் செயலி மூலமாக பெற இங்கே கிளக் செய்யுங்கள்
இதனால் எதிர்காலத்தில் ஈரான் உடனான வர்த்தகம் பாதிக்கப்பட்டால் அதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய சூழலை தற்போதே அரசு யோசித்தாக வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. அதனால் தற்போது எதிர்காலத்தில் ஈரான் உடனான வர்த்தகம் நிறுத்தப்பட்டால் அப்பொழுது ஏற்படும் தட்டுபாட்டை போக்க சவுதி அரேபியாவுடன் கரம் கோர்க்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஹாலித் அல் ஃபாலித் கூறுகையில்"ஈரான் உடன் வர்த்தகம் நிறுத்தப்பட்டால் அதன் காரணமாக ஏற்படும் கச்சா எண்ணெய் தட்டுபாட்டை சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகம் செய்து சமன் படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இது மட்டும் அல்ல நைஜிரியா, லிபியா, வெனிசுலா, ஆகிய நாடுகளில் இருந்தும் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் ஈரான் வர்த்தகம் நின்றாலும் அதனை ஈடு செய்ய மற்ற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும்.
தற்போது இந்தியாவில் தினமும் 2-3 மில்லியன் பேரல் ஒரு நாள் விதம் ஒரு ஆண்டிற்கு சேமித்து வைக்க 10 பில்லியன் டாலர் அளவிற்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது சவுதி அரேபியாவால் 12 பில்லியன் பேரலை ஒரு நாளுக்கு தயாரிக்க முடியும். ஆனால் தற்போது 10.7 பில்லியன் பேரல்களை மட்டுமே தயாரித்து வருகிறது.
தற்போது இந்தியாவில் தினமும் 2-3 மில்லியன் பேரல் ஒரு நாள் விதம் ஒரு ஆண்டிற்கு சேமித்து வைக்க 10 பில்லியன் டாலர் அளவிற்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது சவுதி அரேபியாவால் 12 பில்லியன் பேரலை ஒரு நாளுக்கு தயாரிக்க முடியும். ஆனால் தற்போது 10.7 பில்லியன் பேரல்களை மட்டுமே தயாரித்து வருகிறது.
தற்போது இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால் பெட்ரோல் விலை சுலபமாக மூன்று இலக்க விலையை எட்டி விடும். அதனால் தான் இந்த நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்படுகிறது" என கூறினார்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 81.23 அமெரிக்க டாலரின் விலையில் வர்த்தகமாகிறது.
இந்த மாதம் இந்த விலை 86.74 அமெரிக்க டாலர் என்ற உச்சத்திற்கு சென்றது. இது கடந்த 4 ஆண்டுகளில் எட்டாத விலையாகும்.
இதற்கிடையில் ஃபாலித் மேலும் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் சவுதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியாவிற்கு பெட்ரோலிய தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க உறுதி செய்துள்ளனர்.
மேலும் சவுதியை சேர்ந்த சவுதி அராம்கோ என்ற நிறுவனம் இந்தியாவிற்கு கூடுதலாக 4 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை வரும் நவம்பர் மாதம் முதல் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் இந்தியாவில் பெட்ரோலிய விற்பனையில் சவுதி நாடு முதலீடு செய்ய முன் வரவேண்டும் என்றும், குறிப்பாக சவுதி அராம்கோ நிறுவனம் நேரடியாக இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது இந்தியா 6.5 மில்லியன் டன் கச்சா எண்ணெய்களை சேமித்து வைக்க இரண்டு இடங்களில் சேமிப்பு கிட்டங்கிகள் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 110 பில்லியன் பணத்தை தனியா நிறுவனத்துடன் சேர்ந்து முதலீடு செய்துள்ளது.
மேலும் சவுதி அரோம்கோ நிறுவனம் ரத்தினகிரி ரிபைனரியிங் 25 சதவீத பங்கை வாங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எங்கள் செய்திகளை உங்கள் மொபைலில் நேரடியாக பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!
மொத்தத்தில் இந்தியாவில் பெட்ரோல் விலை மூன்று இலக்கை தொடும் தூரம் வெகு தொலைவில் இல்லை. ஈரானுடனான வர்த்தகம் பாதிக்கப்பட்டால் அடுத்த மாதமே பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்ட அதிக வாய்ப்புள்ளது என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?