Just In
- 49 min ago ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- 2 hrs ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 7 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 7 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
Don't Miss!
- News சென்னையை நெருங்கும் குடிநீர் தட்டுப்பாடு? 5 ஏரிகளில் குறைந்த நீர்மட்டம்.. 2023யை விட மோசமான நிலைமை!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்தியாபோல் மோசமான மந்த நிலையில் சிக்கி தவிக்கும் சீனா.. இதற்கு காரணம் என்ன தெரிஞ்சா பதறிபோய்டுவீங்க
இந்தியாவை அடுத்து சீன வாகனத்துறையும் மிக மோசமான மந்தநிலையில் சிக்கி தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
உலகின் வாகனங்களுக்கான மிகப்பெரிய சந்தையாக இருந்து வந்த இந்தியா, கடந்த ஆண்டு மிகப்பெரிய விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்த வீழ்ச்சி இந்திய வாகன சந்தையின் வரலாற்றிலேயே இல்லாதளவிலான மிகப்பெரியாக சரிவாக சித்தரிக்கப்பட்டது.
இந்த மிகப்பெரிய வீழ்ச்சியில் இருந்து இந்தியாவின் மிகப்பெரிய ஜாம்பவான் நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள்கூட தப்பிக்கவில்லை.
இதனால், உற்பத்தியைக் குறைத்தல், தற்காலிகமாக தொழிற்சாலையை மூடுதல், நிரந்தரமில்லா பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்புதல் உள்ளிட்ட பலகட்ட நடவடிக்கையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபட்டன.
இதனால், பல லட்சம் பேர் வேலையை இழந்தனர். ஒரு சிலர் வாகன ஷோரூம்களை மூடிவிட்டு மாற்று தொழிலுக்கு விரைந்தனர். இதுபோன்ற பல்வேறு இக்கட்டான சூழ்நிலையை இந்திய வாகனத்துறைச் சந்தித்தது. இந்த மந்தநிலையை ஒரு சில நிறுவனங்கள் நடப்பாண்டிலும் சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், இந்திய வாகனத்துறை சந்தித்த இதே மாதிரியான வீழ்ச்சியை சீன வாகனத்துறையும் சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதற்கு உலக நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்தான் மூல காரணம் என கூறப்படுகின்றது.
கொரோனாவால் எப்படி வாகன சந்தை மந்த நிலையை அடையும் என்று தானே கேட்கிறீர்கள்... இதற்கான பதிலைதான் நாங்கள் உங்களுக்கு வழங்கவிருக்கும்.
உலக நாடுகள் அனைத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ், மிக எளிதில் சக மனிதர்களுக்கு பரவும் தன்மைக் கொண்டதாக உள்ளது. இதன்காரணமாகவே, இதன் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவின் வுஹான் நகரம் முழுமையாக அந்நாட்டில் இருந்து தனிமைப் படுத்தி, அடைக்கப்பட்டுள்ளது.
அந்நகரத்தில் வசிக்கும் பெரும்பாலான மனிதர்களை சீன அரசு வீட்டுடன் அடைத்து, சீல் வைத்திருக்கின்றது. கொரோனா வைரஸ் எளிதில் மற்றவர்களிடம் பரவாமல் இருப்பதற்கே இந்த கடுமையான நடவடிக்கையை சீனா கையாண்டு வருகின்றது.
தற்போதைக்கு, இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என கூறப்பட்டு வரும்வேலையில், ஒரு சில தனியார் அமைப்புகள் எச்ஐவி மற்றும் மற்ற நோய் தடுப்பு மருந்துகளை வைத்து கொரோனாவிற்கு மாற்று மருந்து தயாரித்திருப்பதாக ஆறுதல் வார்த்தை கூறி வருகின்றன.
இந்த நோய் மிக வேகமாக பரவி வருவதன் காரணத்தால் சீனாவின் குறிப்பிட்ட நகரங்களில் வசித்து வரும் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. சில நகரங்களில் பொது போக்குவரத்து பயன்படுத்தாமல் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வுஹான் மற்றும் ஷாங்காய் நகரங்களைக் மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை முழுமையாக நிறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், எம்ஜி போன்ற ஒரு சில நிறுவனங்களின் உற்பத்தி கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மேலும், வெவ்வேறு நாடுகளில் இயங்கும் அதன் உற்பத்தியாலைகளுக்கு தேவையான உபகரணங்கள் அனுப்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றது.
இந்நிலையிலேயே, கொரோனா வைரஸின் தாக்கத்தால் அந்நாட்டின் வாகனத்துறை 18 சதவீத விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம், இந்த விற்பனை வீழ்ச்சியை சீன வாகனத்துறை கடந்த 18 மாதங்களுக்கு மேலாக சந்தித்து வருவது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ச்சியாக, 19 வது மாதமாக கடந்த ஜனவரியிலும் இது விற்பனைச் சரிவைச் சந்தித்துள்ளது. ஆனால், இம்முறை கடந்த மாத வீழ்ச்சியைக் காட்டிலும் உச்சபட்சமாக 18 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால் அந்நாட்டில் இயங்கும் மிக முக்கியமான வாகன உற்பத்தி நிறுவனங்களான டாங்ஃபெங் மோட்டார் குழுமம் மற்றும் இதன் கூட்டணி உற்பத்தியாளரான ஹோண்டா மோட்டார்ஸ், ரெனால்ட் எஸ்ஏ மற்றும் பீஜோ உள்ளிட்ட நிறுவனங்கள் உற்பத்தியை கணிசமாக குறைத்திருக்கின்றன. இதில், எம்ஜி நிறுவனத்தின் தாய் நிறுவனமான செயிக் நிறுவனமும் அடங்கும்.
-
இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!