Just In
- 21 min ago ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- 1 hr ago ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- 3 hrs ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 8 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
Don't Miss!
- News விடிவுகாலம்.. தேர்தல் முடிந்ததும் சென்னையின் முக்கிய பகுதி அடியோடு மாறுகிறது.. பிரம்மாண்ட பாலம் ரெடி
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Movies இன்ஸ்டாவில் காதலரின் போட்டோக்களை டெலிட் செய்த ஸ்ருதிஹாசன்.. சாந்தனுவை பிரிந்தாரா?
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஸ்கோடா சூப்பர்ப் காருக்கு அட்டகாசமான கடன் திட்டம் அறிமுகம்!
ஸ்கோடா சூப்பர்ப் காருக்கு புதுமையான கடன் உதவி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் குறித்த விரிவானத் தகவல்களை காணலாம்.
ஸ்கோடா சூப்பர்ப் காருக்கான இந்த சிறப்பு திட்டமானது EasyBuy என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த திட்டத்தின்படி பல்வேறு அனுகூலங்களை வாடிக்கையாளர்கள் பெறும் வாய்ப்புள்ளது.
ஸ்கோடா சூப்பர்ப் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் இந்த ஈஸிபை திட்டத்தை தேர்வு செய்தால், ஸ்கோடா ஃபைனான்சியல் சர்வீசஸ் நிதி நிறுவனத்தின் வாயிலாக முதல் மூன்று ஆண்டுகளுக்கு காரின் விலையில் 100 சதவீதம் அளவுக்கு கடன் பெற முடியும். இதில், 40 சதவீத கடனை மாதத் தவணையாக மாற்றி மூன்று ஆண்டுகளுக்கு செலுத்தலாம்.
மூன்று ஆண்டுகள் முடிவில் காரை தொடர்ந்து பயன்படுத்த விரும்பாவிடில் காருக்கு 57 சதவீத விலை மதிப்புடன் திரும்ப ஒப்படைக்க முடியும். காரின் தேய்மானம், ஓடிய தூரத்திற்கான வரம்பு உள்ளிட்ட நிபந்தனைகளின்படி காரை ஸ்கோடா டீலர்களே திரும்ப பெற்றுக் கொள்வர். இதனால், வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த மதிப்பை பெற முடியும்.
இந்த பைபேக் திட்டத்தின்படி, மூன்று ஆண்டுகளில் 45,000 கிமீ தூரம் வரை காரை வாடிக்கையாளர் பயன்படுத்த இயலும். இதைத்தாண்டி பயன்படுத்தினால், அதற்கு தக்கவாறு பைபேக் மதிப்பில் கழிவு செய்து கொண்டு காரை ஸ்கோடா பெற்றுக்கொள்ளும். உதாரணத்திற்கு, மூன்று ஆண்டுகளில் 50,000 கிமீ வரை பயன்படுத்தி இருந்தால் தோராயமாக ரூ.1 லட்சம் வரை கழிவு செய்யப்படும்.
ஒருவேளை, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு காரை தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால், மீதமுள்ள தொகையை செலுத்தியோ அல்லது மறுகடன் பெற்று மாதத் தவணையில் திரும்ப செலுத்த முடியும். மேலும், ஈஸிபை திட்டத்தின்படி, புதிய ஸ்கோடா கார் வாங்கினால் இந்த பைபேக் மதிப்பை பயன்படுத்தி சிறப்பு தள்ளுபடி மற்றும் சேமிப்புச் சலுகைகளை பெற முடியும்.
இந்த பைபேக் திட்டத்தில் காரின் விலை ரூ.23.99 லட்சமாக இப்போது வாங்கினால் மூன்று ஆண்டுகள் கழித்து ரூ.13,67,430 என்ற மதிப்பில் காரை திரும்ப பெற்றுக் கொள்ளப்படும். அதாவது, காரின் மறுவிற்பனை மதிப்பாக இந்த தொகை கருதி திரும்ப பெறப்படும். இந்த திட்டத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ரூ.48,663 என்ற மாதத் தவணையை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டி இருக்கும்.
இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த மதிப்பை தரும் என்று ஸ்கோடா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் ஆர்வமுடன் இணைந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
-
இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!