Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
4வது தலைமுறை ஸ்விஃப்ட் காரை உருவாக்கும் சுஸுகி... இந்திய சந்தைக்கு எப்போது வருகிறது தெரியுமா?
4வது தலைமுறை ஸ்விஃப்ட் காரின் அறிமுகம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் என்ற அந்தஸ்தை மாருதி சுஸுகி மிக நீண்ட காலமாக தன்வசம் வைத்துள்ளது. அந்நிறுவனத்தின் ஸ்விஃப்ட், அனைத்து வயது பிரிவினருக்கும் பிடித்தமான ஹேட்ச்பேக் காராக உள்ளது. சுமார் 15 ஆண்டுகளாக சந்தையில் இருந்து வரும் ஸ்விஃப்ட், பலமுறை மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் இருந்து வரும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின், மூன்றாவது தலைமுறை மாடல் ஆகும். கடந்த 2018ம் ஆண்டு இந்த மாடல் இந்திய சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. தனது செக்மெண்ட்டில், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஃபோர்டு ஃபிகோ உள்ளிட்ட கார்களுடன், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் போட்டியிட்டு வருகிறது.

மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது ஸ்விஃப்ட் காரை சிறிய அளவிலான காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்படி சோதனை செய்யப்படும்போது சில முறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது.

ஸ்விஃப்ட் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சுஸுகி நிறுவனம் அடுத்த தலைமுறை (நான்காவது தலைமுறை) ஸ்விஃப்ட் காரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய தலைமுறை ஸ்விஃப்ட் அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த தலைமுறை ஸ்விஃப்ட் காரை உருவாக்கும் பணிகளை, சுஸுகி நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டதாக பெஸ்ட்கார்வெப் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிளாட்பார்ம் அடிப்படையில், அடுத்த தலைமுறை ஸ்விஃப்ட் கட்டமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனேகமாக இந்த புதிய பிளாட்பார்மானது, ஹார்டெக்ட் பிளாட்பார்மின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போதைய தலைமுறை ஸ்விஃப்ட் கார், ஹார்டெக்ட் பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார், வரும் 2022ம் ஆண்டு ஜூலை மாதம் சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ஆனால் இந்திய சந்தையை பொறுத்தவரை நாம் 2023ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023ம் ஆண்டில்தான் இந்திய சந்தை புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை பெறும் என கூறப்படுகிறது. எனினும் தற்போதே புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார், இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், அனைத்து வயது பிரிவினரையும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கவர்ந்துள்ளது. ஸ்விஃப்ட் காரின் கவர்ச்சியான தோற்றம், குறைவான பராமரிப்பு செலவு மற்றும் சிறப்பான எரிபொருள் சிக்கனம் ஆகியவையே இதற்கு மிக முக்கியமான காரணங்களாக உள்ளன. இந்த சூழலில் வரவுள்ள ஸ்விஃப்ட் விற்பனையில் இன்னும் புதிய உச்சங்களை தொடலாம்.