Just In
- 30 min ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 5 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 5 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 6 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சொந்த செலவில் சூன்யம்: டிக் டாக் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள ஜீப்பை நடுரோட்டில் எரித்த இளைஞர்
டிக் டாக் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள ஜீப் காரை இளைஞர் ஒருவர் நடுரோட்டில் வைத்து எரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
சமூக வலை தளத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்கு, இளைஞர்கள் பலர் வித்தைகளைக் காட்டியவாறு வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக்கி வருகின்றனர்.
இத்தகைய இளைஞர்களைக் கவருகின்ற வகையிலான செல்ஃபோன் மென்பொருள்கள் அண்மைக் காலங்களாக அதிகம் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு, அறிமுகம் செய்யப்பட்ட செயலிதான் டிக்டாக்.
இந்த மென்பொருள், இளைஞர்களின் நடிப்பு திறனை வெளிப்படுத்தும் வகையில் பின்னணியில் இசை அல்லது வசனத்தை ஒலிக்க செய்து, அவர்களின் அசைவுகளை பதிவு செய்யும். மேலும், அவர் மட்டுமின்றி அந்த வீடியோவை உலகமே பார்க்கும் வகையில் வைரலாக்கும். இதனால், தற்போதைய இளம் சந்ததியினர் பேஸ்புக், வாட்ஸ்ஆப், டுவிட்டர் இவற்றிற்கு அடுத்தபடியாக டிக்டாக் செயலிலையும் பயன்படத்தி வருகின்றனர்.
மேலும், உலகளவில் டிரெண்டாக வேண்டும் என்பதற்காக, சில வீடியோக்களை அவர்கள் வெளியிடுகின்றனர். அவ்வாறு, வெளியிடும் வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்தாத வரை அவர்களுக்கு நல்லதுதான். மாறாக, விதிகளை மீறும் வகையில் வீடியோக்கள் வெளியிடப்பட்டால், அதற்கான பலனை அவர்கள் அடைந்தே தீருவார்கள்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த ஓர் இளைஞர், டிக்டாக் வீடியோவில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக, அவரது ஜீப்பை பொது சாலையின் மையப் பகுதியில் வைத்து தீயிட்டு கொளுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம், ராஜ்கோட் பகுதியில் உள்ள பிரபல கோத்தாரியா சாலையில் அரங்கேறியிருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும், அதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. வீடியோவில், ஜீப்பின் முன்பக்கம் சாதரணமாக நின்றுக் கொண்டிருந்த ஓர் இளைஞர், அதன்மீது தீக்குச்சியை வீசுகின்றார். உடனே, அந்த கார் மலமலவென பற்றிய எரிய ஆரம்பிக்கின்றது. இதற்கு முன்னதாக அந்த கார்மீது, அவர் எரிபொருள் ஊற்றியிருந்தார். இதன்காரணமாகவே, அந்த கார் மலமலவென தீ பற்றியெரிந்தது.
இச்சம்பவம் குறித்து அறிந்த வந்த போலீஸார், அந்த இளைஞரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அதேசமயம், சம்பவம் தீயணைப்பு துறை நிலையத்திற்கு முன்னதாகவே நடைபெற்றதால், தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், இதுகுறித்த முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இச்சவம்பத்தை அரங்கேற்றியவர் அதேப் பகுதியைச் சேர்ந்த இந்திரஜித் ஜடேஜா என்பது தெரியவந்துள்ளது. இவர், ஜீப்பை எரித்த வீடியோவை, அவரது சொந்த டிக் டாக் கணக்கில் பதிவிட்டாரா அல்லது வேறு யாரேனும் கணக்கில் பதிவிட்டாரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. ஆனால், அவர் காரை கொளுத்திவிட்டு நேராக கேமிராவை நோக்கி வருவதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
பல்வேறு பிரிவுகளின் வழக்குபதிந்து கைது செய்யப்பட்டுள்ள இந்திரஜித்துக்கு புதுவிதமான தண்டனை வழங்கப்படும் என ராஜ்கோட் பகுதி காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர்மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்ற தகவல் முழுமையாக வெளியிடப்படவில்லை.
மேலும், தீயிடப்பட்ட ஜீப் பல்வேறு மாற்றங்களைப் பெற்றதாக காட்சியளிக்கின்றது. அந்தவகையில், பெரியளவிலான சக்கரங்கள், கூடுதல் அணிகலன்கள் உள்ளிட்டவை காட்சியளிக்கின்றன. ஆகையால், இந்த ஜீப் சாலையில் செல்லும் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கின்றது.
இந்திரஜித் மேற்கொண்டிருக்கும் இச்செயலை பொது சாலைகளில் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சட்டத்திற்கு புரம்பானதாகும். இதுபோன்ற செயல் பல நேரங்களில் பெரும் ஆபத்தை விளைவிக்கலாம். ஆகையால், பொதுவெளியில் இத்தகைய செயலில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது.
அதேசமயம், இச்சம்பவத்தில் வேறெந்த வாகனத்திற்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை. ஆகையால், பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!