Just In
- 51 min ago ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- 2 hrs ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 7 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 7 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
Don't Miss!
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் மீண்டும் சோதனை ஓட்டம்...
மஹிந்திரா நிறுவனம் இரண்டாம் தலைமுறை எக்ஸ்யூவி500 மாடலை அடுத்த வருட துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கு முன்னதாக இந்த எஸ்யூவி கார் தொடர் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வகையில் தற்போது மீண்டும் இரண்டாம் தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடல் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்லேன் செய்தி தளம் வெளியிட்டுள்ள ஸ்பை படங்களில் இந்த கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது.
இருப்பினும் காரின் சில பாகங்கள் வெளிப்படையாக தெரிகின்றன. இதில் முக்கியமானதாக இரும்பு ரிம்கள் உள்ளன. இதனால் இந்த சோதனை எக்ஸ்யூவி500 மாடல் விலை குறைவான வேரியண்ட்டாக இருக்கலாம்.
இந்த இரண்டாம் தலைமுறை எஸ்யூவி மாடல் புத்தம் புதிய மோனோகோக் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதாக மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே தெளிவுப்படுத்தி இருந்தது. முதல் தலைமுறை எக்ஸ்யூவி500 மாடல் கடந்த 2011ல் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளிவந்தது.
அதன்பின் சுமார் 10 வருடங்களுக்கு பிறகு பெரிய அளவிலான இயந்திர மாற்றங்கள் இந்த எஸ்யூவி மாடலில் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி புதியதாக 2.0 லிட்டர் டீசல் என்ஜின் இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதே டீசல் என்ஜின் உடன் தான் மிக விரைவில் 2020 மஹிந்திரா தார் மாடலும் அறிமுகமாகவுள்ளது.
ஆனால் இந்த டீசல் என்ஜின் புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 மாடலில் வேறுப்பட்ட ட்யூனிங்கில் பொருத்தப்படவுள்ளது. அதாவது 170 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படலாம். தற்போதைய எக்ஸ்யூவி500 காரில் 2.2 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது.
அதிகப்பட்சமாக 155 பிஎச்பி மற்றும் 360 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் இந்த டீசல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாகவும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூடுதல் தேர்வாகவும் வழங்கப்பட்டு வருகின்றன.
இவற்றுடன் புதிய எக்ஸ்யூவி500 மாடலில் ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டமும் கூடுதல் தேர்வாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021மை மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடலுக்கு போட்டியாக டாடா கிராவிட்டாஸ், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் 7-இருக்கை ஹூண்டாய் க்ரெட்டா மாடல்களும் சந்தையில் களமிறங்க தயாராகி வருகின்றன.
-
இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
-
கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!