Just In
- 53 min ago ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- 2 hrs ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 7 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 8 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
Don't Miss!
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வாடிக்கையாளர், ஓட்டுனர் பாதுகாப்பிற்காக ரூ.500 கோடியை ஒதுக்கிய ஓலா டாக்சி!
ஒவ்வொரு பயணத்தையும் பாதுகாப்பாக மாற்றும் வகையில், கொரோனா தடுப்பு நடைமுறைகளுடன் கார்களை இயக்குவதற்காக ரூ.500 கோடியை ஒதுக்கி இருக்கிறது ஓலா டாக்சி நிறுவனம்.
வாடகை கார் மார்க்கெட்டில் ஓலா டாக்சி நிறுவனம் முதன்மை வகிக்கிறது. பெருநகரங்களின் போக்குவரத்து சேவையிலும் ஓலா டாக்சி தவிர்க்க முடியாத அங்கமாகி உள்ளது. இந்த நிலையில், கொரோனா பிரச்னை காரணமாக, நிறுத்தப்பட்டு இருந்த டாக்சி சேவையை படிப்படியாக இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
கொரோனா ஊரடங்கில் தளர்வு வழங்கப்பட்டுள்ள 200 நகரங்களில் மீண்டும் டாக்சி சேவையை துவங்கி இருக்கிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளிலும் ஓலா டாக்சி நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!
அதன்படி, வாடிக்கையாளர்களும், ஓட்டுனர்களும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை அமல்படுத்தப்பட உள்ளது. ரைடு சேஃப் இந்தியா என்ற பெயரிலான இந்த திட்டத்தின்படி, வாடிக்கையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சிகளில் இறங்கி உள்ளது.
இதற்காக, கார்களை 48 மணிநேரத்திற்கு ஒருமுறை கிருமிநீக்கம் செய்யும் நடைமுறை பின்பற்றப்பட உள்ளது. இதற்காக, நாடு முழுவதும் 500 கிருமி நீக்க மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. அனைத்து கார்களும் இந்த மையங்களின் வாயிலாக சுத்தப்படுத்தப்படும்.
காரின் கைப்பிடி, இருக்கைகள் உள்ளிட்ட இடங்களிலும் ரசாயனம் மூலமாக கிருமி நீக்க நடைமுறைகள் பின்பற்றப்படும். அதேபோன்று, ஓலா டாக்சி ஓட்டுனர்களுக்கும் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களை ஏற்றிச் செல்லும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளித்து, அதற்கு சான்றும் வழங்கி சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஓட்டுனர்களுக்கு தினசரி உடல்வெப்ப அளவு சோதிக்கும் நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும்.
பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுவதற்கு ஏற்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதோடு, புதிய மொபைல்போன் செயலியையும் ஓலா அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீட்டை ஓலா செய்ய இருக்கிறது.
-
இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
-
கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?