Just In
- 1 hr ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 6 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 6 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 7 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...
மஹிந்திரா-ஃபோர்டு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகவுள்ள சி-எஸ்யூவி ரக கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா (Mahindra) மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு (Ford) ஆகிய இரண்டு நிறுவனங்களும், இந்தியா உள்பட வளர்ந்து வரும் நாடுகளுக்கு, எலெக்ட்ரிக் கார்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பிளாட்பார்ம்களை உருவாக்குவதற்காக ஒன்றாக கை கோர்த்துள்ளன. இதுதவிர மார்க்கெட்டில் தங்கள் நிலையை உயர்த்தி கொள்வதற்காகவும், இரு நிறுவனங்களும் ஒன்றுக்கொன்று உதவி செய்து கொள்ளவுள்ளன.
Note: Images used are for representational purpose only.
மஹிந்திரா மற்றும் ஃபோர்டு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்படும் முதல் மாடல் 2020ம் ஆண்டின் இறுதியில் வரவுள்ளது. புதிய ஃபோர்டு சி-செக்மெண்ட் எஸ்யூவி (C-segment SUV) காரானது, 2020ம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படும் எனவும், 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கும் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் ஆல் நியூ எக்ஸ்யூவி500 எஸ்யூவி (Mahindra XUV500 SUV) காரை, 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த அடுத்த தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் பிளாட்பார்மைதான், புதிய ஃபோர்டு சி-எஸ்யூவி பயன்படுத்தி கொள்ளவுள்ளது என்பது ஆச்சரியமளிக்கும் விஷயம்.
பிளாட்பார்ம் மட்டுமல்லாது, அடுத்த தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் இன்ஜினையும், புதிய ஃபோர்டு சி-எஸ்யூவி பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அடுத்த தலைமுறை எக்ஸ்யூவி500 காரை உற்பத்தி செய்யப்படவுள்ள மஹிந்திரா நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான், புதிய ஃபோர்டு சி-எஸ்யூவி காரும் உருவாக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எங்களின் சிறந்த கார் செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
பிளாட்பார்ம் மற்றும் இன்ஜின் ஆகியவை மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து வந்தாலும், ஃபோர்டு சி-எஸ்யூவி காரானது ஃபோர்டு நிறுவனத்திற்கே உரித்தான புதிய டிசைன் மற்றும் இன்டீரியர்களை பெற்றிருக்கும். இதற்கான பணிகளில் ஃபோர்டு நிறுவனத்தின் இன்ஜினியர்கள் ஈடுபட்டுள்ளனர். 5 மற்றும் 7 சீட்டர் மாடல்களில், புதிய ஃபோர்டு சி-எஸ்யூவி அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எங்களின் சிறந்த பைக் செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
இதன் டிசைன் மற்றும் இன்டீரியர்கள் தொடர்பாக வேறு விரிவான தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை என்றாலும், டிரெண்ட்டிங்கில் உள்ள அனைத்து வசதிகள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டியுடன் கூடிய பெரிய SYNC3 இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், சன்ரூஃப், லெதர் இருக்கைகள், ட்யூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட் உடன் கூடிய ஸ்மார்ட் கீ எண்ட்ரி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படலாம்.
எங்கள் நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ் மற்றும் டிரிக்ஸ் செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
புதிய ஃபோர்டு சி-எஸ்யூவி காரில், ஆல் நியூ 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த இன்ஜினை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 180 பிஎச்பி பவரை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த இன்ஜின், முதலில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
வேடிக்கையான வைரல் வீடியோக்களை காணவும், ஆஃப் பீட் செய்திகளை படிக்கவும் இங்கே கிளிக் செய்யுங்கள்
பிஎஸ்-6 (BSVI) மாசு உமிழ்வு விதிகளுக்கு இணங்கும் வகையில் இந்த இன்ஜின் இருக்கும். புதிய ஃபோர்டு சி-எஸ்யூவி காரின் பெட்ரோல் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதன் இன்ஜின் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் என 2 வெர்ஷன்களும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டாடா ஹாரியர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் இது போட்டியிடும்.
தமிழ் டிரைவ்ஸ்பார்க்கில் அதிகம் வாசிக்கப்பட்ட டாப் 3 செய்திகள்
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!